இன்று கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு

colo-bomb.jpgகொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள சிகப்பு பள்ளிவாசலின் அருகில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இந்த நேரகுண்டு
வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
colombo-bo.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *