நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரிஷாத் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு


நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகுமாறு பதியுதீனுக்கு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் முகமாகவே அவர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மன்னார் மஜிஸ்திரேட் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டும் வழக்கு ஒன்றை 7 மூத்த சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளதாக கூறப்படுகிறது.

அதேவேளை இந்த வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணிகளின் குடும்பத்தினருக்கு எந்த விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு ஏதாவது முறைப்பாடு கிடைத்தால் வழக்கு முடிவடையும் வரை அமைச்சர் விளக்கமறியலில் இருக்க நேரும் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்படுள்ளதாக அந்த வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. maina on July 27, 2012 9:54 am

    அப்படியென்றால் மன்னார் நீதிபதியும், மன்னார் ஆயரும், மன்னார் M.Pஅடைக்கலநாதனும் ஒன்றாக கோட்டில் கூட்டில் ஏற வேண்டி வரும்போலல்லவா தெரிகிறது. ஏனிந்த கொலைவெறி? பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கிடைத்தால் போதும்.


  2. ajeevan on July 27, 2012 12:07 pm

    மைனா ; முஸ்லிம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
    ஆனால் நீதிமன்றத்தையே தாக்குமளவுக்கு முஸ்லிம் மக்களை உசுப்பேத்தி அனுப்பியது தவறா? இல்லையா மைனா?


  3. mohamed Nisthar on July 27, 2012 1:18 pm

    அன்புள்ள அஜீவன்,
    “ஆனால் நீதிமன்றத்தையே தாக்குமளவுக்கு முஸ்லிம் மக்களை உசுப்பேத்தி அனுப்பியது தவறா? இல்லையா மைனா? என்ற உங்கள் கேள்வி, சாந்தனின் பல கேள்விகளை நினைவுக்கு கொண்டு வருகிறது. மைனாவின் ஆம், இல்லை என்ற பதிலிலா இப்படி ஒரு விடயம் நடந்திருந்தால் அதன் தவறு தவறின்மை தங்கியுள்ளது. தவறிழைத்தவர் தண்டனை பெறவேண்டியதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா.


  4. சாந்தன் on July 27, 2012 6:01 pm

    //…“ஆனால் நீதிமன்றத்தையே தாக்குமளவுக்கு முஸ்லிம் மக்களை உசுப்பேத்தி அனுப்பியது தவறா? இல்லையா மைனா?….//
    சிம்மிளான கேள்வி ! இதற்கு சிம்பிளாக ஆம்/இல்லை எனப்பதில் அளிக்கமுடியும். ஆனால் இவர் ஊர் உலகமெல்லாம் சுற்றிச் சுற்றி வருகிறார். வேறென்ன செய்ய முடியும்??


  5. சாந்தன் on July 27, 2012 6:14 pm

    //…தவறிழைத்தவர் தண்டனை பெறவேண்டியதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா….//

    இதனைப்போய் ஸ்ரீலங்காவில் ரோட்டில் நிற்பவனிடம் சொன்னானும் நம்பமாட்டான். பாதிக்கப்பட்டவனிடம் சொன்னால் அவன் என்ன சொல்லுவான் தெரியும் தானே?
    மனிதனின் தண்டனையைக்கூட தடுத்து நிறுத்தி தப்பலாம் கடவுளை யாரும் ஏய்க்க முடியாதல்லவா? என
    நீங்கள் சொன்னதை விட சுப்பரான மழுப்பல் பதில் இருக்கு. சொன்னால் ஆஹா என்னே கடவுள் பயன் உள்ள சிந்தனைவாதி என கொண்டாடுவார்கள் சகபாடிகள்.


  6. சாந்தன் on July 27, 2012 8:21 pm

    //…அப்படியென்றால் மன்னார் நீதிபதியும், மன்னார் ஆயரும், மன்னார் M.Pஅடைக்கலநாதனும் ஒன்றாக கோட்டில் கூட்டில் ஏற வேண்டி வரும்போலல்லவா தெரிகிறது. ஏனிந்த கொலைவெறி? பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கிடைத்தால் போதும்…..///

    இதிலென்ன கொலைவெறி கண்டீர்கள்?
    மேலும் மன்னார் நீதிபதியும், மன்னார் ஆயரும், மன்னார் M.Pஅடைக்கலநாதனும் ஒன்றாக கோட்டில் ஏற்றட்டுமே?
    அப்போதான் உண்மை வெளிவரும், இல்லையா? ஸ்ரீலங்காவில் உண்மை வெளிவரும் இடம் ஒன்றுமில்லை. பத்திரிகைகள் எழுதுவதில்லை, நீதிபதிக்கு பயம், பொலிசை கேட்கவே வேண்டாம், பாராளுமன்ற அங்கத்தவர் கொலைமுயற்சியில் சிங்கப்பூர் ஆசுப்பதிரியில ஒழிச்சு இருக்கிறார்….
    கோட்டுக்கு ஏறவேண்டி வருமாம்… அவ்வளவு துணிச்சல் இருந்தால் இவ்வளவு நாளும் கைதிகளாய் இருப்போரையும் ஏற்றவேண்டி வருமல்லவா? அப்ப நல்லதாய்ப் போச்சு!
    நாலுபேருக்கு நல்லது நடக்கவேணுமெண்டால் ஆயரையும் அடக்கலநாதனையும் கோட்டுக்கு ஏற்றுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன் ஏற்றுங்கள் கோட்டுக்கு!!
    இப்படித்தான் கோட்டுக்கு ஏற்றிய தங்கத்துரை கோட்டில சொன்ன வசனங்களை தினகரனும் டெயிலிநியூசும் இருட்டடிப்புச் செய்தன, மற்றச் சிங்களப் பேப்பருகளும் அப்படியே…. ஆயரைக் கோட்டுக்கு ஏற்றினால் அவர் சில விடயங்கலைச் சொல்லுவார்… இவ்வளவு காலமும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு ஒழிச்சு ஒழிச்சு சொன்னது, வத்திக்கானுக்கு சீல்பண்ணின என்வலப்பில அனுப்பின உண்மைகள் எல்லேம் சந்திக்கு வரும்…. மைனா கெஞ்சிக் கேட்கிரேன் ஏற்றுங்கள் கோட்டுக்கு…. அதேபோல 20-25 வருசமாய் கோடேற்றாமல் உள்ள கைதிகளையும் ஏற்றுங்கள்!!


  7. நந்தா on July 27, 2012 9:13 pm

    மன்னார் பாதிரியார் புலிப்பாதிரி என்பது பட்டவர்த்தனமான விஷயம். ஆயினும் இலங்கை அரசின் நீதி மன்றத்துக்கு கல்லெறிந்து தாக்குவது கேவலமான விஷயம். அதை அரசின் அமைச்சர் மெற்கொண்டது அதை விடக் கேவலம். றிஷாட் மந்திரி பதவியை துறந்து விட்டு தனது “ஜிகாத்”தை தொடரலாம்!


  8. Rohan on July 27, 2012 11:04 pm

    //தவறிழைத்தவர் தண்டனை பெறவேண்டியதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா.//

    அப்படியா?

    இராமாயணக் கதையில் வரும் ராம ராஜ்ஜியத்தில் தான் நாங்கள் வாழ்கிறோம் என்பது எனக்குத் தெரியாமற் போயிற்று.


  9. information on July 28, 2012 1:06 am

    ரிசாட் பதியுதீனும் புலிகளின் ஆத்ம சாந்தியும்…. நடராஜா குருபரன்

    வடக்கில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தப்படும் தடங்கல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் (27.07.12) எதிர்ப்பு பேரணியொன்று இடம் பெற்றது. சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் விடுத்திருந்த அழைப்பின் பேரில் உருவான இந்தப் பேரணி வேகன்ந்த பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்து கொம்பனி வீதி வழியாக, லேக்ஹவூஸ் சுற்றுவட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் செயலகத்திற்குச் செல்லமுயன்ற போது பொலீஸார் இரும்பு வேலிகளை இட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பதாகைகளில் கீழ்வரும் வாசகங்களைப் பொறித்திருந்தனர்.

    • புலிகளின் மறுபிறப்பை நிறுத்து!

    • மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமளிக்காதே!! முஸ்லிம்களை வாழவிடு,

    • எமது பூர்வீக மண்ணை மீட்டுத்தாருங்கள்,

    • மன்னார் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு புலிக் கூட்டு தமது கரங்களை நீட்டிவிட்டது.

    • எமது முஸ்லிம் தலைமைகளைப் பாதுகாக்க ஒன்றுபடுங்கள்,

    • வடக்கில் எமது வாழ்வுரிமையை ஜனாதிபதி அவர்களே உறுதிப்படுத்துங்கள்,

    மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்கெதிரான சாத்வீகப் போராட்டங்கள் மிகமிக அவசியமாகின்றன. பாதிக்கப்படும் மக்கள் அவ்வாறு போராட்டங்களில் ஈடுபடும் போது இத்தகைய போராட்டங்களை இன அடிப்படையில் பிரித்து நோக்குவது தவறானதாகும்.

    ஆனால் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான் குடியிலும் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தின் பின்னுள்ள அரசியலை நுணுக்கமாக ஆராயவேண்டியது அவசியமாகிறது. ஏனேனில் ஒரு பத்திரிகையாளனாக எனது பார்வையில் முஸ்லீம்கள் வடக்கு கிழக்கில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை அரசியல் வாதிகள் தமது சொந்த லாபங்களுக்காக பயன்படுத்துவதாகத் தெரிகிறது. முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் உண்மையான விருப்பம் இருக்குமென்றால் இந்தப்போராட்டங்கள் வேறு ஒருதளத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

    தமது பேரினவாத மற்றும் சுயலாப அரசியலுக்காக அரைநூற்றாண்டுக்கு மேல் இனங்களுக்கிடையில் பகையுணர்வை எண்ணை ஊற்றி எரியவிட்டு அதில் குளிர்காயும் பிற்போக்குச் சிங்கள பெரும் தேசிய அரசியல்வாதிகளுடன் ஒட்டிக்கொண்டு, அரசியலில் சுகபோகங்களை அனுபவிக்கும் அமைச்சர் ரிஸாத்பதியுதீனும் அவர் போன்றே அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு சலுகை காணும் ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகளும் முஸ்லீம்களின் உண்மையான பிரச்சனைகளை இட்டு எந்த அக்கறையுமற்றிருக்கிறார்கள்.

    மன்னாரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவற்றிருக்கிறது. இங்கே இந்தப்பிரச்சனையை புறமிருந்து பார்ப்பவர்களுக்கு பின்வரும் கேள்விகள் எழுகின்றன.

    • மன்னாரில் முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள்?

    • எந்த வகையில் தடையாக இருக்கிறார்கள்?

    • முஸ்லீம் மக்களை அவர்கள் பூர்வீகமாக வெளியேற்றப்படுவதற்கு முன் கடைசியாக வாழந்த சொந்த இடத்திலா அல்லது அரசாங்கக் காணிகளிலா அல்லது தமிழ் மக்களின் காணிகளிலா அமைச்சர் குடியேற்ற முனைகிறார்?

    • மீன்பிடி உள்ளிட்ட அனைத்து தொழில் வாய்ப்புக்களும் பொதுவான வாழ்வாதாரங்களும் வளங்களும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே உரிய முறையில் பங்கிடப்படுகிறதா?

    போன்ற கேள்விகள் எழுகின்றன.

    முஸ்லீம்களின் வாழ்வுரிமையும் அவர்களின் பூர்வீகமான வாழ்விடங்களும் யாராலும் பறிக்கப்படக் கூடாதவை. இது குறித்து விவாதத்திற்கே இடமில்லை.

    ஆனால் இலங்கையில் யாருக்கு தும்மல் வந்தாலும் அதற்கு புலிகள் தான் காரணம் எனக்கூறும் அரசியலை புலிகள் இல்லாது போய் மூன்று வருடங்களின் பின் எடுத்து வந்து முஸ்ஸிம் அரசியல்வாதிகளும் கடை விரிப்பதுதான் கவலை தருவது. அதிலும் முஸ்லீம் தமிழ் மக்கள் ஒற்றுமை மிகவும் தேவைப்படுகிற ஒரு கணத்தில் இல்லாத புலிப்பூச்சாண்டி காட்டும் அரசியலை செய்வதன் நோக்கம் தான் என்ன?.

    நீதிபதி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டித் தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லியதால் ஏற்பட்ட விளைவுகளால் தனது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்கு கேள்வி எழுகிற போது தன்னைப் பாதுகாப்பதற்காக முஸ்லீம் மக்களின் பொதுவான பிரச்சனைகளுடன் அதனை முடிச்சு போடுவதுடன் அதற்குள் புலிகளையும் இழுக்கும் கழிசடை அரசியலை அமைச்சர் ரிட்சட் பதியுதீன் செய்வது ஒன்றும் உலக அதிசயமல்ல.

    மக்களை போராட்டத் தூண்ட முதல் புலிகளின் மறுபிறப்பு யார் என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய கடமை அமைச்சருக்குள்ளது.

    ரிட்சட் பதியுதீனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை முற்றிலும் சட்டம் மற்றும் நீதி சார்ந்த பிரச்சனையாகவே உள்ளது. உண்மையிலும் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நீதிபதியை எச்சரித்தமை குறித்து இப்போ மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி நேரில் ஆஜராகி அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்தப்பிரச்சனையைச் சட்டரீதியாகக் கையாள்வதை விடுத்து புலிப்பூச்சாண்டி காட்டுவது மலின அரசியலாக புலப்படவில்லையா?

    அமைச்சரின் நடவடிக்கை தவறானது எனத் தெரிவித்தால் தெரிவிப்பவர்கள் புலிகளாகிவிடுவார்கள என்றால்….

    நானே ஒரு புலிப்பட்டியலைக் கீழே தயாரித்துத் தருகிறேன்.

    நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக விஜயதாஸ ராஜபக்ஸ தலைமையிலான சட்டத்தரணிகள் சங்கமும், நீதிபதிகளின் சங்கமும் மற்றும் நாட்டின் சட்டத்துறை, நீதித் துறை சார்ந்த அனைவரும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தனர்… இவர்கள் புலிகள்…

    காலியில் உள்ள சட்டத்தரணிகள் சிலரும் கொழும்பில் உள்ள சட்டத்தரணிகள் சிலரும் மன்னாரில் உள்ள சட்டத்தரணிகள் அமைப்பும் இணைந்தே மேன்முறையீட்டு நீதிமன்றில் அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன…. இவர்கள் புலிகள்.

    நீதிமன்றத்தை நீதித்துறையை நீதிபதியை அச்சுறுத்தியமை குறித்து நீதி அமைச்சர் என்ற வகையில் கவலையடைவதாக அமைச்சர் றவூவ் ஹக்கீம் கூறினாரே அவருக்கு முன்பு புலிகளுடன் ஒப்பந்தம் செய்த காலத்தில் புலிகள் நீண்ட காலத்தின் பின் தொழிற்படக்கூடிய வசிய மருந்து எதேனும் கொடுத்திருப்பார்களோ?…

    நீதித்துறையை அவமதித்தமை குறித்து அமைச்சரவையில் உள்ள அமைச்சரின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறித்து கவலை கொள்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறாரே அவருக்கு முள்ளிவாய்க்காலில் கோரமாகக் கொல்லப்பட்ட புலிகளின் ஆவியால் சிலவேளையால் புத்தி பேதலித்து விட்டதோ…

    மன்னார் நீதிபதி புலிகளின் மறுபிறப்பாக உருவெடுத்து பொய் சொல்கிறார் என்றால், மன்னார் நீதிமன்றத்தைத் தாக்கி அதனை சேதப்படுத்தியமை தொடர்பான வீடியோக் காட்சிகளை செய்தியாக ஒளிப்படங்களாக, வெளியிட்ட முஸ்லீம் ஊடகவியலாளர்களை புலிகளின் முன்னாள்த் தளபதிகளென்பதா?

    மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமூகமளித்து உங்களிடமுள்ள ஆதாரங்களைச் சமர்ப்பித்து மன்னார் நீதிபதியினதும் அவர் சார்ந்தவர்களினதும் குற்றச்சாட்டுகள் பிழையானவை என்றும் அவர்கள் புலிகளே என்றும் நிரூபியுங்கள் மறுகணமே மன்னார் நீதிபதியை பூசாவுக்கு அனுப்பி அதன்பின் சமயம் வரும் போது அவரும் நிமலரூபனிடம் அனுப்பப்படுவார்…

    அரை நூற்றாண்டுக்கு மேலாக கொழுந்து விட்டு எரிந்த சிங்கள, தமிழ் முஸ்லீம் இனவாதங்கள் குறித்தும் பிற்போக்கான குறுகிய தேசியவாதங்கள் மற்றும் இவற்றிடையே நிலவிய முரண்பாடுகள் குறித்தும் எல்லாத்தரப்பிலும் உள்ள முற்போக்குசக்திகள் இப்போது மீளாய்வு செய்யத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் சுயவிமர்சனங்கள் குறித்தும் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ஆரோக்கியமான முறையில் சிந்திக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் புலிப்பூச்சாண்டி காட்டி குட்டையை இன்னமும் குழப்பும் மூன்றாம் தர அரசியலை செய்ய வேண்டாம் .

    உங்களது சொந்த அரசியல் இருப்புக்கு ஆபத்து ஏற்படுகின்ற போது? சுகபோகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற போது? தேர்தல்கள் வரும் போது வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்காக இனங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்தும் நாச அரசியலைச் செய்ய வேண்டாம்.

    உண்மையிலும் உங்களுக்கு முஸ்லீம்களின் நலன்கள் முக்கியமென்றால் வடக்கு கிழக்கில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளைச் செய்யக்கூடிய ஒரு சுயாதீனமான அரச மற்றும் கட்சி சார்பற்ற குழுவை உருவாக்கவும் அதற்கு தங்குதடையற்ற விசாரிப்பு மற்றும் அறிதல் சுதந்திரத்தை வழங்கவுமான ஒரு ஆக்க பூர்வமான முனைப்பை எடுங்கள்

    வடக்கு கிழக்கைப் பிடித்திருக்கும் எல்லாப்பேய்களையும் பிசாசுகளையும் இவர்கள் இனம்கண்டு பகிரங்கப்படுத்தட்டும். ஒரு ஊடகவியலாளன் என்ற வகையிலும் உங்களிடமும் பல செவ்விகளை சூரியன் எஃப் எம் இன் விழுதுகள் நிகழ்ச்சிக்காக எடுத்திருக்கிறேன் என்ற வகையிலும் நேரிலும் உங்களுடன் பேசியிருக்கிறேன் என்ற வகையிலும் இந்தச் சவாலை நான் உங்களிடம் விடுக்கிறேன்.

    முஸ்லீகளின் இருப்புக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் சிங்களப் பேரினவாதிகள் சவால் விடுக்கும்போது பெட்டிப்பாம்பாக அடங்கிக்கிடக்கிறீர்கள். உங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இழக்கத் துணிவில்லாமல் அடங்கிப்போகிறீர்களே அதற்கான விளக்கத்தை உங்கள் உண்மை முகம் தெரியாமல் அந்தரிக்கும் என் சகோதர முஸ்லீம் சமூகத்திற்கு வழங்கத் துணியுங்கள் நான் உங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன் .

    தம்புள்ளவில் அரை நுற்றாண்டாக முஸ்லீம்கள் ஐந்து நேரத் தொழுகையைச் செய்து வந்த பள்ளி வாசலை தம்புள்ளவில் உள்ள அரசாங்கசார்பு அரசியல்வாதிகளும் அரசாங்கசார்பு பௌத்த பிக்குகளும் தாக்கி அழிக்க முற்பட்டபோது நீங்கள் ஊர்வலம் போனமாதிரித் தெரியவில்லையே? (நான் அரசுடன் இணைந்து நின்று மக்களைத்தின்னும் முஸ்லீம் அரசியல்வாதிகளைக் கேட்கிறேன்) இன்றுவரையும் அப்பள்ளிவாசலைத் திறப்பது குறித்து உரிய தீர்வுகள் வழங்கப்படாமை குறித்து நாடு தழுவிய மக்கள் போராட்டங்களை முஸ்லிம் அமைச்சர்களோ உள்ளுராட்சி மாகாண சபைகளின் உறுப்பினர்களோ தொடர்ச்சியாக முன்னெடுத்ததாக தெரியவில்லையே.

    அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள ஹெல உறுமய மற்றும் கடும் போக்கு பௌத்த பேரினவாதக் கட்சிகள் முஸ்லீம்களுக்கு எதிராக வெளிப்படையாக விடுகின்ற அறிக்கைகளைக் கண்டிக்கவோ முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்க்கவோ திராணியற்று நிற்கிறீர்களே.

    தீகவாபி பிரதேசம் உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம்களின் வாழ்விடங்கள் மற்றும் வயல்நிலங்கள் பலவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் சுற்றாடல் சூழல் அமைச்சராகவிருந்த சம்பிக்க றணவக்க வெளிப்படையாக ஈடுபட்டபோது ஏன் ஊர்வலம் போகவில்லை நீங்கள்!.

    அராபிய தேசங்களில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என உங்களைக் கூறிய ஹெல உறுமைய பங்கெடுக்கும் அரசாங்கத்தில் நீங்கள் வீற்றிருக்கும் கொலுவென்ன?

    நீங்கள் உண்மையிலும் முஸ்லீம் மக்களின் நலனுக்காகப் போராடுகிறீர்கள் என்றால் இங்கே ஆரம்பிக்கவேண்டும் உங்கள் போராட்டத்தை.

    முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர், எம்.ஆர்.எம். பைசால் அண்மையில் அதன் சார்பில் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

    அதன் சாரம் இதுதான்:

    தொடர்ந்தும் முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தம்புள்ளையில் நடந்தது போலவே தாம்பகாம பிரதேசத்திலும் நடந்து உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலிசார் தமது கடமையை செய்யாது பேரினவாதத்திற்கு துணைபோனதுடன் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளனர். இந்த நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள்மீது தாக்குதல் நடத்துவது அவர்களது மதச் சுதந்திரத்தை பறிப்பதும் பேரனவாத நிகழ்ச்சி நிரலில் கட்டாயமானது ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த நாட்டில் ஜனநாயக சுதந்திரத்தை மதச் சுதந்திரத்தை மதிக்கின்ற அனைவரும் ஓரணியில் திரண்டு மிலேச்சத்தனமான பேரினவாத சக்திகளுக்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும.; நாம் பிரிந்து நிற்பதால் பேரினவாதிகளே பலம் பெறுவார்கள்.

    முஸ்லிம்களது புனித நாளாக கருதப்படும் இந் நோன்பு காலத்தில் மதத் தலத்திற்கு பிரவேசித்து வேறொரு மத அனுஸ்டானங்கள் நடத்தி இருப்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இப்பாவச் செயலை புரிந்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

    உலகத்தில் இதுபோன்ற நிந்தமான செயற்பாடுகளை வேறு எங்காவது நடந்து இருப்பதை நாம் அறியவில்லை. எனவே மத சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய மோசமான செயற்பாட்டிற்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரளுமாறு அறைகூவல் விடுக்கிறோம்

    சரி என்னுடைய வேண்டுகோளை விடுங்கள். திரு பைசல் அவர்களின் அறைகூவலுக்காவது செவி கொடுங்களேன்.

    நீங்கள் முஸ்லீம் மக்களின் உண்மையான பிரசனைகளுக்குக்காகப் போராடும் போது வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும் அவர்களின் சட்ட பூர்வமான பூர்வீக நிலங்களையும் யாராவது ஒரு தமிழர் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மறுப்பார்களாக இருந்தால் அவரை அவர்களை, ஒரு பத்திரிகையாளனாக நான் அம்பலப்படுத்தத்தயாராக இருக்கிறேன்.

    மற்றப்படிக்கு புலிகளின் ஆன்மாவைச் சாந்தியடைய விட்டுவிடுங்கள்.
    உலகத்தில் இதுபோன்ற நிந்தமான செயற்பாடுகளை வேறு எங்காவது நடந்து இருப்பதை நாம் அறியவில்லை. எனவே மத சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய மோசமான செயற்பாட்டிற்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரளுமாறு அறைகூவல் விடுக்கிறோம்

    சரி என்னுடைய வேண்டுகோளை விடுங்கள். திரு பைசல் அவர்களின் அறைகூவலுக்காவது செவி கொடுங்களேன்.

    நீங்கள் முஸ்லீம் மக்களின் உண்மையான பிரசனைகளுக்குக்காகப் போராடும் போது வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும் அவர்களின் சட்ட பூர்வமான பூர்வீக நிலங்களையும் யாராவது ஒரு தமிழர் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மறுப்பார்களாக இருந்தால் அவரை அவர்களை, ஒரு பத்திரிகையாளனாக நான் அம்பலப்படுத்தத்தயாராக இருக்கிறேன்.

    மற்றப்படிக்கு புலிகளின் ஆன்மாவைச் சாந்தியடைய விட்டுவிடுங்கள்.


  10. Rohan on July 28, 2012 3:57 am

    //முஸ்லீகளின் இருப்புக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் சிங்களப் பேரினவாதிகள் சவால் விடுக்கும்போது பெட்டிப்பாம்பாக …..

    தம்புள்ளவில் அரை நுற்றாண்டாக முஸ்லீம்கள் ஐந்து நேரத் தொழுகையைச் செய்து வந்த பள்ளி வாசலை ……

    ஹெல உறுமய மற்றும் கடும் போக்கு பௌத்த பேரினவாதக் கட்சிகள் முஸ்லீம்களுக்கு எதிராக வெளிப்படையாக விடுகின்ற அறிக்கைகளைக் கண்டிக்கவோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்க்கவோ ….

    தீகவாபி பிரதேசம் உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம்களின் வாழ்விடங்கள் மற்றும் வயல்நிலங்கள் பலவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ……

    அராபிய தேசங்களில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என உங்களைக் கூறிய ஹெல உறுமைய …..

    முஸ்லிம்களது புனித நாளாக கருதப்படும் இந் நோன்பு காலத்தில் மதத் தலத்திற்கு பிரவேசித்து வேறொரு மத அனுஸ்டானங்கள் நடத்தி இருப்பது ….//

    ஐயையோ குருபரன் – சோற்றுக்கு மாரடிப்பது என்று ஊரில் சொல்வார்களே, கேள்விப்பட்டதில்லையா?

    சொல்லப்போனால், ‘எங்கள் பிரச்சனைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம்’ என்று சொல்வதற்கு அமர்த்தப்பட்டிருப்பவர்கள் வந்து கடிப்பார்கள்.

    ‘நம்மாளுகள் பார்த்துக் கொள்வார்கள் – நல்ல தீர்வும் பெற்றுத் தீருவார்கள்’ என்று ஒரு வசனம் எடுத்து விடுவார்கள், பாருங்கள், சும்மா உலகமே அதிரும்!!


  11. ajeevan on July 28, 2012 10:34 am

    நேற்றுவரை
    மக்கள் , நீதிமன்றங்களுக்கு நீதி கேட்டு போனார்கள்
    இன்று
    நீதிபதிகள் , மக்களிடம் நீதி கேட்டுப் போகிறார்கள்

    இனி கட்டப் பஞ்சாயத்து முறையா?


  12. mohamed Nisthar on July 28, 2012 10:52 am

    அன்புள்ள றோகன்,
    “//தவறிழைத்தவர் தண்டனை பெறவேண்டியதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா.// இது நான்.

    அப்படியா?
    இராமாயணக் கதையில் வரும் ராம ராஜ்ஜியத்தில் தான் நாங்கள் வாழ்கிறோம் என்பது எனக்குத் தெரியாமற் போயிற்று.// இது நீங்கள்.

    என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? பிரச்சினை ஒன்று நடந்துள்ளது. பத்திரிகைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான விசடயங்களை வெளியிடுகின்றன. இதில் அதிகம்பேர் வெளிநாட்டில் இருந்து கொண்டு, விடயங்களின் நேரடி சாட்சிகள் போல் படு சுட்டியாக பின்னூட்டம் இடுகிறார்கள்.

    நடக்கும் எந்த சம்பவத்துக்குமே நான் நேரடி சாட்சி இல்லை என்பதால், விடயங்கள் சரியாக வெளிவரும் வரை பொறுத்திருங்கள் என்றால் அதுவெல்லாம் முடியாது என்கிறார்கள். குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் அவன் தண்டனை பெற வேண்டும் என்றால் அது இலங்கையில் நடக்கிற காரியமா என்கிறார்கள். குற்றம் சுமத்தபட்ட அமைச்சரை நீதீமன்ற அழைப்பாணையின் மூலம் நீதிமன்றம் வரவழைத்துள்ளது. ஆகவே சட்ட முறைமை சரியான திசையை நோக்கித்தானே போகிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபரதாதி என்பதும் சட்ட ஏற்பாடு. ஆகவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுமை காககத்தானே வேண்டும்.

    ஏதோ ராமராஜ்யம் அது இது வென்று கதைக்கும் றோகான் கூடவே சாந்தன் எதை எதிர்பாக்கின்றீர்கள்? புலிகளின் கங்காருநீதிமன்றம் போல், இவர் குற்றம் சாட்டப்பட்டாரா? சுட்டுத்தள்ளு என்ற மாதிரி அவசரப்படுகிறீர்கள். ஏதோ றவூப் ஹகீம் நீதிஅமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் அல்லது அடைக்கலநாதனே நீதியமைச்சராக இருந்திருந்தால் இன்னேரம் ராமராஜ்யத்தில் இருந்ததான (கற்பனை) சூழ்நிலையில் இதுவரை நீதி நிலைநாட்டப் பட்டிருக்கும் என்று கூற வருகிறீர்களா?


  13. mohamed Nisthar on July 28, 2012 12:08 pm

    அன்புள்ள றோகன்,
    மீண்டும் சொல்கிறேன், “நம்மாளுங்க பாத்துகிடுவாங்க,……

    உலகத தமிழர் பேரவை தலைவர் இமானுவேல் அடிகளார் தன் சீடனான மன்னார் ஆயருடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்து சரியான(?) அறிக்கையையாவது விட்டிருக்கலாம். இதை விடுத்து தம்புள்ளை பள்ளிவாசல் விடயமான அறபு மொழியில் அறிக்கை விட்டார்களாம், அதாவது சோற்றுக்கு மாரடிக்கும் விடயம் போன்றது. அதே போலதான் குருபரனின் வேண்டுகோளும் அமைவதை சரியாக சோற்றுக்கான மரடிப்பாக கண்டுளீர்கள்.

    சிங்கள அரசாங்கம் இத்தனை கொடுமைகளையும் முஸ்லீம்களுக்கு செய்வதாக பட்டியலிட்ட அதேநேரம் அவைகளை தட்டிக் கேட்காமல் இருந்த பச்சோந்தி முஸ்லிம் கட்டிகள் தமிழர் தரப்பு செய்த (தாக சொல்லப்படும்) அடாவடித்தங்களை (அப்படி இருந்தால்) ஏன் தட்டிக் கேட்க முற்படுகிறீர்கள் என்று கேட்பதுபோல் உள்ளது.

    இங்கே அமைச்சருக்கு வக்காலத்து வாங்குவதாக கற்பனை பண்ண தேவையில்லை. புத்தள கொலை வழக் கொன்றில் அமைச்சரின் பங்கு இருப்பதாகவும் அதற்காக அவர் சட்டத்தின் முன் வந்து தன் நிலைபாட்டை தெரிக்கவேண்டும் என்ற புத்தளம் மக்களின் கோரிக்கையோடு நான் உடன்படுகிறேன்.


  14. Rohan on July 28, 2012 1:29 pm

    //அன்புள்ள றோகன்,
    “//தவறிழைத்தவர் தண்டனை பெறவேண்டியதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா.// இது நான்.

    அப்படியா?
    இராமாயணக் கதையில் வரும் ராம ராஜ்ஜியத்தில் தான் நாங்கள் வாழ்கிறோம் என்பது எனக்குத் தெரியாமற் போயிற்று.// இது நீங்கள்.

    என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? பிரச்சினை ஒன்று நடந்துள்ளது. பத்திரிகைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான விசடயங்களை வெளியிடுகின்றன. நடக்கும் எந்த சம்பவத்துக்குமே நான் நேரடி சாட்சி இல்லை என்பதால், விடயங்கள் சரியாக வெளிவரும் வரை பொறுத்திருங்கள் என்றால் அதுவெல்லாம் முடியாது என்கிறார்கள்.//

    துமிந்த சில்வா…?


  15. சாந்தன் on July 28, 2012 4:15 pm

    //..ஏதோ றவூப் ஹகீம் நீதிஅமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் அல்லது அடைக்கலநாதனே நீதியமைச்சராக இருந்திருந்தால் இன்னேரம் ராமராஜ்யத்தில் இருந்ததான (கற்பனை) சூழ்நிலையில் இதுவரை நீதி நிலைநாட்டப் பட்டிருக்கும் என்று கூற வருகிறீர்களா?….///

    அதானே? புலி என்ன திறமோ ?
    புலிக்காய்ச்சலில் முடக்குவாத மருந்தை குடித்தவர்கள் இப்போது என்னதான் செய்ய சொல்லுகிறீர்கள்? அவையள் மட்டும் என திறமோ எனக் கதை விடுவது வேடிக்கையிலும் வேடிக்கை?
    முன்னர் அரசு, சட்டம், ஒழுங்கு நீதி எனச் சொன்னவர்கள் புலிகளை கங்காரு கோட் எனச் சொன்னவர்கள் ஒரு அரசாங்க நீதிமன்றின் மீது கல்வீச்சு நடத்தீருக்கும்போது, நீதிபதியை மாற்றச்சொல்லி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தபோதும், நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த போதும், ஊரையே எரிப்போம் எனச் சொன்ன போதும்….. என்னெ செய்யச் சொல்கிறீர்கள் என கேட்கிறார்கள். கங்காருநீதி மன்றம் என்பதை அங்குபோய் உட்கார்ந்து பார்த்தீர்களா நிஸ்தார்? மற்றவனை என்ன அடைமொழி எல்லாம் சொல்லி அழைக்கிறீர்கள் ஆனால் அரசின் ஓட்டை தெரியும் போது……

    அதுமட்டுமல்ல என்ன பொறுமை காக்கட்டாம்…
    நிஸ்தார் பின்னூட்ட இடுக்கைகளின் ரைம்ஸ்ராம் பார்த்தீர்களா?
    அதிரடித் தாக்குதல் நடத்தியது யார்? தொடர்பற்ற பின்னூட்டம் வரும்வரை காத்திருந்து சொல்லிவைத்தது போல தாக்குதல் நடத்தியது யார்?
    பதிலைச் சொல்லுங்கள் முதலில்… அட்வைஸ் பின்னர் அள்ளி வழங்கலாம்?
    மற்றவனைச் சொல்லும்போது வக்கணையாய் இருக்கும்..ஆனால்……


  16. சாந்தன் on July 28, 2012 4:22 pm

    //..என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? பிரச்சினை ஒன்று நடந்துள்ளது. பத்திரிகைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான விசடயங்களை வெளியிடுகின்றன….//

    அப்போ ஏன் நான் கருத்து எழுதாத ஒரு இழைக்கு வந்து நான் சிங்களவன் மோடன், பிணந்தின்னி சொன்னேன் எனச் சொன்னீர்கள். மேலும் தொடர்பற்ற பின்னூட்டம் ஒன்றை அஜீவன் இடப்போக அதனை ‘கிடைச்சுது ஒழுங்கை வெட்டுவோம் கிடாயை’ போல வந்து சாந்தனுக்கு சூடேறப்போகுது… அதிரடித் தாக்குதல் நடத்தப் போகிறார் என கருத்தெழுதினீர்கள்?

    “… பிரச்சினை ஒன்று நடந்துள்ளது. பத்திரிகைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான விசடயங்களை வெளியிடுகின்றன…” என இப்போ தெரிவது அப்போ தெரியவில்லையா? விடயங்கள் சரியாக வெளிவரும் வரை பொறுத்திருக்கட்டாம். அதைச் செய்திருக்க வேண்டியவர் நீங்கள்.
    சொல்லப்போனால் அதனைச் செய்தவன் நான்.
    அப்படி பொறுமைகாக்காமல் மூக்கை நுளைத்துவிட்டு …….
    இப்ப என்னடாவெண்டால் அட்வைசை அள்ளி தெளிக்கிறார்….
    பொறுமை காக்காதவர் நீங்கள். நான் இல்லை…இல்லை…இல்லை!!!


  17. Ajith on July 28, 2012 5:24 pm

    தவறிழைத்தவர் தண்டனை பெறவேண்டியதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா///
    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது தீர விசாரித்து அறிவதே உண்மை என்பது நாம் கற்று அறிந்த விடயம். இந்த விடயத்தில் இலங்கையில் எது பொய் எது உண்மை என தீர்மானிப்பது நீதிமன்றம் அல்ல. இந்த முஸ்லிம் அமைச்சர் அல்ல நீதிபதியை அவமதித்த முதல்வர். அமைச்சர் டக்லஸ் தேவனாந்தாவின் EPDP செயலர் ஒருவர் சாவகச்சேரி மாணவனை படுகொலை செய்து புதைத்த வழக்கில் விசாரித்த நீதிபதியையே இடமாற்றம் செய்யும் அதிகாரம் எங்கே உள்ளது.
    இந்த அரசின் அங்கமான இருவர் துப்பாக்கி சண்டை இட்டு ஒருவர் இறந்ததும் மற்றவரை இந்த நாட்டை விட்டு சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து இப்போது அந்த நபருக்கு நடந்த சம்பவங்களே இப்போது எதுவுமே தெரியாது என்று குற்ற புலன் ஆய்வு சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது. இதுபோல் தான் இந்த அமைச்சர் விடயமும் விசாரணை என்று ஆரம்பித்து நீதிபதியே தான் கூறியது முழுவதும் பொய் என்று வழக்கை வாபஸ் பெறப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இதற்கு கொஞ்ச காலம் பொறுத்து இருக்க வேண்டும் தானே.


  18. சாந்தன் on July 28, 2012 6:23 pm

    //..இனி கட்டப் பஞ்சாயத்து முறையா?….//

    சக இனத்துக்கு உரிமைகள் வழங்காத நாடுகள் ‘கட்டப்பஞ்சாயத்து’ நாடுகளாக (failed state) போய்விடுவது ஒன்றும் புதிதல்லவே!!


  19. சாந்தன் on July 28, 2012 8:42 pm

    //…அந்த நபருக்கு நடந்த சம்பவங்களே இப்போது எதுவுமே தெரியாது என்று குற்ற புலன் ஆய்வு சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது…..//
    அதவிடுங்க… வடமராட்சியில் நடந்த எதிர்ர்பு ஆர்ப்பாட்டத்தில் இருவர் மோட்டார் சைக்கிளில் புலிக்கொடியை ஆட்டியபடி இரண்டு மூன்றுமுறை வலம் வருகிறார்கள். பொலிசுக்காரர் பார்த்துக்கொண்டு நிக்கிறார். (படத்தை வேற போட்டிருக்கிறாங்கள்) ஆனால் பொலிஸ் இன்ஸ்பெக்ரர் சொல்லுறார் ‘ஆராவது மோட்டார் சைக்கிளின் நம்மப் பிளேற்ரைச் சொன்னால் பிடிச்சுப்போடுவம்’ என்று! நீங்க போய் சிங்கப்பூரில இருக்கிரவருக்கு ஞாபக மறதி… புலனாய்வு… அது இது எண்டு சொல்லிக்கொண்டு வாறியள்!!

    //.. நீதிபதியே தான் கூறியது முழுவதும் பொய் என்று வழக்கை வாபஸ் பெறப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இதற்கு கொஞ்ச காலம் பொறுத்து இருக்க வேண்டும் தானே…..///

    இப்படித்தான் ஐ.நா சபையில் போய் காணாமல் போனவர் வெளிநாட்டில அசைலம் அடிச்சுப்போட்டார், ஆதாரமில்லாமல் பம்மாத்துக்கு நான் சொல்லேல்ல… என்னட்டை ஆதாரம் இருக்கு எண்டு சொன்னார் ஸ்ரீலங்காவின் முதன்மை சட்டவாதி. ஊருக்குத்திரும்பி வந்து கோட்டுக்கு வரச்சொல்லிக் கேட்டபோது சாக்குப்போக்குச் சொல்லி பார்த்தார் சரிவரேல்ல அப்ப்டியே கவிண்டு எனக்குத் தெரியாது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் எண்டு சொன்னார்.
    திருமதி பிரகீத்துக்கு பொறுமை இல்லை கொண்டுவா ஆதாரம் எண்டு அவசரப்பட்டார்…. இப்ப கேஸ் குளோஸ்!!


  20. Rohan on July 28, 2012 9:30 pm

    //உலகத தமிழர் பேரவை தலைவர் இமானுவேல் அடிகளார் தன் சீடனான மன்னார் ஆயருடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்து சரியான(?) அறிக்கையையாவது விட்டிருக்கலாம். இதை விடுத்து தம்புள்ளை பள்ளிவாசல் விடயமான அறபு மொழியில் அறிக்கை விட்டார்களாம், அதாவது சோற்றுக்கு மாரடிக்கும் விடயம் போன்றது. //

    ஐயையோ… அரபு மொழி ஏதோ தனிப்பட்ட நம்மாளுகளுக்கு மட்டும் தான் சொந்தமோ. அதனால் தான் இலங்கையின் அடாவடிகளுக்கு எதிராக நாடுகள் திரண்ட போது இதே அடாவடி றிஷாத் பதுர்தீன் இலங்கையில் உள்ள மெளலவிகளைக் கூட்டிக்கொண்டு ஜெனீவா போனார் – இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு அரபு மொழியில் கதை விடுவதற்கு. அப்போதும் றிஷாத் பதுர்தீன் நம்மாளுங்க பாத்துக்கிடுவாங்க என்று தான் கோத்தவுக்குச் சொல்லியிருப்பார்.

    கொடுத்த பணத்தில் வாங்கிச் சாப்பிட்டு விட்டு அல்லது சாப்பிடுவதற்காக கொடுத்தவன் சொன்னது எல்லாம் செய்வது சோற்றுக்கு மாரடித்தல். அரபு மொழியில் அறிக்கை விடுதல் சோற்றுக்கு மாரடித்தல் அல்ல. அது சாரைப் பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியதாக வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை.


  21. Rohan on July 28, 2012 10:55 pm

    //இங்கே அமைச்சருக்கு வக்காலத்து வாங்குவதாக கற்பனை பண்ண தேவையில்லை. புத்தள கொலை வழக் கொன்றில் அமைச்சரின் பங்கு இருப்பதாகவும் அதற்காக அவர் சட்டத்தின் முன் வந்து தன் நிலைபாட்டை தெரிக்கவேண்டும் என்ற புத்தளம் மக்களின் கோரிக்கையோடு நான் உடன்படுகிறேன்.//

    “தவறிழைத்தவர் தண்டனை பெறவேண்டியதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா.”என்று சொன்னவர் வசனம் பேசுகிறார்.

    அமைச்சரின் பங்கைப் பற்றி பத்திரிகைகளும் இணையத்தளங்களும் பேசுகின்றன. ஆனால் இலங்கையின் புத்திசாலிகளின் கோட்டையான புலனாய்வுப் பிரிவுக்கு அமைச்சரின் பங்கு பற்றித் தெரியவில்லை. அமைச்சர் வந்து வசனம் பேசுவதற்கு நீதிமன்றம் என்ன நாடகமேடையா? (இலங்கையில் அதைவிடக் கேவலமாகவே அரசின் கோமாளிகளால் நீதிதுறை கையாளப்படுகிறது என்பது வேறு கதை)

    வழக்கு ஒன்று உரிய முறையில் போடப்பட்டு விசாரணைகள் உரிய முறையில் நடாத்தப்பட்டு சாட்சிகள் கொண்டுவரப்படுபவர்கள் அச்சுறுத்தல் இன்றி சாட்சி பகரும் நிலைமைகள் அல்லவா மகிந்தவின் நாட்டில் இருக்கின்றன. ‘சாட்சிக்கு எவண்டா – நம்மாளுங்க பாத்துகிடுவாங்க’ என்று அமைச்சர் இருப்பார். ‘தவறிழைத்தவர் தண்டனை பெறவேண்டியதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா’என்ற தத்துவங்கள்? ‘இவங்க ஜொள்ளு சகிக்க முடியல’.

    “புத்தள கொலை வழக்கொன்றில் அமைச்சரின் பங்கு இருப்பதாகவும் அதற்காக அவர் சட்டத்தின் முன் வந்து தன் நிலைபாட்டை தெரிக்கவேண்டும் என்ற புத்தளம் மக்களின் கோரிக்கையோடு உடன்படுகிற” நிஸ்தார், உடன்படுவது தவிர உருப்படியாக வேறு ஏதாவது செய்திருக்கிறாரா? இந்து தத்துவங்கள் சொல்வது போல கர்மா – தெய்வம் நின்றறுக்கும் என்று ஏதாவது டயலக் எடுத்து விடவும் முடியாத நிலைமை!

    //இங்கே அமைச்சருக்கு வக்காலத்து வாங்குவதாக கற்பனை பண்ண தேவையில்லை.//
    எங்கப்பன் குதிருக்குள் இல்லை?


  22. ajeevan on July 28, 2012 11:28 pm

    //சக இனத்துக்கு உரிமைகள் வழங்காத நாடுகள் ‘கட்டப்பஞ்சாயத்து’ நாடுகளாக (failed state) போய்விடுவது ஒன்றும் புதிதல்லவே!!//

    ஓம் ; தம் இன மக்களையே அப்படித்தானே தண்டித்து ; தமது உரிமைகளை நிலை நாட்டினார்கள்.
    இல்லையா சாந்தன்?


  23. Rohan on July 28, 2012 11:30 pm

    //தவறிழைத்தவர் தண்டனை பெறவேண்டியதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா//

    தவறிழைத்தவர் மன்னர் நீதிபதியின் மனைவி!

    தண்டனை?

    Mannar Magistrate’s wife’s residence attacked- Date:2012-07-28 17:21:00 – By Madhawa Kulasooriya

    The ancestral home of Mannar Magistrate’s wife was attacked this afternoon by an unknown group, ground sources said.
    Several windows of the residence and the window of a van parked nearby was damaged due to the attack. The Mannar Police is conducting further investigations. (Ceylon Today Online) -http://www.ceylontoday.lk/16-10334-news-detail-mannar-magistrates-wifes-residence-attacked.html


  24. Rohan on July 29, 2012 12:05 am

    //அதேவேளை இந்த வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணிகளின் குடும்பத்தினருக்கு எந்த விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு ஏதாவது முறைப்பாடு கிடைத்தால் வழக்கு முடிவடையும் வரை அமைச்சர் விளக்கமறியலில் இருக்க நேரும் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்படுள்ளதாக அந்த வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.//

    என்பதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரிகள் அமைச்சர் ஏதோ மிரட்டல் பேர்வழி என்ற மாயையை ஏற்படுத்துகின்றது.

    இங்கே அமைச்சருக்கு வக்காலத்து வாங்குவதாக கற்பனை பண்ண தேவையில்லை.


  25. சாந்தன் on July 29, 2012 12:38 am

    //..புத்தள கொலை வழக் கொன்றில் அமைச்சரின் பங்கு இருப்பதாகவும் அதற்காக அவர் சட்டத்தின் முன் வந்து தன் நிலைபாட்டை தெரிக்கவேண்டும் ….//

    அட…இவர் மன்னார் கேஸ்மட்டுமல்ல புத்தளம் கேசுமா?
    இவரையா மன்னார் மக்கள் புலிகளிடம் இருந்து முஸ்லிம்களைக்காக்க வந்த அவதாரம் என கட்டவுட் பிடிக்கிறார்கள்?
    இவரா பயம் வேண்டாம் நான் இருக்கிறேன் என டயலொக் அடிக்கிறார்?
    அட…இவரா மன்னாரில் மதயுத்தம் ஒன்று நடக்கிறது என கதை விட்டவர்??
    இவர் ஓல் ஐலண்ட் கில்லாடியா? மன்னார் கேஸ் நீதிமன்ற கண்னாடிக்கு கல்லெறிஞ்ச கேஸ்… ஆனால் புத்தளத்தில் கொலைக்கேஸ் உண்டா? சுப்பர்…சுப்பர்… சுப்பரோ சுப்பர்!!
    நல்ல அமைச்சர்… நல்ல மக்கள் காவலன்!


  26. mohamed Nisthar on July 29, 2012 2:23 pm

    அன்புள்ள றோகன், சாந்தன்

    “ஐயையோ… அரபு மொழி ஏதோ தனிப்பட்ட நம்மாளுகளுக்கு மட்டும் தான் சொந்தமோ.” றோகன்
    அறபு மொழி என்ன எந்த மொழியும் தனிப்பட்ட ஆட்களுக்கு சொந்தமல்ல. இதைத்தான் நாம் நமது தாய் மொழி தமிழ் என்றபோது, என்ன? தமிழ்மொழி உங்கள் தாய் மொழியா? நாடோடிகள், வியாபாரிகள் மொழியே இல்லாதவர் என்றெல்லாம் கூக்குரலிட்ட “தமிழ் எங்கள் உயிரிலும் மேலான எமது மொழி” கோட்பாட்டாளர்கள் இந்த தளத்திலே அசத்தும் போது றோகன் எங்கிருந்தீர்கள்? அப்படி இருந்தும் இமானுவேலென்ன நீங்களும் கூட அறபு பேசலாம், எழுதலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால் தம்புள்ள பள்ளிக்கும் இமானுவேலுக்கும் என்ன சம்பந்தம் என்பதே? காரணம் செங்கோல் செலுத்தபட்ட புலி ஆட்சியின் கீழ் சுமார் 97 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டன அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டன. அப்போது தமிழ் மொழியில் கூட அதை பிழை என்று கூட சொல்லாத மகா பாதிரி இனாமுவேல் கண்ணிகளில் தம்புள்ளை தொடர்பாக கண்ணீர் வெளிவந்து அது அறபு மொழியில் பெருக்கெடுத்ததுதான் தமாஷ் அதைத்தான் சுட்டிக்காட்டினேன். மற்றும் படி ஒரு மொழி தெரிந்தவன் பேசுவான், எழு/துவான் அது அவன் திறமை.

    /”அட…இவர் மன்னார் கேஸ்மட்டுமல்ல புத்தளம் கேசுமா? இவரையா மன்னார் மக்கள் புலிகளிடம் இருந்து முஸ்லிம்களைக்காக்க வந்த அவதாரம் என கட்டவுட் பிடிக்கிறார்கள்? இவரா பயம் வேண்டாம் நான் இருக்கிறேன் என டயலொக் அடிக்கிறார்? அட…இவரா மன்னாரில் மதயுத்தம் ஒன்று நடக்கிறது என கதை விட்டவர்?? இவர் ஓல் ஐலண்ட் கில்லாடியா? மன்னார் கேஸ் நீதிமன்ற கண்னாடிக்கு கல்லெறிஞ்ச கேஸ்… ஆனால் புத்தளத்தில் கொலைக்கேஸ் உண்டா? சுப்பர்…சுப்பர்… சுப்பரோ சுப்பர்!! நல்ல அமைச்சர்… நல்ல மக்கள் காவலன்! / சாந்தன்

    சர்வதே பயங்கரவாதியாக உலகம் சித்தரித்த “நபர்” ஒருவர் சாந்தன், றோகன் போன்றோருக்கு தேசியத்தலைவன், சூரியதேவன், நீதியின் சின்னம், தமிழரின் உயிர் இன்னும் என்னனென்னவோ. இந்த நிலைப்பாட்டடினால் றோகனும், சாந்தனும் அவர்களை சேர்ந்தோரும் அறிவாளிகள், புத்திசாலிகள், (மே 18 பின்னான) மனித உரிமை காவலர்கள். ஆகவே ஓல் ஐலண்ட் கில்லாடியை ஆதரிக்கும் மன்னார் மக்களும் புத்திசாலிகள், அறிவாளிகள், மனித உரிமை காவளார்கள்.

    ஆனால் ஓல் ஐலண்ட் கில்லாடியை ஆதரிக்கும் மன்னார் மக்கள் மடையர்கள், துவேசிகள், காடையர்கள் பஞ்சமாபாதக அரசாங்கத்தின் காவலர்கள் என்றால் றோகனும், சாந்தனும் யார்? என்ற கேள்வி ஒரு புறமிருக்க.

    இலங்கையின் (தமிழ்) நீதிமன்றமொன்று தாக்கப்பட்டுள்ளது. (தமிழ்) நீதிபதி ஒருவர் அச்சுறுத்தலுக் குள்ளாகியுள்ளார், அவரின் வாசஸ்தலம் தாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கயில் நீதியமைச்சரே ஒரு பச்சோந்தி, நீதி துறையே (தமிழ்)மக்களுக்கு எதிரான போக்குடையது. அங்கே (தமிழ்) மக்களுக்கு நீதியே கிடைக்காது, (தமிழ்)சாட்சிகளையே காணாமல் செய்துவிடுவார்கள். அரசாங்கம் கண்துடைப்புக்காக அமைச்சருக்கெதிராக நீதிமன்ற அழைப்பாணை அது, இது என்கிறது, காலத்தை இளுத்தடித்து ஒன்றும் நடக்கவில்லை என்ற மாதிரி சோடித்து விடுவார்கள், பயங்காட்டி நீதிபதியையே வழக்கை வாபஸ் வாங்கப் பண்ணிவிடுவார்கள் என்று முற்றுப் புள்ளி இடாமல் கமா(‘) போட்டுக் கொண்டே போகிறார்களே ஏன்? என்ற கேள்வி என் மனதில் எழும்ப இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்றால் இப்படி ஒரு கற்பனை மனதில் வந்தது.
    “ஹி, ஹிஹி, தமிழீழம் ஒன்று தந்தால் (யார் தருவது?) மன்னாரில் இருந்து மட்டக்களப்புவரை ஓடிய இரத்த கால்வாயில் புலம் பெயர் தமிழர் பாலும் தேனும் ஓடச்செய்வோம். வவுனியாவில் இருந்து காங்கேசந்துறை வரை தேரோடும் பாதை அமைப்போம், முழு உலகத்துக்குமே நீதி,நேர்மை, அறம், அன்பு, மனித உரிமை பற்றி எல்லாம் பாடம் நடத்த பாடசாலை அமைப்போம் ,நெறிபிறழா நீதியை எங்கும் தழைக்கச் செய்வோம், இன்னும் என்னென்ன எல்லாம் செய்து காட்டுவோம் என்று முற்றுப்புள்ளி வைக்ககும் அதே பின் கதவு முயற்சி என்பது வெளிப்படை. ஆகவே றோகன், சாந்தன் நீங்கள் என்னதான் கொதித்தாலும் நீதி,நேர்மை என்பது என்றும் நிலையாய் உள்ளது, மனித உரிமை என்பது திடிரென்று புதிதாய் மே18க்குப் பின் முளைத்தல்ல. ஆகவேதான் உங்களின் திடீர் ஞானம் எம்மை அதிர்ச்சிகுள்ளாகுக்கிறது. எங்கே சந்தர்பம் வரும் போது மட்டும் அறபு மொழி அறிகை விட்டுவிட்டு , சந்தர்ப்பம் மாறும் போது சிங்கள் மொழியிலும், சீன மொழியிலும் அறிக்கை விட்டு எல்லாரையும் ஆச்சரியத்துக்குளாக்கி விடுவீர்களோ என்ற ஒரு முன் எச்சரிகை தான் எமது “புலி திறமோ” விடயம்.


  27. சாந்தன் on July 29, 2012 9:18 pm

    //…சர்வதே பயங்கரவாதியாக உலகம் சித்தரித்த “நபர்” ஒருவர் சாந்தன், றோகன் போன்றோருக்கு தேசியத்தலைவன், ….//
    புலி என்ன திறமோ என ஒருவரியில் கேட்டிருக்கலாமே? பந்தி பந்தியாய் எழுதி…..???

    ///..அரசாங்கம் கண்துடைப்புக்காக அமைச்சருக்கெதிராக நீதிமன்ற அழைப்பாணை அது, இது என்கிறது, காலத்தை இளுத்தடித்து ஒன்றும் நடக்கவில்லை என்ற மாதிரி சோடித்து விடுவார்கள்,….//
    இதிலென்ன சோடிக்க கிடக்கு? உண்மை அதுதானே…அதனால் தான் ஸ்ரீலங்கா அரசின் LLRC ரிப்போட்டைக்கூட யாரும் நம்பத்தயாரில்லை!
    இப்ப அடுத்த ஜீக் என்னவெண்டால் இந்த LLRC ரிப்போட்டில் எந்தெந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாம் என பரிந்துரை செய்ய ஒரு கொமிசனாம்…பின்னர் அதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என ஒரு கொமிசனாம்….
    வோஷிங்ரன் டி.சி யில் நடந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா எம்பசி பிரதிநிதிக்கு HRW, ICC, AI போன்றோர் இந்தப் பம்மாத்துகளைச் சுட்டிக்காட்ட அவர் கப்சிப்! அங்கே நடந்த சுவாரசியமான விடயங்கள் பொருத்தமான தலைப்பின் கீழ் பின்னொரு நாளில்!

    //…ஆகவேதான் உங்களின் திடீர் ஞானம் எம்மை அதிர்ச்சிகுள்ளாகுக்கிறது. ….///

    அதானே? அதுவரை ஓல் ஐலண்ட் கில்லாடிகள் மற்றவர்களை பயங்கரவாதிகள் எனச் சொல்லி அரசில் இணைந்து ஜனநாககக் காவல் செய்து கொண்டிருந்தனர். இப்ப என்னடா என்றால் இந்த இன்ரநசனல் கில்லாடிகள் ஓல் ஐலண்ட் கில்லாடிகளை கேட்கிராகள்? அதிர்ச்சி என்ன அதிர்ச்சி இன்னும் இருக்கு என்கிறார்கள் சிங்கள நண்பர்கள்!!
    பழக்கதோசத்தில கல்லெறிஞ்சுபோட்டார் இப்ப மாட்டிகொண்டுள்ளார் என்கிறாகள் சிங்கள் நண்பர்கள்.
    அதுசரி அரசாங்கத்திடம் “சிறைச்சாலை அலுவலர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள்” மன்னார் நீதிமன்றத்தாக்குதலில் ஈடுபட்ட் ஆதாரம் இருக்கு என்கிறதே?
    -http://www.sundaytimes.lk/120729/news/video-footage-shows-state-officials-leading-mannar-attack-police-7382.html
    அட பாடசாலை அதிபரும் கல்லெறியப்போனாரா?
    எதுக்கும் அவசரம் வேண்டாம் பொறுமை “காப்போம்”


  28. roshaen on July 30, 2012 1:08 am

    திரு.நடராஜா குருபரனின் செய்தி தொடர்பாக….
    ஒரு செய்தியை எப்படி திசை திருப்பி பாதிக்கப்பட்டவனையே திரப்பியடிப்பது என்பதற்கு சிறந்த உதாரணம் அவரது செய்தி. உப்பக்குளம் எங்கொ இருப்பத போலவும் அங்கு நடப்பது பற்றி யாருக்கும் எதவும் தெரியாதது போலவும் உண்மையை திசை திருப்பப்பார்க்கின்றார்.
    உப்பக்குள முஸ்லிம்களது மின்பிடிப்பிரதேசத்தில் கிறிஸ்தவ மீனவர்கள் ஆக்கிரமித்தள்’ளனர். அதற்க முன்னாள் புலிப்பாதிரியும் புலிதயவில் அரசியல் வாழ்வு பெற்ற அடைக்கலநாதனும் நீதிவானும் பக்கபலமாக இருக்கின்றார்கள். பிரபாகரனின் விட்டகுறை முஸ்லிம்வகை வடக்கை விட்டு இரண்டாமகட்டமாக வெளியேற்ற துணிந்து நிற்கின்றார்கள்.
    அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமான கொழும்பு ஆர்ப்பாட்டத்தின் நியாயங்களை குருபரன் அளந்து நிறுத்துப் பார்க்கின்றார். எத்தனையோ விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இதற்குஎதிர்புபு தெரிவிப்பானேன். எனக்கேட்கின்றார்.அப்படியானால் ஏனைய பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதபடியால் இதனை முஸ்லிமகள் கண்டுகொள்ளக் கூடாது என ஊடக தர்மம் பேசுகிறார். பொதுவாக தமிழ் தேசியவாதிகளும் ஊடகப்பயங்கரவாதிகளும் முஸ்லிம்கள் தம் நியாயமான கோரிக்கை குறித்துகேள்வி எழுப்பும் போதெல்லாம் ஆது சிங்கள அரசின் தூண்டுதலால் அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநலதூண்டுதலால் நடை பெறுகின்றது என பிரச்சினையினை திசைதிருப்ப அல்லது முக்கியத்துவம் இழக்கச்செய்வதில் வல்லவர்கள் இந்த ‘பிரபாகரனிஸத்தை’ குருபரனின் செய்தியில் பார்க்கலாம்.(மீண்டும் வாசித்துப்பாருங்கள் குருபரன் அவர்களே ஒரு பிரச்சினைக்கு மக்கள் ஆர்ப்பாட்ம் செய்யவில்லை என்பதற்காக உங்கள் பாசையில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமா?எத்தனையோ தமிழறிஞர்களை புலிகள் சுட்டுச்சரித்த போதெல்லாம் தமிழ்மக்களால் ஆர்ப்பாட்டம் செய்யமுடிந்ததா? மாணவர்களையெல்லாம் போர்க்களத்துக்கு சாய்த்துக் கொண்டு பொன போதெல்லாம் வாய்திறந்த பெற்றோரும் கொல்லப்பட்போதெல்லாம் சில ஊடகப்புலிகள் கொழும்பில் இருந்து கொண்டு பிரபாகரனுக்கு இல்லாத சக்தியெல்லாம இருப்பதாக கட்டுரைகட்டுரையாக பரணிபாடி புலிக்கு பொம்பு சீவிவிட்டு இப்போது புலி மாண்டதும் அடுத்த கட்டமாக கோட்டு சூட்டுப் போட்ட புலிகள் பெனாவை தூக்கியிருக்கின்றனர். ஆதலால் புலிஆயருக்கு அரசியல் ஆர்வமிருந்தால் நேரடியாக வரட்டும்.இல்லை முஸ்லிம்களை துரத்தி அவர்களது கண்ணீர் தெளித்த பாதையில் தான் வருவேன் என்றாரானால் ஏற்கனவே கண்ணீர் ஓட்டியவர்களின் கதியைக் கொஞ்சம் குருபரன் அவருக்கு விளக்கப்பாருங்கள்.


  29. Rohan on July 30, 2012 11:21 am

    //mohamed Nisthar …சர்வதே பயங்கரவாதியாக உலகம் சித்தரித்த “நபர்” ஒருவர் சாந்தன், றோகன் போன்றோருக்கு தேசியத்தலைவன், ….//

    /சாந்தன் – புலி என்ன திறமோ என ஒருவரியில் கேட்டிருக்கலாமே? பந்தி பந்தியாய் எழுதி…..???/

    என்னைப் பொறுத்தளவில் (புலிச்) சாயம் பூசுவது கோழைகள் செய்வது. நியாய வாதத்தில் நின்று பிடிக்க முடியாத அழுகுணிகள் செய்வது. Mohamed Nisthar செய்ததில் எனக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

    எனக்கு முதுகெலும்பு இருக்கிறது. பிரபாகரனை எனது தலைவனாகக் கொண்டிருந்தால் நிமிர்ந்து நின்று சொல்வேன். எந்தக் கொம்பனால் என்ன செய்ய முடியும்?

    தமது இயலாமையையும் தோல்வியையும் மறைக்க, மற்றவர்களுக்குப் பூச என்று (புலிச்) சாய வாளிகளுடன் அலையும் அரைமனிதர்கள் அருவருப்பு ஊட்டுகிறார்கள்.


  30. சாந்தன் on July 30, 2012 4:35 pm

    //…ஓம் ; தம் இன மக்களையே அப்படித்தானே தண்டித்து ; தமது உரிமைகளை நிலை நாட்டினார்கள்.
    இல்லையா சாந்தன்?…..//
    புலி என்ன திறமோ?


  31. சாந்தன் on July 30, 2012 5:09 pm

    இந்த போலி மாற்றுக்கருத்து ஜனநாயக பம்மாத்துக் கோஷ்டி. தங்கள் இயலாமையை வெளிப்படுத்த ‘புலி என்ன திறமோ’ எனக்கேட்டு தப்பி ஓடவேண்டி இருக்கு!!
    சும்மா வக்கணைக்கதைகள் மிக இலகுவாக விட்டுக்கொண்டு இருந்தனர். இப்போ என்னடாவென்றால் புலி என்ன திறமோ….. அவர்களின் நிலை அப்படி.

    இன்னும் சிலரோ முன்னெச்சரிக்கையாக தாங்களே தமது பந்தி பந்தியாக எழுதிய கருத்துகளின் சாராம்சத்தை புலி என்ன திறமோ என கேள்வி கேட்டு முடித்து வைக்கிறார்கள். பலே புத்திசாலிகள்!!

    அது மட்டுமல்ல …..நான் பின்னூட்டம் இடாத தலைப்பொன்றில் வந்து இன்னொருவரால் இடப்பட்ட தலைப்புக்குச் சம்பந்தமில்லாத ஒரு பினூட்டத்தைல் வசதியாக தொங்கிப்பிடித்து சிங்களவன் மோடன், பிணந்தின்னி எனச் சொன்னேன் என நான் சொல்லாதவற்றை சொன்னது மட்டுமல்ல இன்றும் கூட மன்னார் மக்கள் மடையர்கள், துவேசிகள், காடையர்கள் என சொன்னதாக கதை விட்டு – அதனை வசதியாக வேறொரு நாளில் என்தலையில் கட்டலாம் என- பின்னூட்டம் இடுகிறார்கள்… !!!


  32. sanjeay on July 30, 2012 9:25 pm

    Video footage shows state officials leading Mannar attack: Police

    -http://www.sundaytimes.lk/120729/news/video-footage-shows-state-officials-leading-mannar-attack-police-7382.html


  33. information on July 30, 2012 9:29 pm

    முஸ்லிம் மக்களே! இன ஐக்கியத்தை கோருங்கள்!!, இனவாதத்தை நிராகரியுங்கள்!! பி.இரயாகரன்

    சிங்கள மக்களை நேசியுங்கள், சிங்கள அரசை நிராகரியுங்கள். தமிழ் மக்களை நேசியுங்கள், தமிழ் இனவாதிகளை நிராகரியுங்கள். அதுபோல் யாரெல்லாம் முஸ்லிம் மக்களை நேசிக்காமல் முஸ்லிம் இனவாதத்தை முன்னிறுத்துகின்றனரோ, அவர்களை நிராகரியுங்கள். குறிப்பாக யாரெல்லாம் முஸ்லிம் மக்களைச் சாராது அரசுடன் நிற்கின்றனரோ, அவர்களை முதலில் நிராகரியுங்கள். இவர்களின் இன, மத கோசங்கள், உங்களை மோதவிட்டு, அவர்கள் அதில் குளிர்காய்வது தான். தங்கள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து, தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களைப் பிரித்துப் பிளந்து மோதவிடுகின்ற அரசியல் சதிக்கு துணை போகாதீர்கள், மற்றவர்களைத் துணைபோக அனுமதிக்காதீர்கள்.

    அனைத்து முஸ்லிம்கள் பெயரில் “எமது முஸ்லிம் தலைமைகளைப் பாதுகாக்க ஒன்றுபடுங்கள்!” என்று, இன்று இனங்களைப் பிளந்து ஓடுக்கும் பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்து கோசம் எழுப்புகின்ற கேலிக்கூத்தைக் காணமுடிகின்றது. தனது தனிப்பட்ட குற்றக் கும்பல் தனத்தை மூடிமறைக்க, முழு முஸ்லிம் மக்களையும் இனவாதம் மூலம் உசுப்பேற்ற முனைகின்றனர். “முஸ்லிம் தலைமை” பற்றி பேசிக்கொண்டு “வடக்கில் எமது வாழ்வுரிமையை ஜனாதிபதி அவர்களே உறுதிப்படுத்துங்கள்!” என்று கோசம் போடுகின்றனர். இது உண்மையில் ரிசாட் பதியுதீனின் மந்திரி பதவியைக் காப்பாற்றக் கோருகின்றது. ஜனாதிபதிக்கும் “முஸ்லிம் தலைமைக்கும்” என்ன தான் அப்படி உறவு? எதற்கு இங்கு “முஸ்லிம் தலைமை”? ஏன் ஜனாதிபதியே அதை பார்த்துக் கொள்வார் தானே! இடையில் ஏன் பொறுக்கித் தின்னும், ரிசாட் பதியுதீன் போன்ற பொறுக்கிகளுக்கு என்ன தேவை இருக்கின்றது? இங்கு “முஸ்லிம் தலைமை” முஸ்லிம் மக்கள் எனும் பெயரில் பொறுக்கித் தின்பதுதான். முஸ்லிம் மக்கள் அல்லாத பேரினவாத அரசுடன் சேர்ந்த ஓட்டுமொத்த மக்களையும் ஒடுக்கும் ரிசாட் பதியுதீன், முஸ்லிம் தமிழ் மக்களை பிளந்து மோதவிடுவதன் மூலம் “முஸ்லிம்களை வாழவிடு” என்று கூறுகின்ற கூற்று குறுந்தேசியத்தை சார்ந்த நிற்கின்றது.

    அரசு முஸ்லீம் வழிபாட்டுத்தலங்களுக்கு எதிராக எப்படி அணுகுகின்றதோ, அதையே தமிழ்மக்களுக்கு எதிராக முஸ்லிம் பெயரில் ரிசாட் பதியுதீன் மன்னாரில் ஆடிக்காட்ட முனைகின்றார். இப்படி இன்று இனம் மதம் சார்ந்த அரச பயங்கரவாதம் தான், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சார்ந்த ஒன்றாக இட்டுக்கட்டி காட்டப்படுகின்றது.

    “புலிகளின் மறுபிறப்பை நிறுத்து!” என்று முஸ்லீம் மக்களின் பெயரில் ரிசாட் பதியுதீன் கும்பல் கோசமிடுகின்றனர். ரிசாட் பதியுதீன் அரசுடன் சேர்ந்து இயங்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, பள்ளிவாசல்களுக்கு வழிபட வந்த மக்களைக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக புலிப்பாணியில் இனவாதத்தை தூண்டி விடுகின்றார்.

    புலிகள் அன்று எப்படி தங்கள் அதிகாரம் மூலம் இனவாதத்தை தூண்டி முஸ்லீம் மக்களை ஓடுக்கினரோ, அதேயொத்த அதிகாரத்தின் துணையுடன் குறுகிய முஸ்லிம் இனவாதத்தை தமிழ் மக்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றனர்.

    ரிசாட் பதியுதீனின் மன்னார் நீதிமன்றம் மேலான தாக்குதல், மிரட்டல் .. என அனைத்தும் இன்று முழுமையாக அம்பலமான நிலையில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கக் கோரும் போராட்டங்கள் கூர்மையாகி உள்ள நிலையில் தான், மிக மோசமான இனவாதத்தை தூண்டி அதில் சரணடைய முனைகின்றார். “எமது பூர்வீக மண்ணை மீட்டுத்தாருங்கள்” என்று பூர்வீகமில்லாதவர்களைக் கொண்டு கோசம் போடுகின்றனர். மீள் குடியேற்றத்தை தமிழ் மக்கள் தடுப்பதாகவும், அவர்களின் வாழ்விடத்தை தமிழ் மக்கள் அபகரித்து வைத்து இருப்பதாகவும் இட்டுக்கட்டும், ஒரு பச்சையான இனவாதத்தை பிற பிரதேச அப்பாவிகள் மூலம் தூண்டிவிடுகின்றனர்.

    முஸ்லிம் மக்களின் சட்டபூர்வமான வாழ்விட உரிமைகளை தமிழ் மக்கள் மறுப்பதாகவும், அதை அவர்கள் தர மறுப்பதாகவும் கூறுகின்ற புரட்டுகள் அனைத்தும் இட்டுக்கட்டியவை. புலிக்கு பின் இதுவொரு விடையமேயல்ல. இங்கு சட்டபூர்வமான தனி உரிமை சார்ந்த விதிவிலக்கான உதிரி சம்பவங்கள் ஏதாவது இருப்பின், அது தனியுரிமை வழக்குகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது. இந்த விடையத்தில் முஸ்லிம் தமிழ் என்ற எந்த வேறுபாடுமின்றி, தனியுடமை சம்மந்தமான விடையமாக தான் எங்கும் உள்ளது. இப்படித்தான் இருக்கின்றது உண்மை.

    மறுதளத்தில் அன்று முஸ்லிம் மக்கள் மேலான ஒடுக்குமுறையை புலிகள் செய்தனர். அதே புலிகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிய தமிழ்மக்கள் இதைச் செய்யவில்லை. இன்று முஸ்லீம் மக்கள் மத்தியில் அரசின் துணையுடன் இனவாதத்தை தூண்டிவிடும் ரிசாட் பதியுதீன் கூட, புலிகளின் அதே பாணியில்தான் இன்று செய்கின்றார். இங்கு “புலிகளின் மறுபிறப்பை நிறுத்து!” என்பது, உண்மையில் அவர்களே புலிகளாக மாறி இனவாதத்தை தூண்டி கோசம் போடுகின்றனர். இன்று எப்படி இனம் சார்ந்த தமிழ் தலைமைகள் உள்ளனரோ, அப்படித் தான் முஸ்லிம் தலைமைகளும் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றனர்.

    இங்கு “மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமளிக்காதே!! முஸ்லிம்களை வாழவிடு,” என்பது, முஸ்லிம் மக்களைத் தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழவிடாது தடுப்பதன் மூலம், “பயங்கரவாதத்தை” தோற்றுவிப்பது தான். புலிப் “பயங்கரவாதம்” அரசின் இனவாதக் கொள்கையினாலும், அரசபயங்கரவாதத்தினாலும் தோற்றம் பெற்றது. இங்கு “மீண்டும் வடக்கில் பயங்கரவாதம்” தோன்றுமாயின் நீங்களும் உங்கள் அரசும் தான் அதற்கு காரணமாக இருக்கிறீர்கள். எப்படி தமிழ்மக்கள் முஸ்லிம் மக்கள் மேலான பயங்கரவாதத்துக்கு காரணமாக இருக்கவில்லையோ, அப்படியே முஸ்லிம் மக்கள் கூட காரணமாக இருக்கமாட்டார்கள்.

    இன்று இனவாதமும், அரச பயங்கரவாதமும், பாசிசமாக்கலும் சார்ந்து இலங்கையை ஆளும் வர்க்கங்களும், அதை முன்னெடுக்கும் அரசும், அதன் பின் பிழைக்கும் உங்களைப் போன்ற சந்தர்ப்பவாதிகளும் பிழைப்புவாதிகளும் தான், மக்களை ஒடுக்கி மீண்டும் வன்முறையைத் தூண்டுகின்றனர்.

    இன்று புலியில்லாமல் அரசியல் நடத்த முடியாத நிலையில் அரசியல் முதல் அரசு இயந்திரம் வரை, புலி வருகின்றது என்று கூச்சல் போடுகின்றனர். அரசியல் என்பது ஆயுதமும், வன்முறையுமே என்று புலிகள் பாணியில் கூறுகின்ற, பாசிச வக்கிரம் எங்கும் இன்று கொப்பளிக்கின்றது. இனவாதம் மூலம் மீண்டும் ஒரு புலியை தோற்றுவிப்பதன் மூலம் மக்களைப் பிளந்து ஆள அரசும், அரச எடுபிடிகளும் தலைகீழாக குதித்தெழுகின்றனர்.

    இவர்கள் தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களைப் பிரித்துப் பிளந்து மோதவிடுகின்ற அரசியல் சதிக்கு துணை போகாதீர்கள். அதற்கு மற்றவர்கள் துணைபோவதை அனுமதிக்காதீர்கள்.


  34. Rohan on July 31, 2012 10:28 am

    //சிங்கள மக்களை நேசியுங்கள், சிங்கள அரசை நிராகரியுங்கள். தமிழ் மக்களை நேசியுங்கள், தமிழ் இனவாதிகளை நிராகரியுங்கள். அதுபோல் யாரெல்லாம் முஸ்லிம் மக்களை நேசிக்காமல் முஸ்லிம் இனவாதத்தை முன்னிறுத்துகின்றனரோ, அவர்களை நிராகரியுங்கள். குறிப்பாக யாரெல்லாம் முஸ்லிம் மக்களைச் சாராது அரசுடன் நிற்கின்றனரோ, அவர்களை முதலில் நிராகரியுங்கள். ……//

    இரயாகரனுடன் ஒத்துப்போகிறேன்!


  35. ajeevan on August 1, 2012 9:57 am

    மன்னார் பிரச்சனை தொடர்பாக யங் ஏசியா தொலைக் காட்சியின் சிங்களப் பகுதிக்கு ரிசார் பதியுதீன் அவர்கள் அளித்துள்ள பேட்டியை கீழே இணைக்கிறேன்.

    அவர் அளிக்கும் செவ்வியில் முக்கிய சில விடயங்களாக

    1. முஸ்லிம் மக்கள் காலா காலமாக அந்தப் பகுதியில் வாழ்ந்ததாகவும்; அவர்கள் புலிகளால் துரத்தியடிப்பதற்கு முன்னரேயே புலிகள்; முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பகுதிக்குள் வேறோர் பகுதியில் வாழ்ந்த மக்களை கொண்டு வந்து குடியேற்றியதாகவும்; அதற்கான காரணமாக தமிழர்கள் வாழ்ந்த கடற்கரையோர பிரதேசமொன்றை புலிகளின் கடற் புலிகளின் செயல்பாட்டுக்காக பாவிப்பதால்; தற்காலீகமாக அங்கு வாழ்ந்த தமிழர்களை வாழ இடம் கொடுக்கும் படி சொல்லியிருந்ததாகவும்; அப்படி தற்காலீகமாக வாழ வந்தவர்கள்; இப்போது முஸ்லிம்கள் வாழ்ந்த அந்தப் பகுதி தமது என உரிமை கொண்டாட முயல்வதாகவும் சொல்கிறார்.

    2. முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பகுதியின் நடுவே புலிகளால் ஒரு தமிழ் கிராமம் உருவாக்கப்பட்டு அதற்கு தமிழ் பெயரும் சூட்டப்பட்டுள்ளதையும், அவை அக் காலத்தில் புலிகளுக்கு ஆதரவான அரச உத்தியோகத்தார்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார். இது மாவீரர் குடும்பங்ககளுக்காக உருவான கிராமம் எனவும் குறிப்பிடுகிறார்.

    அன்று புலிகளின் காலத்தில், புலிகளுக்கு ஆதரவாக இருந்த அரசாங்க உத்தியோகத்தர்களும், கத்தோலிக்க மத குருக்களும் இன்னும் இருப்பதால்; அவர்களது ஆதரவும், அழுத்தங்களும் இன்னும் தொடர்வதாக சொல்கிறார்.

    3. முஸ்லிம் மக்கள் புலிகளால் துரத்தப்பட்ட பின்னர்; முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகள் அனைத்தையும் தமிழர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடும் ரிசாட்; தான் பிறந்து வாழ்ந்த மன்னார் பகுதி குறித்து தகவல்களை பகிர்கிறார்.

    4. ரிசாட், தான் நீதிபதிக்கு அச்சுறுத்தல் எதையும் செய்யவில்லை எனச் சொல்வதோடு ; அப்படி ஏதாவது இருந்தால், தான் எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயார் எனத் தெரிவிக்கிறார்.

    5. இங்கே மிக முக்கிய விடயமாக என் கண்ணில் பட்டது; நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை துரத்துமாறு; நீதிபதி (தனது அங்கியோடு) விரலை நீட்டிக் கொண்டு, நீதி மன்றத்தை விட்டு வெளியே வந்து கட்டளையிடும் காட்சியாகும். நீதிபதி, அந்த மக்களை சுடுமாறு ஆணையிட்டதாக ரிசாட் தெரிவிக்கிறார். நீதிபதி, துரத்தும்படி ஆணையிட்டாரா? சுடும்படி ஆணையிட்டாரா என்பது தெரியவில்லை. அதன் பின்னரே அமைதியாக போராடும் மக்கள் கலவர நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பின்னர் போலீசார் துரத்த ஓடுகிறார்கள். பிரச்சனை உக்கிரமடைகிறது போலும்.

    இங்கே சில கேள்விகளை முன் வைத்து ரிசாட் சிந்திக்க வைக்கிறார்.

    - தமது பிரதேம் தமது என போராடும் உரிமை அப் புகுதியில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு இல்லையா?

    - அப்படியானால் பெரும்பான்மை சிங்கள மக்களிடம் தமது உரிமைக்காக போராடும் ஒரு இனம்; அந்த தமிழ் மக்களுக்குள் வாழும் முஸ்லிம் மக்கள் தமது உரிமைக்காக குரல் கொடுப்தில் என்ன தவறு? என்பதும்; புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு யுனேஸ்கோவோ அல்லது வேறு என்ஜீயோக்களோ; வன்னி அழிவுக்கு முன்னர் குடி பெயர்ந்தவர்கள் எனும் அடிப்படையில் எந்த உதவியையும் வழங்கவில்லை எனத் தெரிவிப்பதோடு இதற்கான காரணமாக கத்தோலிக்கத் தலைமைகளை குற்றம் சாட்டுகிறார்.

    - நீதிமன்றம் முன் மக்கள் போராடுவது தவறென்றால்; இன்று சட்டத் தரணிகளும்; நீதிபதிகளும் நீதிமன்றங்கள் முன் போராடுவதில் என்ன நியாயம் எனவும் கேள்வி எழுப்புகிறார்.

    - தவிரவும் தன்னிடம் உள்ள வீடீயோ ஆதாரத்தை காட்டுகிறார்.

    சிங்களம் தெரிந்தோருக்கு பேட்டியில் உள்ளவை புரியும். சிங்களம் தெரியாதோருக்கு வீடியோ ஒருசில உண்மைகளை புரிய வைக்கும்.

    Video: -https://vimeo.com/46414477

    நமக்கான நீதிக்காக போராடும் ஒவ்வொருவரும், நமக்குக் கீழே உள்ளவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என நினைக்க வேண்டும்.


  36. sebastian on August 1, 2012 11:57 am

    நீதி அமைச்சர் கவனத்துக்கு:

    இங்கே கீழே தரப்படும் விடங்களை மூதூரிலிருந்து விரட்டப் பட்ட தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கிறேன்.

    ஆலஞ்சேனை எப்படி ஆலிம்நகராக மாறியது எப்படி?

    மூதூர் ஜெட்டியிலிருந்து புளியடிச்சந்தி வரைக்கும் இருந்த தமிழ் மக்களுக்கு நடந்தது என்ன? இவர்கள் எங்கே எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் இந்த வழியே இருந்த நவரத்தினம் மதுபானக் கடை அடையாளமாக இருந்நது எப்படி இப்போ விளையாட்டு அரங்காக மாறியுள்ளது? ஏன்? எப்படி?

    முஸ்லீம் பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் எப்படி உடனடியாக அகற்றப்படுகிறது இதற்காக காரணங்கள் என்ன? முன்பு தமிழர்களின் கிராமமான 64ல் இப்போது முஸ்லீம் கிராமமாக மாறியுள்ளது எப்படி? மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் உதவி முகாமையாளர் ராமச்சந்திரன் சலீம் தலைமையில் கொல்லப்பட்டது?

    ஏன்? எப்படி? மூதூர் பிரதேச சபையில் ஒரு தமிழர் உதவி பிரதி தலைவராக கூட இல்லை ஆனால் வடகிழக்கின் வேறு இடங்களில் உள்ள பிரதேசங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில்(யாழ்) முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகின்றது முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள தமிழர் சிறுபான்மையாக உள்ள இடங்களில் மூஸ்லீம்களால் வழங்கப்படுவதில்லை.

    இப்படியான தமிழர் பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சின் காரணமாகவே முஸலீம்களால் வி எஸ் தங்கராசா ஜிகாத்தினால் கொல்ப்பட்டார் இது தமிழ் கிராமங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் இது சில பகுதிகளில் முஸ்லீம்களை சிறுபான்மையினராக்குவதாகவும் கருதியியே இவரது கொலை நடைபெற்றதாக பேசப்படுகின்றது. இதே போலவே மூதூரில் விஏ தங்கராசாவும் டாக்டர் அந்தோனியும்(கத்தோலிக்கர்) கொல்ப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.

    தமிழர் பிரதேசத்திற்காக பஸ்ஓட அனுமதிகொடாமல் முஸ்லீம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டதிற்கான அடிப்படைக்காரணம் என்ன? பிரதேசங்களில் முஸ்லீம் ஆட்டோகாரர்களின் உழைப்பிற்காகவே அதுமட்டுமல்ல மூதூர் அண்டிய பிரதேசங்களிலும் தமிழ் ஒருவர் இது வரை ஆட்டோ ஓட்ட முடியாது அப்படி ஒருவர் ஆட்டோ ஓடினால் அவர் கொல்ப்படுவார்.(இது சந்தேகத்திற்க்கு இடமில்லாத கருத்து) தமிழர் பெரும்பான்மையினராக உள்ள இடங்களில் இருக்கும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் பாதுகாப்பு முஸ்லீம் பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்க்கு வழங்கப்படுவதில்லை இத பற்றி கேட்போது முஸ்லீம்களுடன் மக்களுடன் மட்டுமே உறவுகொள் சகோதரன் என்று சொல் மற்வர்களுடன் அல்ல என்ற கருத்துப்பட பதில் வந்ததாம்.

    மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் மனேஜர் நாகரத்தினம் மயில்வாகனம் பள்ளி குடியிருப்பை சேர்ந்தவர் வேலை முடிந்து வரும் போது முஸ்லீம்களால் துரத்தப்பட்டு அடிக்கப்பட்டு இனிமெல் தமிழன் முஸ்லீம் பிரதேசத்திற்க்கு வேலைக்கு வரக்கூடாது என் மிரட்டப்பட்டார் ஏன்?(உறவினர்கள் சாட்சியமாக உள்ளனர்)
    1990களில் சலீம் (முஸ்லீம் பயங்கரவாதி) தலைமையில் மூதூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது எப்படி? யார் இந்த அலுவல்களுக்கு உறுதுணையாக இருந்தது விலாசங்களை பார்த்து அந்தக் காலங்களில் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கொலை செய்ப்பட்டனர் விசாரணைகள் எங்கே? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா?

    இந்த பயங்கரவாதிக்கும் இராணுவத்திற்க்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்த முஸ்லீம் கட்சி? எது?இயக்கம் எது?
    பல தமிழ்ப் பெண்களை முஸ்லீம் அரச இராணுவத்துடன் இணைந்து வேலை செய்தவர்களும் இவர்களுக்கு ஆதரவானவர்களும் தமிழ்ப் பெண்களை கற்பழித்தனர் அழகான பெண்கள் தெரிவு செய்பயப்பட்டு அவர்களின் கணவர்களை இராணுவ காவலில் வைத்துவிட்டு பெண்களை கற்பழித்துவிட்டு இவர்களது கணவன்மார்களை இராணுவ முகாம்களிலிருந்து விடுதலை செய்தனர்
    எந்த ஒரு முஸ்லீம் பெண்ணோ தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் கற்பழிக்கவோ கேவலப்படுத்தப்படவோ இல்லை என்பதை இங்கு தெரியப்படுத்துகிறேன் எக்காலத்திலும் கிழக்கில் தமிழர்களால் இப்படியான சம்பவங்கள் நடாத்தப்படவில்லை தமிழ் பெண்களை கற்பழித்வர்களில் சலீம், சுரேஸ், காசிம், பாரூக் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள் இப்படி கற்பழிக்கப்பட்ட பெண்கள் பலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் (சாட்சியம் உண்டு) ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா?

    காத்தான் குடி பள்ளிவாசல் கொலைகளின் பின்னரான – ஆறுமுகத்தான் குடியிருப்பு அகதி முகாம் படுகொலை சத்துருகொண்டான் அகதி முகாம் படுகொலைக்கு இந்த கொலைகளை சலீம், காசிம் தலைமையில் முகாமை சுற்றிவளைத்து ஒவ்வொருவராக ஒருவாசலால் வர அழைத்து கொலை செய்தார்கள் (ஆதாரம்: எமில்டர் பற்றிமாகரன் நொக்சர்3)(மனித உரிமைகள் குழுவினர்கு கூறியுள்ளனர்) இது வரையில் எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் இதற்காக மன்னிப்பு கேட்டதில்லை ஏன்? என்ற கேள்வி தமிழர்களிடையே எழுகின்றது? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்களா?
    இது காத்தான்குடி கொலைகளுக்கு தமிழர் சார்பில் பலர் மன்னிப்பு கேட்டிருந்த போதும் இவற்றிக்கு எந்த முஸ்லீம் தலைவர்களும் மன்னிப்பு கேட்கவில்லையே! ஏன்?

    உடையார் குடும்பத்திற்க்கு சொந்தமான நிலம் ஆலங்கேணியில் கைலாசபிள்ளை குடும்பம் செல்வம் குடும்பம் ஆகியோர்களை கடத்தி முஸ்லீம்களே கொலை செய்தனர் என்றும் இவர்களின் சொந்த நிலங்கள் முஸ்லீம்கள் பெயருக்கு மாற்ப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. எப்படி மாற்றப்பட்டது? எந்த அரசியல்வாதி இதன் பின்னால்? (முஸ்லீம்காங்கிரஸ் இதற்க்கு பொறுப்பு)
    2006ல் மணற்சேனையில் விறகு வெட்டி விற்கும் தமிழரை முஸ்லீம் பகுதிகளில் விற்பவர் கொலைசெய்து உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (அவர்களது லான்மாஸ்டர் கையளிக்கப்படவில்லை) இந்த லான் மாஸ்டர் இன்றும் முஸ்லீம்களால் பாவிக்கப்படுகின்றதே அது எப்படி முடிகிறது?

    யோகன் மகன் ஜதீஸ்வரனை பஸ்சிலிருந்து இறக்கி தமிழனை கொலை செய்ய வேண்டும் என்று கொலை செய்ப்பட்டது இவற்றிக்காக எந்த மூதூர் இஸ்லாமிய அமைப்பினரும் மன்னிப்போ அனுதாபமோ பேசவில்லை? ஏன்?

    இப்போதும் 58 பிரதேசத்ற்க்கு தமிழர்கள் போக முடியாத நிலையே உள்ளதாக அறியப்படுகின்றது நிந்தாவூரில் பிள்ளையார் கோவில் இடித்தும் அதே இடங்களில் மக்கள் குடிசைகள் அழிக்கப்பட்டதும் இப்படியான சம்பவங்களுக்கு பின்னால் பல முஸ்லீம் அரசியல் தலைவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னணியில் இருந்தாகவும் இதற்கான காரணம் முஸ்லீம்களுக்காக தொடர்ச்சியான பிரதேசத்தை பெறவே எனவும் தெரியவந்துள்ளது. இது சரியானதா?

    இந்த கோயிலும் குடியிருப்பு காணிகளும் மக்களிடம் மீள கையளிக்கப்படுமா? இந்த விடயத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடுதான் என்ன?

    ஈபிஆர்எல்எப் தோழர்கள் பலர் முஸ்லீம் அமைப்பினரால் வீடு தேடிச்சென்று கொல்ப்பட்டது இதற்காக யாரும் எந்த குரல் எழுப்பவில்லை ஏன்? சலீம்இ காசிம்இ மொக்கனிபாஇ வைத்துல்லா போன்றோர் துறைமுகத்திற்க்கு பக்கத்தே உள்ள புத்தர் கோயிலில் வைத்து தமிழ் பெண்களை கற்பழித்ததாக பெண்கள் கூறினர் அவர்களில் பலர் கற்பழிக்கப்பட்டவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் (மனித உரிமைகள் குழுவினர்க்கு கூறியுள்ளனர்)இந்த இராணுவத்துடன் இணைந்து இந்த வேலைகளை செய்தஇ கற்பழித்தஇ முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு முஸ்லீம் அரசியல் தலைவர்களின் ஆதரவு இருந்துள்ளது.

    வைத்துல்லா முஸ்லீம் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரத்தின்போது கிறீஸ்தவ பெண்களில் மார்பில் கைவைத்து எல்லாரும் முஸ்லீம் காங்கிரஸ்க்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தியதும் இல்லாவிட்டால் தான் மீண்டும் கொலைகளை ஆரம்பித்து விடுவேன் என்று பொது இடத்தில் வைத்து மிரட்டியுள்ளார் (இந்த இடத்தில் நின்ற பலர் சாட்சியங்களாக உள்ளனர்) வைத்துல்லாவுக்கும் முஸ்லீம் காஸ்கிரஸ்க்கும் உள்ள தொடர்பு என்ன?

    முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் தமிழர்களால் முஸ்லீம்கள் இப்படி இம்மிசைக்கப்படவில்லை என்பது ஆழமானகருத்து. மூதூரில் புனித அந்தோனியார் கோவில் தாக்குதலில் முஸ்லீம்கள் யேசுவின் சிலையை உடைத்து கடலில் போட்டனர் இதை மீள எடுத்து வந்து சிலையை திரும்ப நிலை நிறுத்தியதிற்காக டாக்டர் அந்தோனியை முஸ்லிம்கள் கொலை செய்யதனர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதி தலைவர் ரங்காஇ சம்பூர் கூனித்தீவு சிவராசாவைஇ தபாற்கந்தோர் பால்ராஜ் ஆசிரியர் வசந்தன் (கணித ஆசிரியர் இவர்களை கடத்தி கொலை செய்தனர்.

    மல்சேனை 64ல் பஸ்சில் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் பலர் ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா? எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? 1994ல் தேர்தல் காலத்தில் மூஸ்லீம் காங்கிரஸ் வெற்றிக்காக ஆனன்சேனை மூதூர் ரஞ்சன் மோகன் போன்றோர் கடத்தி கொலை செய்ப்பட்டனர் ராஜதுரை நாகேஸ்வரன் ராஜதுரை ரவிச்சந்திரன் சம்பூர் கட்டைப்பறிச்சான் கொலைகள் முஸ்லீம்களால் தமிழர்கள் இழந்த பிரதேசங்கள் உடைமைகள் உயிர்கள் மிகப் பல இதைப்பற்றி முஸ்லிம் தலைவரகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை முஸ்லீம்களால் நடைபெற்ற கொலைகளுக்கும் மன்னிப்பும் கேட்கவுமில்லை. எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா? எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்?

    திருகோணமலை லிங்க நகரில் 5 அல்லது 6 முஸ்லீம் குடும்பங்களே இருந்த காலத்தில் இவர்களுக்கு எந்த தமிழர்களும் எந்த இடைஞசல்களும் செய்வில்லை இவர்கள் திரகோணமலையில் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தே பள்விவாசல் கட்ட தமிழரே நிலம் வழங்கினார் இந்தப்பள்ளிவாசல் என்றுமே தாக்கப்படவில்லை மூதூரில் பல தமிழர்கள் தமிழர் கோவில்கள் சேர்ச்சுகள் தாகக்பட்டபோதும் இவைகள் பத்திரமாகவே இருந்தன தமிழர்கள் முஸ்லீம்களை இந்தக்காலங்களில் ஜனநாயகமாகவே நடாத்தினர்.

    முஸ்லீம்களில் யார் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பது வெளியே வராத வரைக்கும் மூதூரில் நடைபெற்ற பல கொலைகளின் சாட்டியங்கள் ஜ நா மனித உரிமைக் குழுவிடம் பல பதியப்பட்டுள்ளன அதில் பல ஜரோப்பாவில் உள்ள சில முஸ்லீம் எழுத்தாளர்களுடைய பெயர்களும் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

    பொதுவாகவே முஸ்லீம்கள் தமது மதம் விடயத்தில் மட்டும் அக்கறையை காட்டிக்கொண்டு அதில் தமது எல்லா விடயங்களையும் வைத்து சவாரி செய்து கொள்வார்கள் தேவைப்படும்போது மதம் என்றும் இனம் என்றும் இலங்கை என்றும் பேசிக்கொள்கிறார்கள்

    ஆரையம்பதி காத்தான்குடி பிரச்சினைகள்: இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட முஸ்லீம் அமைப்பினர் யார்? எதற்காக செய்தனர் போன்றன வெளிப்படுத்தப்படல் வேண்டும் நீதி வெளிவர வேண்டும் இப்படியான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் முஸ்லீம்களை தமிழர்கள் எப்படி சகோதர உறவுடன் அணுக முடியும் இவையே தமிழர்களில் பலர் முஸ்லீம்களுக்கு எதிரான குரோதங்களுக்கான காரணங்களுமாகும்.

    அஸ்ரப் காலத்தில் தமிழர்களின் காணிகளில் கேட்காமலே துறைமுகம் கட்டப்பட்டும் அந்த காணி சொந்தக்கார் வழக்கு பதிவுசெய்தும் நட்ட ஈடு கொடுக்காமல் இழுபறிப்பட்டது. இப்டியாக என்றுமே முஸ்லீம் நிலங்களுக்கு அஸ்ரப் செய்யவில்லை.
    உவைஸ்ஜை புலிகள் சுட்டதும் பாலைநகர் தமிழர்களை (சுத்திகரிப்பு தொழிலாளிகள்)யும் இந்திய வம்சாவழியினரையும் முஸ்லீம்கள் வீடு புகுந்து கொலைகள் செய்தனர்
    திருமலை கிண்ணியா துறைமுகத்திக்கு முன்பாக சலவை செய்யும் தொழிலாளிகள் வாழ்ந்த இடம் அங்கே பிள்ளையார் கோவில் உள்ளது இந்த பிரதேசத்தை பாராளுமன்ற உறுப்பினர் மகுரூப் முஸ்லீம்களுக்கு மட்டும் பிரதேசமாக்கினார்.

    எத்தனை தமிழ் பிரதேசங்கள் இஸ்லாமிய பெயர் பெற்றன யார் இப்படி மாற்ற்ம செய்கிறார்கள் இதற்கான அடிப்படைகள் என்ன? அரசில் எப்படி இதற்காக அனுமதி கொடுக்கப்படுகிறது
    மூதூர் கல்வி பணிப்பாளர் ஆர் குணராசாவுடனான பல பிரச்சினைகள் வெளிவரல் வேண்டும்.இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட முஸ்லீம் அமைப்பினர் யார்? எதற்காகசெய்தனர் போன்றன வெளிப்படுத்தப்படல் வேண்டும் நீதி வெளிவர வேண்டும் இப்படியான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் முஸ்லீம்களை தமிழர்கள் எப்படி சகோதர உறவுடன் அணுக முடியும் இவையே தமிழர்களில் பலர் முஸ்லீம்களுக்கு எதிரான குரோதங்களுக்கான காரணங்களுமாகும்.

    யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கல்வி பணிப்பாளர் கொலையுடன் இவை சம்பந்தப்படுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்ப்படுகின்றத இவற்றிக்கும் முஸ்லீம்களுக்கும் உறவு உள்ளதா போன்ற சந்தேகங்களும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கொலைகளுக்கும் முஸ்லும் அமைப்புக்கும் சம்பந்தங்கள் உள்ளதா போன்ற சந்தேகங்கள் உருவெடுத்துள்ளன.

    அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை முஸ்லிம் ஆசிரியர்களால் நிரப்பி அவர்களை தமிழ் பாடசாலைகளில் வைத்து படிப்பித்தல் தொழிலை ஆரம்பித்து விட்டு பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக முஸ்லீம் கல்லூரிகளில் நியமித்தனர். ஜேவிபியினர் திருமலையில் ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகளின் பாகுபாடு பற்றி பேசினர் இதன்போது பேசும்போது புலிகளின் பயங்கரவாத்ததைவிட முஸ்லீம்களின் அடிப்படைவாதம் மிக ஆபத்தானது என்றும் இதில் இலங்கையில் ஜிகாத் அல்கைடா புனித இஸ்லாமிய விடுதலை முன்னணிகள் மிக ஆபத்தானவைகள் எனவும் பேசினார்.

    இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை இஸ்லாமியர்களால் இஸ்லாத்தின் பெயரால் திருகோணமலை மூதூர் கிண்ணியா சார்ந்த பிரதேசங்களின் மிகச்சிலவே இங்கு குறிப்பிட்டவைகள் மிகச்சிலவே. நீதி நியாயம் பேசுவது என்றால் இருபக்கமும் பேச வேண்டும்


  37. சாந்தன் on August 1, 2012 4:32 pm

    //…நீதிமன்றம் முன் மக்கள் போராடுவது தவறென்றால்; இன்று சட்டத் தரணிகளும்; நீதிபதிகளும் நீதிமன்றங்கள் முன் போராடுவதில் என்ன நியாயம் எனவும் கேள்வி எழுப்புகிறார்…../
    நீதிமன்றம் முன்னோ அல்லது உள்ளேயோ போராடுவது ஒன்றும் தவறல்ல. சட்டத்தரணிகளொ அன்றி மக்களோ போராடுவதும் தவறல்ல. ஆனால் இங்கே பிரச்சினை போராடுவோர் மன்னாரையே எரிப்பார்கள், இருந்து பார் என ஒரு அமைச்சர் தொலைபேசியில் பயமுறுத்துவதுதான் கேள்விக்குள்ளாக்கப்படுகிரது, விமர்சிக்கப்படுகிறது!

    //..- தவிரவும் தன்னிடம் உள்ள வீடீயோ ஆதாரத்தை காட்டுகிறார்….//

    அதனை இங்கு தேசத்திலுல் யாரோ இட்டனர். அதை நோக்கி நான் சில கேல்விகள் எழுப்பி இருந்தேன் பதிலைக்காணோம். அந்த வீடியோவில் நீதிபதி கையை உயர்த்துகிறார், விரலை நீட்டி ஏதோ பொலிசாருக்குச் சொல்கிறார். அத்துடன் வீடியோ வெட்டப்பட்டு காட்சி மாறி மக்கள் ஓடுவது பொலிசார் துரத்துவது வருகிறது. ஏன் வீடியோ ஃபிரீஸ் ஆகி காட்சி மாறுகிறது?
    மேலும் இங்கே பிரச்சினை நீதிபதி ஆர்ப்பாட்டக்காரரை காலின்கீழாவது சுட்டு கைது செய்தல். அதற்கு ஸ்ரீலங்காவின் சட்டங்களில் இடமுண்டு என நினைக்கிறேன், காரனம் இத்தகைய செயற்பாடுகளுக்கு நீதிபதி ஆனையிட்டதாக நான் பலமுறை செய்தித்தாள்களில் படித்துள்ளேன்!

    ///…சிங்களம் தெரிந்தோருக்கு பேட்டியில் உள்ளவை புரியும். சிங்களம் தெரியாதோருக்கு வீடியோ ஒருசில உண்மைகளை புரிய வைக்கும்…..//
    அவர் முதலில் தன்மீதுள்ள குற்றச்சாட்டை அடியோடு மறுக்கிறார். அக்குற்றச்சாட்டை மறுப்பதற்கு வழமையான பூசிமெழுகல் ஆதாரங்கள் வைக்கிறார். அவர் தொலைபேசியில் மிரட்டினார் என்கின்ற குற்றச்சாட்டுக்கு எனக்கு நீதிபதியைத் தெரியாது, நீதிமன்ற வளாகத்துக்கே போகவில்லை, ஜநாதிபதுயுடன் நின்ரேன் ஆதாரம் உள்ளது என கேள்வியையே மாற்றி சுற்றுகிறார். தொலைபேசியில் மிரட்டினீர்களா என்றால் எனக்கு அவரைத்தெரியாது நான் கொழும்பில் நின்றேன் என்கிறார்!!
    மேலும் நீதிமன்றம்/ நீதிபதியை அச்சுறுத்தல் பற்றிகேட்டால் முஸ்லிம்கள்… புலிகள் எனப் பேசி …அதுவும் அரசாங்கமே தீர்த்து வைக்கவில்லையாம்… என பலகதைகள் தேடி அனுதாபம் சம்பாதிக்க முயல்கிறார். அவரின் முகத்தை நீங்கள் பார்க்க வேண்டுமே, பாவப்பட்ட குழந்தை கூட இப்படி பால்வடியும் முகத்துடன் இருக்காது!!

    அஜீவன் சிங்களம் ‘புரிவோருக்கு’ பல விடயங்கள் புரியும். ஆனால் புரியாதோருக்கு தமிழில் பேட்டி கொடுத்துள்ளார் ….கீழே உள்ளது அதே யங் ஏசியா வுக்கு அவர் தமிழில் கொடுத்த பேட்டி….
    -http://player.vimeo.com/video/46406829

    ///….நமக்கான நீதிக்காக போராடும் ஒவ்வொருவரும், நமக்குக் கீழே உள்ளவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என நினைக்க வேண்டும்…..//
    அஜீவன் நீங்களும் அமைச்சர் போல் குற்றச்சாட்டு ஏதோ இருக்க வேறெங்கோ போய் திசை திருப்புகிறீர்கள்.
    இங்கே குற்றச்சாட்டு போராடுவோர்.. நீதி அல்ல ஒரு அரச அமைச்சர் நீதிபதியையும் நீதிமன்றத்தையும் எதிர்த்து தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை விடுத்தார்… ஊரே எரியப்போகுது என்றார். இத்தனைக்கும் இந்த அமைச்சரில் புத்தளம் மக்கள் கொலைக்குற்றம் வேறு சாட்டியுள்ளனராம். நீதி அமைச்சரோ ஒருபடி மேலே போய் சக அமைச்சர் என்றவகையில் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்கிறார்.

    கேள்வி முஸ்லிம்களின் உரிமை பற்றியதல்ல! திசை திருப்பல் வேண்டாம்.

    தமிழ் பேட்டியில் மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்டதை ஏதோ போகிறபோக்கில் நடந்தது போலவும் ஆனால் அவர்கள் கேட்கும் நட்டஈடுதான் கூடிப்போச்சு என்பதுபோலவும் கதை விடுகிறார் பாருங்கள். ஒரு அமைச்சர் எரித்தது பிழையில்லை ஆனால் நட்டஈடு கூடிப்போச்சு என்கிரார்.


  38. BC on August 1, 2012 8:17 pm

    இந்த கொடுமைகளுக்கு எல்லாம் நீதி கிடைக்க வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்து கொண்டு மியன்மார் மதவாதிகளுக்காக அனுதாபபடும் பெரியவர்களே விரும்புவார்களோ தெரியாது. ஈழம் அமைப்பதிற்காக ஜிகாத், அல்கைடாவின் நட்புக்காக அவர்கள் ஏங்கிகொண்டிருந்த சமயத்தில் மன்னார் பிரச்சனை, ரிஷாத் பதியுதீன் பிரச்சனை என்று வந்து அவர்களுக்கு மிகுந்த தர்மசங்கடத்தை கொடுத்து கொண்டிருக்கிறது.


  39. சாந்தன் on August 2, 2012 1:55 am

    //..சிங்களம் தெரிந்தோருக்கு பேட்டியில் உள்ளவை புரியும். சிங்களம் தெரியாதோருக்கு வீடியோ ஒருசில உண்மைகளை புரிய வைக்கும்…..///

    கீழே நிமலறூபனின் இறுதிச்சடங்கு வீடியோ ….கல்லெறியச்சொன்ன மினிஸ்ரர்… கல்லெறிந்த பாடசாலை அதிபர்கள்…. இருக்கும் நாட்டில் இந்த வீடியோ வந்ததே பெரிய விடயம்.
    இதனை தொடர்பற்ற தலைப்பின்கீழ் பின்னூட்டமாக இடுவதற்கு மன்னிக்கவும்.

    சிங்களம் தெரியாத எமக்கு பின்னணியில் செய்தியாளர் சொல்வதில் நிமலறூபன் எனச் சொல்வது மட்டும்தான் புரியும். அதேவேளை நிமலறூபனில் தாயார் சொல்வது சிங்கலம் தெரிந்தோருக்கும் தெரியாதோர்க்க்கும் புரிவது மட்டுமல்ல காதுகேளாதது போலவும் கண்தெரியாதது போலவும் நடிப்போர்க்கும் ‘புரியும்’. இதனை இங்கே இடுவது புலம்பெயர்ந்தோர் உசுப்பேத்தல் என்ச் சொல்வோரும் உள்ளனர்…

    -http://youtu.be/Ix5xnEKxikI


  40. சாந்தன் on August 2, 2012 1:59 am

    //…அமெரிக்காவில் இருந்து கொண்டு மியன்மார் மதவாதிகளுக்காக அனுதாபபடும் பெரியவர்களே விரும்புவார்களோ தெரியாது…..///
    மியன்மார் பெளத்த மதவாதிகலைத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். சும்மா சொல்லக்கூடாது கப்சிப் ஆகிப்போய் இருக்கிறார்கள். நான் இங்குள்ள பெளத்தர் ஒருவரைக்கேட்டேன் ஆள் கப்சிப்!

    //….. ஈழம் அமைப்பதிற்காக ஜிகாத், அல்கைடாவின் நட்புக்காக அவர்கள் ஏங்கிகொண்டிருந்த சமயத்தில் மன்னார் பிரச்சனை, ரிஷாத் பதியுதீன் பிரச்சனை என்று வந்து அவர்களுக்கு மிகுந்த தர்மசங்கடத்தை கொடுத்து கொண்டிருக்கிறது….//
    ஈழத்தை ஜிகாத் , அல்கைடா நட்புடன் அமைக்க ஏங்குவோர் அமெரிக்காவில் இருக்கின்றனரா? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் பிசி.!…. ……


  41. thurai on August 2, 2012 10:31 am

    //ஈழத்தை ஜிகாத் , அல்கைடா நட்புடன் அமைக்க ஏங்குவோர் அமெரிக்காவில் இருக்கின்றனரா? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் பிசி.!…. ……//சாந்தன்
    இந்தியாவும், அமெரிக்காவும் புலிகளின் தடையை நீடித்தது ஏன்? புலிகள் அழிக்கப்பட்டு விட்டன என்று அவர்கள் ஏன் சொல்லவில்லை? புலிகள் யார் என்பதும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் எங்கெல்லாம் எப்படி வாழ்கின்றார்கள் என்பதும் நன்றாக அறிந்தவர்கள் அவர்கள்.

    புலிக்கொடி தூக்குபவர்கழும், ஆயுதமேந்தி அழிந்த தமிழர்கள் மட்டுமே புலிகள் என்று கருதுவது உலகத்தமிழரின் தனி உலகம் .-துரை


  42. ajeevan on August 2, 2012 11:17 am

    மன்னார் பிரச்சனை தொடர்பாக முஸ்லீம்களுக்கு சார்பாக நீதிபதி நீதிமன்றத்தினுள் நீதி வழங்கிக் கொண்டிருந்த போது அது குறித்து எதையும் அறியாத முஸ்லீம்கள் நீதிமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.

    நீதிமன்ற வழக்குக்காக தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களை நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தும் நீதிமன்றத்துக்கு தமிழ் தரப்பினர் மட்டுமே சமூகமளித்துள்ளனர். முஸ்லீம்கள் சார்பாக ஒரு சட்டத்தரணி சென்றிருந்தாலும் அவரும் நீதிமன்றம் இவ்விடயம் குறித்து தீர்ப்பொன்றை வழக்கலாகாது என வாதாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

    ஆனால் நீதிபதியோ தற்போதைய நிலையில் தமிழர்களுக்கு வாழ்வதற்கு வேறொரு இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒழுங்கு செய்து கொடுத்து விட்டு, முஸ்லீம் மக்கள் வாழ்ந்த இடத்தை மீளவும் முஸ்லீம்களுக்கே கொடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

    இவை எதையும் தெரியாத முஸ்லீம்கள் நீதிமன்றத்துக்கு முன்; நீதிபதி தமிழர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவார் எனக் கருதி அவரை மாற்றம் செய்யுமாறு தொடர்ந்தும்; நீதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்துக்கு இடையூராக இருந்தமையால் போலீசார் மூலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை துரத்துமாறு பணித்துள்ளார். அதையும் செவிமடுக்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிபதிக் கெதிராக கோசமிடும் போது அவர்களை கண்ணீர் புகையடித்து துரத்துமாறு பணித்துள்ளார். அதையும் நிறைவேற்ற முடியாத போதே; நீதிபதி நேரடியாக தனது அங்கியோடு வெளியே வந்து கண்ணீர் புகையடித்து அல்லது தடியடிப் பிரயோகம் செய்து அல்லது காலின் கீழ் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டக் காரர்களை துரத்துமாறு கட்டளை இட்டுள்ளார்.

    முஸ்லீம்களுக்கு சார்பாக நீதிபதி தீர்ப்பு உள்ளே வழங்கியதை தெரிந்து கொள்ளாமல் இத்தனையும் இடம் பெற்றுள்ளது.

    அதற்கான முக்கிய காரணம் முஸ்லீம் தரப்பு நீதிமன்றத்தின் வழக்கிற்கு; கடந்த 2012 .07. 15 மற்றும் 2012.07.18ம் ஆகிய இரு தினங்களும் தமிழ் – முஸ்லீம் இரு சாராரையும் வருமாறு நீதிமன்ற அழைப்பு இருந்தும்; முஸ்லீம்கள் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. தமிழர்கள் மட்டுமே பிரசன்னமாகி இருந்தனர்.

    தமக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டும்; அதை அறியாத முஸ்லீம் மக்கள் செய்த செயலால் நடந்த விபரீதமே இந்தப் பிரச்சனை.

    இது குறித்து திவயினவின் முக்கிய பிரமுகரும் கோட்டாஸ் வோர் ஏனம் புத்தகத்தை எழுதியவருமான சந்திரபிரேம அவர்கள், சிங்களத்தில் அப் பிரச்சைனையின் ஆரம்பம் தொட்டு நடந்த நிகழ்வுகளை கடந்த திங்கட்கிழமை (2012.0730) வம் இவுர எனும் தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

    NB:-இது கட்டுரையில் உள்ள சுருக்க கருத்தாகும் மேலதிக கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

    சிங்கள கட்டுரை இணைப்பு : -http://www.divaina.com/2012/07/30/feature01.html


  43. சாந்தன் on August 2, 2012 1:28 pm

    //…ஆனால் நீதிபதியோ தற்போதைய நிலையில் தமிழர்களுக்கு வாழ்வதற்கு வேறொரு இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒழுங்கு செய்து கொடுத்து விட்டு, முஸ்லீம் மக்கள் வாழ்ந்த இடத்தை மீளவும் முஸ்லீம்களுக்கே கொடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்……///

    மன்னார் சம்பவம் பற்றி முதன் முதலில் நான் அறிந்துகொண்டது இந்தச் செய்தியே. அதாவது மன்னார் நீதிபதி மீனவர்களுக்கு வேறோர் இடம் (ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதி) ஒழுங்குபடுத்திக் கொடுத்துவிட்டு இவ்விடத்தை விட்டு வெளியேற்ரம் என தீர்ப்பு வழங்கி இருந்தார். இதன் பின்விளைவுகளை ஊகித்துக்கொண்ட அரச தரப்பு கல்லெறியை தூண்டிவிட்டது. இப்போது தூண்டிவிட்டவர் மன்னார் முஸ்லிம்களின் நிலை பாரீர் என அழுது வடிகிறார், அரசும் உண்மையைச் சொல்ல முடியாமலும் அமைச்சரை கைதுசெய்ய முடியாமலும் ஆடிக்கொண்டிருக்கிறது!

    இதில் அடுத்த ஜோக்…. மன்னார் முஸ்லிம்கள் (அமைச்சரின் ஆட்கள்) நீதிமன்ற வளாகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடை செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி பொலிசார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் நீதிபதியோ ஆர்ப்பாட்டக்காரர் அவ்வன்முறையில் ஈடுபடுவதற்கு எந்த ஆதாரமும் பொலிசார் சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி தடை உத்தரவுக்கு மறுத்து விட்டார். இத்தனைக்கும் நீதிபதி தனது வாகனத்தில் அம்மக்களைக் கடந்தே சென்றிருக்கிறார். ஆனால் இந்த அமைச்சர் இப்போது… ஐயையோ நீதிமன்றம் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை இல்லையா… என்னே அநீதி என்கிறார். அமைச்சருக்கு தெரியாது அந்த அனுமதியை மறுக்க நினைத்தது அரசு ஆனால் கொடுத்தவர் நீதிபதி என!!

    பாவம் பொலிசார் அமைச்சர் அச்சுறுத்தல் விடப்போகிறார் என அறிந்திருந்ததை வெளியே சொல்ல முடியுமா? சொன்னாலும் சிக்கல் சொல்லாவிட்டாலும் சிக்கல்.


  44. சாந்தன் on August 2, 2012 1:31 pm

    //..இந்தியாவும், அமெரிக்காவும் புலிகளின் தடையை நீடித்தது ஏன்?…..///

    அமெரிக்க தடையில் ஜிகாத்துடனும் அல்கைடாவுடனும் தொடர்பு அதுதான் தடை நீடிப்பு என்று சொல்லி இருக்கா?


  45. thuari on August 2, 2012 2:55 pm

    //அமெரிக்க தடையில் ஜிகாத்துடனும் அல்கைடாவுடனும் தொடர்பு அதுதான் தடை நீடிப்பு என்று சொல்லி இருக்கா?//சாந்தன்

    அமெரிக்கா சொல்லாவிட்டால் தொடர்பிலையென்றோ, சொல்லிவிட்டால் தொடர்பென்றோ எப்போதும் கருத முடியாது.-துரை


  46. roshaen on August 2, 2012 5:47 pm

    திரு செபஸ்டியன் அவர்களுக்கு
    தேசம்நெட்’ வெளியிட்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் பற்றிய ஆக்கத்துக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டம் பார்த்தேன். கடந்தகாலத்தில் மூதூரில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றியும் எழதியுள்ளீர்கள்.
    முதலில் நாம் ஒன்றை மனங் கொள்வோம். இணையதளம் என்பது மக்கள் மத்தியில் சரியான கருத்துருவாக்கத்தைச் செய்யும் பணியை மேற்கொள்கின்ற ஊடகமாகும். அது எமக்குத்தருகின்ற வாய்ப்பை நாம் நேர்மையாகப் பயன்படுத்த வேண்டும்.
    நீங்கள் போட்டள்ள முதூர் வன்முறைகள் தொடர்பான பல விடயங்களுள் சிலவற்றுடன் நான் உடன் படுகின்றேன். ஒரு வேளை மூதூராட்கள் ‘தேசம் நெட்’ஐ பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் நீங்கள் எழுதியள்ளவற்றுடன் என்னால் உடன்பட முடியாதுள்ளது ஏனெனில் நான்மூதூரைச்; சேர்ந்தவன்.
    கடந்த காலங்களில் மூதூர் முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையே வன்முறைச் சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. அது யாவரும் அறிந்த உண்மை. இதனை ஒரு வாதப் பொருளாக எடுத்தால், அதன்பின்னணி, நோக்கம் பற்றியெல்லாம் என்னால் உங்களோடு தாராளமாக வாதிட முடியும். உண்மையில் வாதப் பொருள் நடைபெற்ற விடயங்களாக மாத்திரமே இருக்கவேண்டும். கற்பனைக்கு இடந்தரலாகாது. அப்படியாயின் அதற்கு நான் தயார். என்பதை இங்கு கூறி வவைக்க வீரும்பகின்றேன். ஆனால் இங்கு நான் எடுத்துக்; கொண்ட விடயம் இதுவல்ல.
    பொதுவாக பொய்கள் மூன்றுவகைப்படும் என்பர். 1. புளுகு 2. ஆண்டப்புளுகு 3. புள்ளிவிபரம் என்பர்.
    அது இருக்க, செபஸ்டியன் என்பவர் மூதுர்ர் சேச் ரோட்டில் ஜெகதீசன் சேரின் வீட்டுக்கு முன்னால் வைத்து எனக்கு அடித்துவிட்டார் என வைத்துக் கொள்வோம். உடனே நான் கிறிஸ்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அவர்கள் ஒன்றில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது தண்டித்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டியவர்கள் என நான் கூறினால் அது எந்த வகையில் நியாயமாகும் அதுவொரு பாசிச கருத்தியல் அல்லவா?
    புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் முஸ்லிம்களுக்கு அநீதியிழைத்தால் முஸ்லிம்கள், மொத்த தமிழினத்தையும் எவ்வாறு குற்றம் சுமத்துவது தவறோ அவ்வாறுதான் முஸ்லிம் ஒருவர் ராணுவத்தை சேர்ந்தவராக இருந்தால் அவரை ஒரு ராணுவ வீரராகப் பார்க்கவிரும்பாது அதற்குமப்பால் அவர் சார்ந்த சமுதாயத்தை குற்றஞ்சாட்ட விளைவதுமாhகும்.
    செபஸ்தியன் உங்களது பல குற்றச்சாட்டுக்கள் இந்தப்பணியிலேயே கற்பனையின் உச்சத்தை தொட்டு நிற்கின்றன.
    அவை வருமாறு:
    1. அறுபத்திநாலாம் கட்டை என்ற தமிழ்கிராமத்தை முஸ்லிம்கிராமமாக மாற்றி விட்டார்கள் என்று குற்றம் சாட்டியள்ளீர்கள். அறுபத்திநாலாம் கட்டை எப்போது தமிழ்கிராமமாக இருந்தது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்களுடன் தமிழ்மக்களும் வாழ்ந்தார்கள். என்று எழுதுங்கள்.; சில காணிகளை தமிழ்மக்கள் முஸ்லிம்களிடம் வாங்கி அதற்கு சகாய புரம் என்றும் பெயர்வைத்து இப்போது இரண்டு இனமக்களும் மீள்குடியேறி வாழ்கின்றனர்.என்ற உண்மையை இன ஒற்றுமையை கருத்தில் கொண்டு எழுதுங்கள். (உள்ளுரில் இருந்தால் போய்ப்பாருங்கள். வெளியூரில் இருந்தால் வந்து பாருங்கள்)
    2. ஜெட்டியில் இருந்த புத்தர்சிலைக்கு அருகில் இருந்த தமிழ் மக்கள் விரட்டப்பட்டார்கள் என்கிறீர்களே .ஜெட்டியில் எப்போது செபஸ்டியன் புத்தர் சிலையும் அதற்கு பக்கத்தில் தமிழ்மக்களும் இருந்தனர்?? இது ஒரு புதிய கண்டபிடிப்பல்லவா மட்டுமல்லாமல் இது முன்றாம் வகைப் பொய்யல்லவா? வெளியுலக வாசகர்கள் உண்மையென நம்பிவிடுவார்களல்லவா? இன ஒற்றுமையில் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை உள்ளதா?
    3. மூதூரில் தமிழர் ஒருவர் ஆட்டோ ஓட்டமுடியாது. ஓட்டினால் கொல்லப்படுவார் என்றொரு அபாண்டத்தை கூறியிருக்கின்றீர்கள். இதனை நீங்கள் முதூருக்கு வந்து சேச்சுக்கு முன்னால் நின்று அங்கு காட்சியளிக்கும் குழந்தை ஏசுவைப்பார்த்து சொல்ல முடியுமா? அல்லது முதூரில் உள்ள ஒரு தமிழ் அன்பரை இதற்கு சாட்சி சொல்லச் வைக்க முடியுமா?
    4. முஸ்லிம்கள் கோவிலை உடைத்தார்கள். ஆனால் லிங்க நகரில் பிள்ளையார் கோவிலுக்கு அருகிலேயே உள்ள பள்ளிவாசலை விட்டுவைத்திருக்கின்றோம். ஏங்கள் பெருந்தன்மை பார்த்தீரோ என்கிறீர்கள். செபஸ்டியன்! எனக்கும் லிங்கநகர் தெரியும் .நண்பர்களைத் தெரியும். நீங்கள் சொல்வது போலொரு காட்சி எங்கே இருக்கிறது? வாசகர்களை என்ன நினைத்துக் கொண்டீர்கள். இப்படி ஏரோப்பிளேன் ஓட்டுகிறீர்களே!! உங்கள் பின்னுட்டத்தை லிங்க நகர் வாசியொரவர் வாசித்தால் பரவாயில்லையா?
    5. கிண்ணியாவில் பழைய இறங்கதுறைக்கருகே உள்ள கோவிலை மஹ்ருப் அவர்கள் அருகிலேயுள்ள பள்ளிவாசலுக்கு எடுத்துவிட்டார். இது என்ன நிதி. இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது? முஸ்லிம்களும், முஸ்லிம் காங்கிரசும் தான் பதில் சொல்ல வேண்டும். என்கிறீர்கள். இப்படி பின்னூட்டத்தின் பெயரில் பற்பல கற்பனைகளை எடுத்து விட்டிருக்கின்றீர்கள்.

    அன்பின் செபஸ்டியன் அவர்களே, நீங்கள் மூதூரை நன்கு தெரிந்தவராகையால் கிண்ணியாவையும் தெரிந்து தான் இருப்பீர்கள். பள்ளிவாசலுக்காக எடுக்கப்பட்டுவிட்தென்று கூற்றம் சாட்டிய கோவில் எந்த விக்கினமுமின்றி அதே இடத்தில் அப்படியே இருக்கிறது. அந்த நீண்ட கிண்ணியாப்பாலத்தில் நின்றேனும் அல்லது தாராளமாக காலாற நடந்து அருகில் சென்றேனும் அப்புண்ணியஸ்தலத்தைப் பார்த்தச் செல்லுங்கள். தயவு செய்து உங்கள் கற்பனைக் குதிரையை கட்டுக்குள் கொண்டுவாருங்கள். இது மகா ஆபத்தான சண்டிக்குதிரை.

    இனங்களின் நல்லுறவின் பெரில் அன்பர் செயஸ்டினிடம் ஒரு வேண்டுகோள். திரு. செபஸ்டியன் அவர்களே ஏதோவொரு ஆவேசத்தில் இப்படியெல்லாம் நீங்கள் எழுதிவிட்டதாகத்தான் நான் நினைக்கின்றேன். உலகம் முழுவதும் பார்க்கப்படுகின்ற இணையதலங்களில் எழுதும் போது தயவு செய்து ஆறுதலாக எழுதுங்கள்.


  47. சாந்தன் on August 2, 2012 6:44 pm

    ///..அமெரிக்கா சொல்லாவிட்டால் தொடர்பிலையென்றோ, சொல்லிவிட்டால் தொடர்பென்றோ எப்போதும் கருத முடியாது.-துரை…//
    சுப்பர் பதில், இதேபோல நீங்கள் சொல்லிவிட்டால் உண்மையென்றோ சொல்லாவிட்டால் பொய்யென்றோ கருதமுடியாது!!
    இந்த மாதிரியான பதில்களை எப்போதும் உங்கள் கொசிப்புக்கதைகளுக்கு அன்றி உங்கள் அறிவை வாதத்திறமையை ‘வெளிச்சம் போட்டு’ காட்டவோ வைத்துக் கொள்ளுங்கள். மற்ரவனின் நேரத்தை வீணடிப்பத்ற்கு அல்ல!!

    //…, சொல்லிவிட்டால் தொடர்பென்றோ எப்போதும் கருத முடியாது.-துரை…..//

    ஸ்ரீலங்காவில் பெளத்தர்களினால் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதும் பெளத்தர்களால் தமிழர் பிரதேசங்களில் பெளத்த சிலைகள்/விகாரைகள் கட்டப்படுவதும் தொடர்கிறது எனச் அமெரிக்க அறிக்கையில் சொல்லி இருப்பதைச் சொல்கிறீர்களா துரை?

    தடைசெய்யப்பட்ட காரனம் சொல்லாத படியால் அல்கயிடாவுடன் தொடர்பு இருக்கிரதாம், பெளத்த விகாரைகள் பற்றிச் சொல்லப்பட்டதால் அது பொய்யாகவும் இருக்கலாமாம். சுப்பரோ சுப்பர்!


  48. ajeevan on August 2, 2012 8:33 pm

    roshaen நன்றி!
    இங்கே மன்னாரில் உள்ள பிரச்சனை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். இவர் மூதூரில் நடந்ததாக நம்ப வைக்கும் படி எழுதியிருந்தார். எனக்கு அப் பகுதி தெரியாது. எனவே நானும் இருக்கலாம் என்றே நம்பினேன்.

    தமது எண்ணங்களுக்காக ; தயவு செய்து கருத்துகளை பகிராதீர்கள். அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதுவே தமிழனம் அழிவதற்கு தொடர் காரணமாக இருக்கிறது.

    நானும் மன்னார் பிரச்சனையின் உண்மை தெரியாமல் ஊடகங்களில் வருபவற்றை கொண்டு சில பார்வைகளைக் கொண்டவனாக இருந்தேன். இன்று சந்திரபிரேயோடு பேசும் ஒரு தேவை இருந்தது. அப்போது மன்னாரில் நடைபெறும் பிரச்சனை குறித்து பேசும் போது; தனது கட்டுரையை படிக்கவில்லையா எனக் கேட்டார். அது நியாயமான உண்மைகளை கொண்டு வந்திருந்தது. அவர் தற்கால அரசு சார்பானவராக இருந்தாலும் அவரது கட்டுரை பல விடயங்கைள தெளிபடுத்தியுள்ளது.

    நம்மவர்கள் தூபம் இட்டு இனவாதத்தை பரப்பினர். இப்போது அதைவிடக் கொடிய மத வாதமும் இணைந்துள்ளது. உண்மைகளை எழுதுவோம். அது நிச்சயம் நாளை சமுதாயத்தை நலம் கொண்டதாக அமைக்கும்.


  49. Rohan on August 2, 2012 9:11 pm

    //அமெரிக்கா சொல்லாவிட்டால் தொடர்பிலையென்றோ, சொல்லிவிட்டால் தொடர்பென்றோ எப்போதும் கருத முடியாது.-துரை//

    இப்படியான அருமையான தர்க்கித்தல் பின்னணி கொண்டவரா துரை? (ஆ)சாமி நித்தியானந்தா ஒரு செய்தித் தொடர்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறாராம். துரைக்கு அருமையான வாய்ப்பு இருக்கும். ‘பத்திரிகைகள் சொல்லாவிட்டால் குருவுக்கு ரஞ்சிதாவுடன் தொடர்பிலையென்றோ, சொல்லிவிட்டால் குருவுக்கு ரஞ்சிதாவுடன் தொடர்பென்றோ எப்போதும் கருத முடியாது’.

    கொஞ்சம் உதைக்கிறது. ஆனால் தனது தர்க்கித்தல் திறமையைப் பயன்படுத்தி துரை வென்றுவிடுவார்!!!


  50. சாந்தன் on August 3, 2012 12:26 am

    //…நானும் மன்னார் பிரச்சனையின் உண்மை தெரியாமல் ஊடகங்களில் வருபவற்றை கொண்டு சில பார்வைகளைக் கொண்டவனாக இருந்தேன்…..///

    //….நம்மவர்கள் தூபம் இட்டு இனவாதத்தை பரப்பினர்…..//

    //…. இப்போது அதைவிடக் கொடிய மத வாதமும் இணைந்துள்ளது….//

    //…. உண்மைகளை எழுதுவோம். அது நிச்சயம் நாளை சமுதாயத்தை நலம் கொண்டதாக அமைக்கும்….//

    சிறைச்சாலை அடித்துக்கொலை புலம்பெயர் தமிழர் உசுப்பேத்தியதால் நடந்தது எனும் கருத்துப்பட எழுதியவர் சொல்கிறார் உண்மைகளை எழுதுவோம் என….. அட்வைசையும் அள்ளி வழங்குகிறார்.
    இதில் நம்மவர்கள் ‘தூபமிட்டு’ இனவாதம் பரப்பினராம்.
    இதையும் எப்போது வந்து ”…பிரச்சனையின் உண்மை தெரியாமல் …” என எழுதி அட்வைஸ் அள்ளிவிடப்போகிறாரோ தெரியவில்லை. போகிற போக்கில் ‘நம்மவர்கள்’ ‘தூபம்’ என கதைவிடுகிறார் பின்னர் உண்மைகளை எழுதுவோம் எனவும் சொல்கிறார்.
    எல்லாம் நம்ம நேரம்!

    தான் விட்ட பிழைக்கு மற்ரவர்களில் பழியைப்போடும் தந்திரம் இருக்கே!! சொல்லி மாளாது. முதலில் நான் உண்மையை எழுதுவேன் எனச் சொல்லுங்கள் அஜீவன். பின்னர் மற்ரவர்கள் உண்மை எழுத வேண்டும் என எதிர்பாருங்கள்.


  51. thuari on August 3, 2012 7:52 am

    //காரனம் சொல்லாத படியால் அல்கயிடாவுடன் தொடர்பு இருக்கிரதாம், பெளத்த விகாரைகள் பற்றிச் சொல்லப்பட்டதால் அது பொய்யாகவும் இருக்கலாமாம். சுப்பரோ சுப்பர்!//சாந்தன்

    ஒரு உண்மையை அறிய 100 வருடங்கழுமாகலாம். புலியை எதிர்ப்பவர்களெல்லாம் தமிழரின் துரோகிகள் என விசாரணையின்றி மரணதண்டனை 30 வருடமாக கொடுத்தவர்கள் இலகுவில் திருந்துவார்களா?. -துரை


  52. mohamed Nisthar on August 3, 2012 8:43 am

    அன்புள்ள் றோசின், அஜீவன்,

    ஆகக் குறைந்தது உண்மையுடன் பொய்யை கலக்காமல் கதைப்பவர்களும் தேசத்தில் வந்து போகுறார்கள் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. பொறுத்திருப்பது என்றும் பயனளிக்கும் என்பது இங்கும் கண்கூடு.


  53. Ajith on August 3, 2012 8:50 am

    உண்மைகளை எழுதுவோம். அது நிச்சயம் நாளை சமுதாயத்தை நலம் கொண்டதாக அமைக்கும்.///

    இந்த பரம தத்துவத்தை தேசம்நெட் என்ற ஊடகம் எப்போதோ இழந்துவிட்டது. உண்மைகளை மறைப்போம், பொய்களை பேசுவோம் இதை தமது கடமையாக கொண்டவர்கள் தான் ஏராளம். இங்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் கருத்து கூறுபவர்கள் ஏராளம். இங்கு ஒவொருவரும் தாங்கள் தான் உண்மை பேசுபவர்கள் மற்றவர்கள் பொய் கூறுபவர்கள் என்ற நிலைபாடில் இருந்து மாறுவது இல்லை. இங்கு அரச சார்பு, புலிசார்பு, மதசார்பு, இனம் சார்பு கருத்துகள் தான் முன்நிலைப் படுத்தப்படுவது கண்கூடு. இதில் நான் திறம், நீ திறம் என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. இதனை தவறு என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் நாம் பிறந்து வளர்ந்த அரசியல் வரலாறு அப்படியானது.

    உதாரணமாக இந்த மீன்பிடி பிரச்சினையே எடுத்து கொள்வோம்.
    முஸ்லிம்கள் மீன் பிடித்த இடத்தில தமிழர்கள் மீன்பிடித்தார்கள். அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதனால் ஏற்பட்ட தகராறு.

    இங்கு மீன்பிடி தொழில் இடம் கூட இனரீதியாக தான் பிரிக்கபட்டு உள்ளது.

    இங்கு நாம் இலங்கையர் எல்லோருக்கும் அந்த இடத்தில எல்லோருக்கும் மீன்பிடிக்கும் உரிமை இருக்கவேண்டும் என்பது தானே ஜனநாயக பண்பு.

    இந்த பிரச்சினை மன்னர் முஸ்லிம்களுக்கு உரியது. இதற்கு ஏன் முஸ்லிம் அமைச்சர் தலையிட வேண்டும். ஏன் கிழக்கு, வடக்கு, தெற்கு வாழ் முஸ்லிம்கள் போராடம் நடத்த வேண்டும்.

    இன ரீதியான அரசியல் எப்போது ஆரம்பித்ததோ அப்போதே இந்த நாடு இன ரீதியாக பிளவு பட்டு விட்டது என்பது தான்உண்மை. இந்த பிளவு எக்காலத்திலும் தீர்க்க முடியாத நோயாக முற்றிவிட்டது. இனி எப்போதும் ஒட்டமுடியாது.


  54. info on August 3, 2012 8:56 am

    /பாவம் பொலிசார் அமைச்சர் அச்சுறுத்தல் விடப்போகிறார் என அறிந்திருந்ததை வெளியே சொல்ல முடியுமா? சொன்னாலும் சிக்கல் சொல்லாவிட்டாலும் சிக்கல்./

    அமைச்சர் அச்சுறுத்தல் மன்னன்.
    செஞ்சிலுவைச் சங்கம் தமிழ் விவசாயிகளுக்கு கொடுப்தற்கு கொண்டு வந்த உழவு இயந்திரங்களை நாமலோடு சென்று பறித்து தம் மக்களுக்கு கொடுத்தவரல்லவா? இவரது அழுத்தத்தின் தாக்கத்தில் செஞ்சிலுவை பெண் அதிகாரியே கதறி அழுதாரே! நினைவில்லையா? இவரா கழுகு மரம் ஏறுவதாக அப்பாவியாக அழு மூஞ்சியோடு கதை விடுகிறார்?? செவாலியே விருது வழங்கி கெளரவிப்போம்.!


  55. ajeevan on August 3, 2012 9:00 am

    Report submitted by Mannar GA to Minister Bathiudeen on background incidents in Mannar
    28 July 2012, 7:52 pm
    District Secretariat-Mannar

    (Following is the English translation of the document sent by the Mannar GA to Industries Minister Rishad Bathiudeen highlighting the background to the Mannar incident that started in 2002)
    Issues relating to fishermen settled in Thottaveli and tying boats belonging to them at the pier.

    1.
    This report has been prepared based on the meetings held with the representatives of Pallimunai Fishermen Coop Society, Uppukulam Fishermen Coop Society, Panamkattikottu Fishermen Coop Society.
    As a result of the disturbance occurred in the country, the fishermen of Vidathaltheevu with their families came to Mannar Island through Pallimunai Village in July 1990.
    The Pallimunai villagers provided food for them and directed them to the refugee camps established at Pesalai. While these people were staying in the Pesalai Camp, they were allowed to do fishing through Pallimunai pier for one year.
    At the same time, in 1990 due to disturbances that erupted in Mannar island, the Pallimunai fishermen got displaced and moved to Vidathaltheevu. The Pallimunai fishermen were not allowed to do fishing at Vidathaltheevu through their own boats or through the boats belong to fishermen of Vidathaltheevu.
    There were instances where the Pallimunai fishermen were not allowed to bring their fishing equipment through Vidathaltheevu pier. As there was continuous difference of opinion between the Pallimunai fishermen and Vidathaltheevu fishermen living in the Pesalai camp, the Vidathaltheevu fishermen were expelled from Pallimunai pier. Thereafter, from May 2000 the displaced Vidathaltheevu fishermen had a discussion with the Panamkattikottu fishermen and commenced doing fishing from Panamkatrtikottu pier.
    2.
    During this period, the Vidathaltheevu fishermen had difference of opinion and conflict with Panamkattikottu fishermen and as a result in December 2001, the Vidathaltheevu fishermen were expelled from the Panamkattikottu pier.
    16.03.2002
    The Uppukulam and Vidathaltheevu Fishermen Coop Society members under the chairmanship of Sea Tiger area chief Amuthan had a discussion and arrived at a decision that Kondapitty pier belongs to Uppukulam fishermen and until the situation improves with the permission of the Uppukulam Fishermen Coop Society, the Vidalthaltheevu fishermen could engage in fishing activities and without the permission of Uppukulam Fishermen Coop Society, the Vidathaltheevu fishermen cannot establish fishing huts (waadiya).
    07.06.2005
    As the period granted by Uppukulam fishermen to Vidathaltheevu fishermen has expired, the Vidathaltheevu fishermen had to vacate the Uppukulam pier, and on this matter the Asst. Director of Fisheries had a discussion with the Uppukulam Fishermen Coop Society and permission was granted to do fishing upto 10.08.2005.
    13.05.2005
    The Uppukulam Fishermen Coop Society granted further one year to do fishing after Adaikalanathan M.P. had discussions with the representatives of the Uppukulam Fishermen Coop Society at his District Office.
    3.
    15.06.2006
    At the request of Asst. Director Fisheries, Mannar and Adaikalanathan M.P., the Sri Lanka Fisheries Harbour Corporation issued a letter allowing the Vidathaltheevu fishermen to tie their boats at Mannar Kondapitty Pier (letter attached).
    23.11.2006
    At a meeting attended by Adaikalanathan M.P., Divisional Secretary, Asst. Director of Fisheries Mannar, Fisheries Inspectors of Vidathaltheevu, representatives of the Uppukulam Fishermen Coop Society and representatives of the Uppukulam Mosque Trustee Board, president over by Government Agent the following decisions were taken:
    1. Kondapitty pier belongs to Uppukulam fishermen. On humanitarian grounds, the members of the Vidathaltheevu Fishermen Coop Society to be allowed to do fishing through this pier.
    2. In this respect, the Vidathaltheevu Fishermen Coop Society and Uppukulam Fishermen Coop Society should enter an agreement and implement it (agreement attached)
    3. The agreement should be renewed annually.
    Though the above agreement was prepared as both parties could not agree on certain matters, it was not signed. However, the Uppukulam Society did not bar Vidathaltheevu fishermen doing fishing there.
    19.03.2007
    At a meeting chaired by Government Agent to discuss about Uppukulam village, the Kondapitty pier was discussed as item 12 and it transpired that issues between Uppukulam fishermen and Vidathaltheevu fishermen had been temporarily resolved.
    4.
    07.08.2011
    When the Minister of Fisheries visited Mannar, the Uppukulam fishermen handed over an appeal seeking the assistance on the Minister to settle the Kodapitty pier issue (letter attached).
    03.11.2011
    In response to the appeal handed over to the Minister of Fisheries by Uppukulam fishermen, on the advice of the Asst. Director of Fisheries, a meeting was convened on 03.11.2011 in the presence of the President of the Federation of Mannar District Fishermen Association and representatives of Pallimunai Fishermen Society, Uppukulam Fishermen Society, Erukalampiddy Fishermen Society, Panamkattikottu Fishermen Society and the following decisions were taken:
    1. During the period when Erukalampiddy and Uppukulam fishermen were displaced to Kalpity, the Kalpity fishermen did not allow the Erukkalampiddy/Uppukulam fishermen to do fishing there, they came to Mannar and did fishing through piers at Mannar. Similarly, the Vidathaltheevu fishermen also should get back to Vidathaltheevu and engage in their fishing.
    2. This decision should be conveyed to fishermen settled in Thotaveli (accordingly this decision was immediately conveyed to Vidathaltheevu fishermen settled in Thotaveli).
    3. The Vidathaltheevu fishermen who are settled in Thotaveli and carrying out their fishing through Kodapitty pier should remove their fishing equipment on or before 30.11.2011.
    Though these decisions were conveyed to Vidathaltheevu fishermen living at Thotaveli, they continued to carry on their fishing activities through Kondapitty pier.
    5.
    07.06.2012
    Consequent to continuous pressure exerted by Uppukulam fishermen, a meeting was convened at the Office of the Suptd. Of Police, Mannar on 07.06.2012 and attended by representatives of the Vidathaltheevu fishermen settled in Thotaveli and Uppukulam fishermen. After exchange of various views and ideas, it was decided that a meeting should be convened on 11.06.2012 under the chairmanship of Government Agent and issues to be resolved.
    11.06.2012
    The representatives of Vidathaltheevu fishernen settled in Thotaveli and of Uppukulam fishermen met the Government Agent. As the Divisional Secretary, Mannar and Asst. Director of Fisheries had not attended the meeting, after exchange of views and ideas, it was decided to convene a meeting at the office of the Divisional Secretary, Mannar on 15.06.2012. (Minutes attached).
    15.06.2012
    As this issue has not been resolved during the last 10 years the Asst. Director Fisheries directed that until the anchorage area (Paadu) is resurveyed and allocated, the Vidathaltheevu fishermen settled in Thotaveli should go to Vidathaltheevu and engage in fishing. At this meeting as the issue relating to anchorage area (Paadu) is considered a vital one, Pallimunai and Panamkattikottu fishermen associations were asked to provide temporary facilities to Vidathaltheevu fishermen settled in Thotaveli by the Divisional Secretary, Mannar Town.
    As no constructive decision has been taken at this meeting, it was decided to convene a meeting under the chairmanship of Government Agent soon.
    6.
    26.06.2012
    A meeting was held under the chairmanship of Government Agent at Kachcheri. The following attended the meeting:
    1. Asst. District Secretary
    2. Divisional Secretary, Mannar Town
    3. Asst. Director, Fisheries
    4. Senior Supdt. Of Police
    5. Officers of the Thallady Army Headquarters
    6. Rev. Fr. Thotaveli
    7. President Federation of Mannar District
    8. Representatives of Uppukulam Fishermen Coop Society
    9. Representatives of Panamkattikottu Fishermen Coop Society
    10. Representatives of Erukalampiddy Fishermen Coop Society
    11. Representatives of Pallimunai Fishermen Coop Society
    12. Representatives of Thotaveli Fishermen Village Organization
    Decisions taken:
    1) Permission is granted to put up temporary huts along the sea beach 100 meters long belonging to Coastal Conservative Dept., behind the building of Youth Service Organization which is situated 3 kilometers from Mannar Town and fishermen of Thotaveli to tie their boats at lagoons where Panamkattikottu and Periyakamam fishermen do their fishing activities (in terms of Coastal Maintenance Act No. 67 of 1981).
    2) The permission granted to Thotaveli fishermen is temporary and is valid only upto the surveying and allocated.
    3) The temporary permission granted Thotaveli fishermen to tie the boats at the allocated anchorage area. Their fishing activities should be carried out at Vidathaltheevu sea area.
    4) The Vidathaltheevu fishermen should not behave in a manner detrimental to Panamkattikottu, Pallimunai, Erukkalampiuddy and Periyagamam fishermen during the period Thotaveli fishermen are allowed to tie their boats in the anchorage areas.
    5) The permission granted to Thotaveli fishermen will be cancelled, if it is proved they are found obstructing other fishermen engaged in fishing activities. The Vidathaltheevu fishermen should clean the new temporary areas immediately and engage in fishing activities and they should not use the Kondapity pier.
    Following this the new temporary anchorage area allocated to Vidathaltheevu fishermen has been claimed by Erukkalampiddy and Tharapuram fishermen as their area of fishing activities and they brought their boats the Thotaveli fishermen could not engage in any activities at the temporary anchorage areas allocated to them.
    7.
    13.07.2012
    Without giving any prior notice the Vidathaltheevu fishermen settled in Thotaveli had gone for fishing through Kondapitty pier on 12.07.2012 and 13.07.2012. On 13.07.2012 at about 2pm the people of Uppukulam came to the anchorage area and asked the Vidathaltheevu fishermen to remove the huts.
    During this dispute, the huts were demolished but no damage had been caused to their goods and equipments. At this stage the Police came to the scene and Uppukulam people left the place.
    Sgd:
    Government Agent
    Mannar
    Divisional Secretary,
    Mannar Town
    Asst. Director of Fisheries


  56. பல்லி on August 4, 2012 11:02 am

    :://இந்த பரம தத்துவத்தை தேசம்நெட் என்ற ஊடகம் எப்போதோ இழந்துவிட்டது.//

    காரனம் இதில் கருத்து எழுதும் சிலரும்; தேசநிர்வாகமும் கேட்டதை எழுதாமல் பார்த்ததை எழுதுவதால் தெரியாததை தெரிந்ததாக காட்ட அல்லது விதைக்க முனைபவர்களுக்கு தேசம் ஒரு தேவையற்ற நேசமாக படுகிறது;


  57. Ajith on August 5, 2012 9:15 am

    :://இந்த பரம தத்துவத்தை தேசம்நெட் என்ற ஊடகம் எப்போதோ இழந்துவிட்டது.//

    //காரனம் இதில் கருத்து எழுதும் சிலரும்; தேசநிர்வாகமும் கேட்டதை எழுதாமல் பார்த்ததை எழுதுவதால் தெரியாததை தெரிந்ததாக காட்ட அல்லது விதைக்க முனைபவர்களுக்கு தேசம் ஒரு தேவையற்ற நேசமாக படுகிறது;// பல்லி

    சரியாக சொன்னீர்கள் பல்லி. உதாரணமாக புலிகளின் தலைவர் எப்படி கொல்லபட்டார் என்பதை தேசம்நெட் நிர்வாகம் தாங்கள் அங்கு நின்று பார்த்தவர்கள் மாதிரி எந்தவித ஆதாரமும் கொடுக்காமல் புலிகளின் தலைவர் சரனடைந்ததன் பின் கொல்லபட்டார் என்று எழுதி விளாசினார்களே பல்லி.


  58. சாந்தன் on August 5, 2012 3:55 pm

    //…சரியாக சொன்னீர்கள் பல்லி…..//
    கம்பேகர் சாப்பிட்ட காட்சியை மிகநுணுக்கமான கமராக்களால் பதிவுசெய்துள்ளனர் என ‘செக்ஸ்-அப்’ பண்ணிய விடயம் விட்டுவிட்டீர்களே அஜித்!
    அதுமட்டுமா பின்னூட்டக்கோஷ்டியின் கொசிப்கதைகள், ரோட்டில் (ஐரோப்பிய) பொறுக்கிய கதைகள் என லிஸ்ற் நீளுமே!!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு