வீணாகிப்போனது திமுத் கருணரத்னவின் சதம் – தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல இலக்குகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித 60 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணியின் வீரரான அன்ரிச் நொக்கியா 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி சகல இலக்குகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் டீன் எல்கர் 127 ஓட்டங்களையும் வான் டெர் டஸ்ஸன் 67 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் விஷ்வ பெர்ணான்டோ 5 இலக்குகளையும், அசித பெர்ணான்டோ மற்றும் தசுன் சானக தலா 2 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல இலக்குகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் சார்ப்பில் அணித் தலைவர் திமுத் கருணரத்ன 103 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

அதனடிப்படையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 66 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை விளையாடிய தென்னாபிரிக்கா அணி இலக்குகள் இழப்பின்றி 67 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

அதனடிப்படையில் 2-0 என்ற ரீதியில் தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *