வன்னிக்கான வழித்துணை சேவையை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இடைநிறுத்தியது

aid-loryes1712.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் கட்டுப்பாடற்ற பகுதிக்கும் இடையில் மேற்கொண்டு வந்த வழித்துணைச் சேவையை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தியுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் ரசரி விஜயவர்தன தெரிவித்ததுடன் படையினரும் விடுதலைப்புலிகளும் உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் தமது சேவையை தொடரமுடியுமென்றும் தெரிவித்தார். அரச கட்டுப்பாட்டு பகுதிக்கும் கட்டுப்பாடற்ற பகுதிக்குமிடையில் உணவு லொறி தொடர் அணி மற்றும் மக்களுக்கு வழித்துணை மேற்கொண்டு வந்த நிலையில் இடம்பெற்ற சம்பவமொன்றையடுத்து நாம் எமது சேவையை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தியுள்ளோம்.

படையினரும் விடுதலைப்புலிகளும் உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் சேவையை தொடர்வதற்கு நாம் தயாராகவுள்ளோம் . இரு தரப்புடனும் தொடர்புகளை நாம் வைத்துள்ள நிலையில் இது வரை எந்தவொரு அறிவித்தலும் கிடைக்கவில்லையென்றும் தெரிவித்தார். இதேவேளை வழித்துணை சேவையை செஞ்சிலுவைச் சங்கம் நிறுத்தியதனால் நேற்று முன்தினம் கிளிநொச்சி மற்றும் முல்லைச்தீவு மாவட்டங்களுக்கு செல்லவிருந்த 40 உணவு லொறிகள் செல்லவில்லை

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *