சிவஜோதி என்னும் ஒரு சமூகப்போராளி !

லிற்றில் எய்ட் இன் ஒரு தூணாக இருந்து சமூக முன்னேற்றத்திற்காகப் போராடி வந்த சிவஜோதியின் இழப்பு எமது அமைப்பிற்கும் எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பு! அவருடைய சமூக போராட்டத்தையும் சமூகப் பணிகளையும் முன்னெடுப்பதே நாங்கள் அவருக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த அஞ்சலி.
ஒரு மிகச் சிறந்த தோழனை இழந்து தவிக்கின்றோம். சாதி மத பேதம் கடந்து மனிதத்தை நேசித்த ஒரு மனிதன். மனிதருள் மாணிக்கம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்புத் தமிழ்ச்சங்கம், கிளிநொச்சி கலை இலக்கிய நண்பர் வட்டம், மக்கள் சிந்தனைக்களம் – கிளிநொச்சி, நூலகம், இலக்கியச் சந்திப்புகள் ஆகியவற்றோடு இணைந்து
பங்காற்றிய சிவஜோதி, நல்லதொரு நாடகக் கலைஞர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் பல நாடகங்களில் நடித்தவர். தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர்.
இறுதியாக கிளிநொச்சியில் உள்ள Little Aid பொது
அமைப்பின் இலவசக் கணினிக் கல்வி மையத்தின் நிர்வாக இயக்குநராகச் செயற்பட்டார்.
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவஜோதியின் இறுதி வணக்க நிகழ்வுகள் சுழிபுரத்தில் இன்று (31.12.2020) வியாழக்கிழமை நடைபெறுகிறது.
Image may contain: 1 person, text that says "சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வாழ்ந்து காட்டிய சமூகப் போராளி வி.சிவஜோதி அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் அமரர் வைத்தீஸ்வரன் சிவஜோதி தோற்றம் 1971.11.18 மறைவு 2020.12.30 அவரது பிரிவால் வாடும் துணைவி யார், உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். லிற்றில் எய்ட் கிளிநொச்சி"
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *