மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர், எங்களுக்கு யாரும் விதிமுறைகளை கட்டளையிட முடியாது ! – மஹிந்த ராஜபக்ஸ

அனைத்து சிறுபான்மை கட்சிகளுக்கும் நாட்டுக்கு சேவை செய்ய அரசாங்கத்தில் சேர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பகிரங்க அழைப்பை விடுத்தார்.

சிறுபான்மை கட்சிகள் எங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை வளர்ப்பதில் பங்காளிகளாக இருக்க முடியும், அதில் எவ்வித தடையுமில்லை. ஆனால் அவர்களுக்கு எந்தவொரு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் வழங்கப்பட மாட்டாது, என பிரதமர் ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சில சிறுபான்மை கட்சிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்திருந்தன, ஆனால் அவர்களில் யாரும் இதுவரை உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்தகைய கோரிக்கை ஏதேனும் இருந்தால், நாங்கள் அவர்களை அரசாங்கத்தில் தங்க வைப்போம், ஆனால் அவர்களின் நிபந்தனைக்கு ஏற்ப அல்ல.

மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர், எங்களுக்கு யாரும் விதிமுறைகளை கட்டளையிட முடியாது. என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *