விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். வன்னிக் காட்டுப் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகுதியை மதித்து நடப்பதாகவும், ராஜபக்சே தெரிவித்ததாக பிரணாப் கூறியுள்ளார். அவசர பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்று வரும் போரில், அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைக் குறித்த தனது கவலையை அவரிடம் தெரிவித்ததாக பிரணாப் கூறினார்.
அதற்கு ராஜபக்சே போரில் அப்பாவி தமிழர்களின் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாக பிரணாப் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடக்கும் போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உணவு, உடை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொக்கலகாமா மற்றும் சில அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. இதற்கிடையே வன்னிப்பகுதியில் போரில் காயமடைந்த 300க்கும் மேற்பட்ட தமிழர்களை காப்பாற்ற உதவ தயார் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
palli
குறைக்கவா,,??? நிறுத்தவா???