கொரோனா தொற்று அச்சத்தால் இருவர் தற்கொலை !

உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக பல இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றாளர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் உலக நாடுகள் கனிசமாக மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக இலங்கையில் கொரோனா மூன்றாம் கட்ட பரவல் ஏற்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் தொற்றாளர்களுடைய தொகையும் அதிகரித்த வண்ணமுள்ளது. மேலும்  தற்போது பரவும் வைரஸ் மிக வேகமாக தொற்றக்கூடியது என இலங்கையின் பல்கலைகழக ஆராய்வு முடிவுகளில் கூறப்பட்டிருந்தது.அதே நேரத்தில் கொரோனா வைரஸால் இறப்பவர்களுடைய தொகையும் இலங்கையில் கனிசமாக அதிகரித்துள்ளது. இது மக்களிடையே கொரோனா தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக இருவேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி களுத்துறை – அகலவத்தையை சேர்ந்த (56-வயது) இ.போ.ச பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு நேற்று (08) தற்கொலை செய்து கொண்டார்.

நாகொடை வைத்தியசாலை ஊழியர்கள் பலரை அவர் ஏற்றிச் சென்ற நிலையில் கொரோனா தொற்றலாம் என்ற அச்சத்தில் இருந்தார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

கம்பஹா – ஜாஎலவை சேர்ந்த (72-வயது) பெண் நேற்று முன் தினம் (07) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் முன்னதாக கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர் கவலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *