தற்காலிக யுத்தநிறுத்தமொன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

louis-michel-in.jpgஇலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதநேயப் பணிகளின் ஆணையாளர் லூயிஸ் மைக்கல் தெரிவிக்கையில்;

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்திற்குள் அகப்பட்டிருக்கும் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த யுத்தம் மாபெரும் மனித அவலத்திற்கு வழிகோலும். வடக்கு, கிழக்கில் போரிற்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிக்கிறது.

பொதுமக்கள் இழப்புகளை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இருதரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட யுத்தம் நடைபெறாத பகுதிக்குள் பொதுமக்களைப் பாதுகாத்து அவர்களுக்குரிய மனித நேய பணிகளை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். இதற்காக தற்காலிக யுத்த நிறுத்தமொன்று உடனடியாகத் தேவை.

வன்னிப் பகுதியில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் அநேகமானோர் காயமடைந்தும் போதிய மருத்துவ வசதி இன்மையால் அல்லலுறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *