இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் – இந்தியா அசத்தலான வெற்றி! 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ஓட்டங்களில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 இலக்குகளை சாய்த்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலி 53 ஓட்டங்கள் சேர்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ஓட்டங்களில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ஓட்டங்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 இலக்குகளையும், ஜேக் லீச் 4 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 33 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் சுழலில் இங்கிலாந்து 81 ஓட்டங்களில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 இலக்குகளையும், அஷ்வின் 4 இலக்குகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 இலக்கையும் வீழ்த்தினர்.
81 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து சுருண்டதால் 48 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் விளாசினர். இதனால் 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ஓட்டங்கள் எடுத்து இந்தியா 10 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.
அக்சார் பட்டேல் முதல் இன்னிங்சில் 6, 2-வது இன்னிங்சில் 5 என 11 இலக்குகள் சாய்த்தார். அஷ்வின் முதல் இன்னிங்சில் 3 2-வது இன்னிங்சில் 4 இலக்குகள் என 7 இலக்குகள் சாய்த்தார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *