இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 60,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று – 300 பேர் வரை பலி !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் நேற்று கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 312 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 1,19,71,624 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 1,61,552 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்திகதி நிலவரப்படி ஒரு நாள் பலி எண்ணிக்கை 300 என்ற அளவில் இருந்தது. அதன்பிறகு உயிரிழப்புகள் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இந்தஆண்டில் முதல் முறையாக நேற்று பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகபட்சமாக மராட்டியத்தில் 166 பேரும், பஞ்சாபில் 45 பேரும் இறந்துள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 54,073, கேரளாவில் 4,567, கர்நாடகாவில் 12,492, ஆந்திராவில் 7,203, தமிழ்நாட்டில் 12,659, டெல்லியில் 10,997, உத்தரபிரதேசத்தில் 8,783, மேற்கு வங்கத்தில் 10,322, சத்தீஸ்கரில் 4,061, குஜராத்தில் 4,484, பஞ்சாபில் 6,621 பேர் அடங்குவர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் உள்ள 15 மாநிலங்களில் நேற்று தினசரி பாதிப்பு ஜனவரியில் இருந்து இதுவரை இல்லாத அளவில் நேற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. நேற்றைய மொத்த பாதிப்பில் மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மட்டும் சுமார் 80 சதவீதம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மராட்டியத்தில் மட்டும் 35,726 பேர் அடங்குவர். கேரளாவில் 2,055, கர்நாடகாவில் 2,886, தமிழ்நாட்டில் 2,089, டெல்லியில் 1,558, உத்தரபிரதேசத்தில் 1,102, சத்தீஸ்கரில் 3,162, குஜராத்தில் 2,276, மத்தியபிரதேசத்தில் 2,142, அரியானாவில் 1,383, பஞ்சாபில் 2,805 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பில் மராட்டியத்தில் 25,73,461, கேரளாவில் 11,15,777, கர்நாடகாவில் 9,83,930, ஆந்திராவில் 8,97,810, தமிழ்நாட்டில் 8,77,279, டெல்லியில் 6,55,834, உத்தரபிரதேசத்தில் 6,12,403, மேற்குவங்கத்தில் 5,83,839 பேர் அடங்குவர்.
எஞ்சிய மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து நேற்று 28,739 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,23,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 4,86,310 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மராட்டியத்தில் மட்டும் 3,04,809 பேர் அடங்குவர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, நாடு முழுவதும் இதுவரை 24.09 கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 11,81,289 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *