நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கைப்பெண் !

இலங்கைப் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இதனையடுத்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக இவர் பெருமையை தனதாக்கியுள்ளார்.

நியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், ஹாமில்டனுக்கான கிரிக்கெட் வீரருமான தேசிய வேட்பாளர் ஜேக் பெசன்ட் என்பரை எதிர்த்து போட்டியிட்டு வனுஷி வால்டர்ஸ் தெரிவாகியுள்ளார்.

இதில் பெசாண்டின் 12,727 வாக்குகளையும், வனுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

வனுஷி வால்டர்ஸ் தமது 5 வயதில் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார், இவர் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகவும், மனித உரிமைகள் ஆணையகத்தின் மூத்த மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். இதேவேளை நேற்று நடைபெற்று முடிந்த நியூசிலாந்து பாராளுமன்றத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதுடன்  நியூசிலாந்து பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் மீண்டும் வெற்றி பெற்று பிரதமராகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது !

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *