சகல பிரஜைகளையும் பதிய பாதுகாப்பு அமைச்சு முடிவு

laptop.jpgநாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் பதிவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல மக்களினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு இம்முடிவை எடுத்திருப்பதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

அனைத்து இன மக்களும் தமது விபரங்களை பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்வதற்கு இலகுவாக இணையத்தளம் ஒன்றையும் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

www.citizens.lk

என்ற இணையத்தளம் ஊடாக வீட்டிலிருந்தபடியே தமது விபரங்களை பதிவு செய்ய முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *