கிளிநொச்சியில் 40 வயதுடைய ஆண் இனந்தெரியாத நபர்களால் வெட்டிப்படுகொலை !

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 40 வயதுடைய ஆண் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செம்பியன்பற்று வடக்கு மாமமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான தனபாலசிங்கம் குலசிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *