தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புகளை தாண்டி அரசாங்கம் செல்ல முடியாது – சுமந்திரன்

தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்க்காமல் ஆட்சியாளர்களால் கடந்து போக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எமது தமிழ்மக்கள்  மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டுக்கு வாக்களித்துக் கொண்டிருப்பதனாலேயே ஆட்சியாளர்களால் அதனைக் கடந்து போக முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்  .

வடமராட்சியில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். அதில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

2010ஆம் ஆண்டிலும் தங்களது ஆணை கிடைத்ததாக சொன்னார்கள். பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தங்களுக்குள் வகுத்துக் கொண்டுத்தான் 18ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்கள்.

ஆனால் எங்களுடைய பிரச்சினையை தீர்க்காமல் கடந்து போக முடியவில்லை, அது போகவும் முடியாது.

ஏனென்றால் திடகாத்திரமாக தீர்மானமாக எங்களுடைய மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டிற்கே வாக்களித்து கொண்டிருக்கின்றோம். அந்த ஜனநாயக தீர்ப்புகளை தாண்டி அரசாங்கம் செல்ல முடியாது எனஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *