“எனது தந்தை உட்பட இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அம்பாறை ஆற்றிய உரை தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார் .

அண்மையில் அம்பாறை , உஹனவில் உள்ள லாத்துகல ள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற ” கிராமத்துடன் உரையாடல் ” நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது தனது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பினை வழங்குமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் 82நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆற்றிய உரைக்கு ஜனாதிபதி பதிலளித்தமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடும் போது ,

ஜனாதிபதியின் இந்த ‘வலுவான’ பதிலை ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத ஒரு தீவிர அறிக்கையாக தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனது தந்தை உட்பட இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரபாகரன் ஒரு பயங்கரவாதி.

ஆனால் ஹரின் பெர்னாண்டோ இந்த நாட்டின் இளம் தலைவர், இந்த நாட்டின் ஜனநாயக சட்டத்திற்குள் அச்சமின்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என சஜித் கூறினார். 8293ஷ

82963.ஹரின் பெர்னாண்டோவுக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை ஐக்கிய மக்கள் சக்தியின் முழு நாடாளுமன்றக் குழுவிற்கும் விடுக்கப்பட்டதாக கருதுவதாக குறிப்பிட்டார்.

மேலும் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *