மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய புதிய ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமனம் !

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் உரிய முறையில் செயற்பட்டனவா? என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மூவர் கொண்ட புதிய குழுவை நியமித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான இந்த குழுவில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ ஓய்வு பெற்ற பிரதேச செயலாளர் நிமால்அபயசிறி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்தனவா? மனித உரிமை மீறல்கள் உறுதிசெய்யப்பட்டால் ஏதாவது நடவடிக்கை எடுத்தனவா? என ஆராய்வதே புதிய ஆணைக்குழுக்களின் நோக்கம்

இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் ஒரு மாதகாலத்திற்குள் இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *