பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதி மற்றும் உதவி கொறடாக்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதி கொறடாகவாக பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆளும் கட்சியின் உதவி கொறடாக்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்மகுமார, மொஹமட் முஸ்ஸமில் மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த பதவிகளுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் ஆளும் கட்சியின் பிரதம கொறாடாவான அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.