“கொரோனா வைரஸ் மருந்தினை நன்கொடையாக வழங்கும் நாடுகளிடமிருந்து பெறுவதே அரசின் நோக்கம்” – இராஜாங்க அமைசசர் சன்ன ஜயசுமன

“கொரோனா வைரஸ் மருந்தினை நன்கொடையாக வழங்கும் நாடுகளிடமிருந்தும் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்தும் ஆகக்கூடியளவிற்கு பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம்” என இராஜாங்க அமைசசர் சன்ன ஜயசுமன தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

அஸ்டிராஜெனேகா நிறுவனம் ஐந்து இலட்சம் மருந்துகளை வழங்குவதற்கு இணங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அதன் பின்னர் இன்னொரு தொகுதி மருந்துகள் நன்கொடையாக கிடைக்கவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து மருந்தினை நன்கொடையாக பெறுவதற்கு சீனாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிடமிருந்தும் கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான மருந்தினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *