பிரபாகரன் தொடர்பான புலனாய்வுத் தகவலை இந்தியாவிடம் பெற்றுக்கொள்ள மலேசியா முயற்சி

Pirabaharan_Eelamவிடுத லைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கும் இடங்கள் பற்றிய புலனாய்வுத் தகவலை இந்தியா மற்றும் இன்ரர்போலிடமிருந்து பெற்றுக்கொள்ள மலேசியா விரும்புகின்றது. இது தொடர்பாக மலேசிய பொலிஸ் மா அதிபர் மூஸா ஹுசெய்னிடமிருந்து உத்தியோகபூர்வமான கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப் படவில்லையாயினும் இடம்பெறும் விசாரணைகள் மலேசியா இந்தப் பாதையில் செல்வதை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று “இந்து” பத்திரிகை  திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.

மலேசிய அரசாங்கத்தின் இவ் விசாரணைகள், பிரபாகரன் ஏற்கெனவே வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டார் என ஊடகங்கள் வெளியிட்ட ஊகங்களை அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்று வருகின்றன. இவ் ஊகங்கள் மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், புலிகள் அமைப்புடன் தொடர்புடையதென கருதி, ஒரு வருடத்தின் முன்னர் தடை செய்யப்பட்ட “இந்துராவ்’ என்ற மலேசிய, அமைப்பிற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *