இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிர்ப்பலி – மேலும் இருவர் மரணம் !

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 81 மற்றும் 68 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய உயிரிழப்புக்களுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தற்கொலை செய்து கொண்ட கொரோனா நோயாளியின் மரணம் கொரோனாத்தொற்று வகை மரணத்துக்குள் உள்ளடங்காது என சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *