பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதிக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பாணை

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மனித உரிமைகள் சரத்துக்கு முரணாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செய்த முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளரையும் இராணுவத் தளபதியையும் ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு கேட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது முறைப்பாட்டாளரான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சார்பில் சட்டத்தரணி சந்திரபால குமாரகே ஆஜராகவிருப்பதாகவும் மேலும் சில சட்டத்தரணிகள் தன்னிச்சையாக ஆஜராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய விசாரணையை அவதானிப்பதற்காக மனித உரிமைகள் அமைப்புகள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சமயத் தலைவர்கள் பலரும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *