கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி மாணவி மரணம்: இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டது.

திடீரென மரணமடைந்த கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி மாணவியின் இரண்டு கண்களும் இலங்கை கண்தானசபைக்கு தானம் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் முடிவடைந்த க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி மாணவியான பிரதீபிகா ரனசிங்க (17) என்ற மாணவி இரவு உணவு உண்டபோது அது தொண்டையில் சிக்குண்டு சுவாசப்பை வாயிலை அடைத்ததன் காரணமாக மரணமானார்.

இவரது மரண விசாரணையில் மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பெரேரா பிரேத பரிசோதனை நடத்தி சாட்சியமளித்தார். ஹரிகடுவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர். டி. என். பண்டா சாட்சியங்களைப் பதிவு செய்தபின் உணவு சுவாசப் பையினுள் சிக்குண்டதால் ஏற்பட்ட மரணமெனத் தீர்ப்பளித்தார். அதனை அடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி பெற்றோரின் விருப்பப்படி கண்தானம் செய்யப்பட்டதை பாராட்டினார். அடுத்த வாரம் நிட்டம்புவையைச் சேர்ந்த இருவருக்கு இக்கண்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கண்தான சங்கத் தலைவர் ஹட்சன் சமரசிங்கசிங்க தெரிவித்தார். பலகொல்ல பொலிஸார் சாட்சியங்களை நெறிப்படுத்தினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *