தென்னாபிரிக்கா எதிர் இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி – தென்னாபிரிக்காவுக்கு முதல் இனிங்சில் 302 ஓட்டங்கள் !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நேற்றையதினம் ஆரம்பித்திருந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல இலக்குகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித 60 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணியின் வீரரான அன்ரிச் நொக்கியா 6 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி இன்றைய இடண்டாம் நாளில் சகல இலக்குகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் டீன் எல்கர் 127 ஓட்டங்களையும் வான் டெர் டஸ்ஸன் 67 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் விஷ்வ பெர்ணான்டோ 5 இலக்குகளையும், அசித பெர்ணான்டோ மற்றும் தசுன் சானக தலா 2 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியை விட 145 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

தன்னுடைய இரண்டாது இனிங்சுக்காக களமிறங்கியுள்ள இலங்கை அணி 92 ஓட்டங்களுக்கு தன்னுடைய 03 இலக்குகளை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *