கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரை நடத்தப்படும்; யாழ். தேவி ரயில் சேவைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மதவாச்சி வரை மாத்திரமே நடைபெறும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா- மதவாச்சி இடையிலான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.