நல்லூருக்கு இம்முறை 300பேருக்கே அனுமதி!

புகழ்பெற்ற நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கு இவ்வருடம் 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.
அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லூர் திருவிழாவில் 500க்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *