“கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்கி இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்” – கனடா பிரதமர் ஜஸ்டின்

கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்கி இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “நேற்று 2,674 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,22,887 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,001 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதுவரை 1,86,464 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *