கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். பரீட்சைப் பெறுபேறுகள் இன்று காலை வெளியாக உள்ளதுடன், மாலையிலேயே இணையத்தளம் மூலம் முடிவுகள் வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் கூறினார்.