தனது மனைவியை மீள இலங்கைக்கு அழைத்து வரக்கோரி கணவர் தொலைத்தொடர்பு கோபுரம் மீதேறி போராட்டம் !

கம்பஹாவில் வதியும் கப்பல் தள பணியாளர் ஒருவர் தனது மனைவியை ஜோர்தானிலிருந்து திருப்பி அழைக்குமாறு கோரி நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைத்தொடர்பு கோபுரம் மீதேறி போராட்டம் ஒன்றை நடத்தினார்.

இவரது மனைவி (24வயது) கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஜோர்தானில் தொழில்புரிந்து வருகிறார். தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

இந்த அவல நிலை குறித்து அப்பெண்ணின் கணவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது மனைவியை திருப்பி அழைக்க விரும்பினால் 4 லட்சம் ரூபா பணம் தருமாறு கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நபர் தொலைத்தொடர்புக் கோபுரம் மீதேறி போராட்டம் செய்த பின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் கலந்துரையாட உடன்பட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *