ஜப்பானிலும் புதிய வகை கொரோனா வைரஸ்..!

ஓராண்டு முடிவடைந்து இரண்டாவது ஆண்டாகவும் கொரோனா வேகமாக உலகம் முழுதும் பரவி வருகின்றது. இதற்கிடையில் புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவலும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளதுடன் பிரான்ஸ், இந்தியா , என பல நாடுகளில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் , பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *