காச்சலும் கொரோனாவும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் அதன் வலி. இது இப்போது பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு நல்லாகவே உறைத்திருக்கிறது. காலம் கடந்த ஞானம் என்றாலும் இப்பவாவது ஞானம் பிறந்தது நல்லதே. நாட்டு மக்களுடைய நலனை முன்நிறுத்தியே ‘லொக்டவுன்’யைத் தளர்த்துவது பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டும் என்றும் பொருளாதாரத்தையும் மக்கள் நலனையும் ஒப்பிட்டு முடிவு எடுக்கப்பது தவறானது என்றும் தற்போது கருத்து தெரிவித்து உள்ளார். இதனை முன்னரே உணர்ந்து இருந்தால் எத்தினையாயிரம் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்
நாட்டின் அரசியலில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டாலென்ன எதுவும் மாறாது என்று பீற்றிக்கொண்டிருக்கும் ஜென்மங்களுக்கு இப்போதாவது ஏதாவது உறைத்திருக்குமா?