எந்த ஒரு விமானமும் இலங்கை வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவவில்லை -விமானப் படை பேச்சாளர்

air.jpgஎந்த ஒரு விமானமும் இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி ஊடுருவவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை விமானங்கள் எதுவும் அத்துமீறி ஊடுருவவில்லை என்பது உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. விமானப் படைப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில், கடந்த 20ம் திகதி விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தை தவிர வேறு எந்த ஒரு விமானமும் இருந்ததற்கான எது வித தடயங்களும் ராடர்களில் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஸ்வமடு வான்பரப்பில் 2100 அடி உயரத்தில் இரவு 8.00 மணியளவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எமது விமானம் ஆகாயத்தில் சிவப்பு நிற ஒளிக்கீற்றை அவதானித்தது. அதேபோன்று 8.50 மணியளவில் சுண்டிக்குளம் பிரதேசத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் அதே சிவப்பு நிற ஒளிக்கீற்று தென்பட்டுள்ளது. அதேசமயம் கடற்படையினரும் இதனை அவதானித்துள்ளனர். ஓமந்தை, பலாலி ஆகிய பிரதேசத்திலும் கீழ் வானத்தில் இந்த ஒளிக்கீற்று தென்பட்டுள்ளது. இது செய்மதியிலிருந்து கசியும் ஒளியென்பது எமது ராடர்களின் பதிவுகளிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் இது போன்ற ஒளி, வான் பரப்பில் அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *