மாதந்தோறும் 1½ கொரோனா தடுப்பூசியை கோடி தயாரிக்க ரஸ்யா முடிவு !

நாளுக்கு நாள் வேகமாக பெரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வழி தெரியாது உலக நாடுகள் ஒருபுறம் திணறிக்கொண்டிருந்தாலும் கூட சிலநாடுகள் கொரோனாவுக்கான மருந்தை உருவாக்கும் முயற்சியில் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஸ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் முன்னணியிலுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஸ்யா உருவாக்கி, அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகிறது.

இந்த தடுப்பூசியை நவம்பர் மாதம் 8 லட்சம் ‘டோஸ்’, டிசம்பர் மாதம் 15 லட்சம் ‘டோஸ்’, ஜனவரியில் 30-35 லட்சம் ‘டோஸ்’ தயாரிக்க ரஸ்யா திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் வசந்த காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) தடுப்பூசி தயாரிப்பை மாதந்தோறும் 1½ கோடி ‘டோஸ்’ அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மந்துரோவ் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *