யாழ். மத்திய கல்லூரி விளையாட்டரங்கு படையினரால் நவீனமயப்படுத்தப்படும்

jaffna-c-college-01gif.jpgயாழ்ப் பாணம் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தை நவீனப்படுத்தி பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வளப்படுத்துவதற்காக சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்காக படைத்தரப்பினர் மாற்றியமைத்துக்கொடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண நகரகட்டளைத்தளபதி பிரிகேடியர் ஜே. எப். குலதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 61 ஆவது சுதந்திரதினத்தையொட்டி யாழ்ப்பாணம் நகரப் பாடசாலைகளுக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான நூல்களை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வில் பிரதான உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வைபவம் யாழ்ப்பாணம் இராணுவ மக்கள் தொடர்பக வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாணவர்களுக்கான நீச்சல் தடாக நிர்மாணப்பணிகள் 3 மாதத்தில் பூர்த்தியாகும். எனது நிர்வாகத்திற்குட்பட்ட பிரதேச பாடசாலைகள் விளையாட்டுத்துறையை மேம்படுத்த கோரிக்கைகளை சமர்ப்பித்தால், பாதுகாப்புப்பிரிவினர் விளையாட்டு உபகரணங்களையும் மற்றைய உதவிகளையும் வழங்குவர் எனவும் பிரிகேடியர் குலதுங்க தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மாகாணக்கல்விப்பணிப்பாளர் வே.தி. செல்வரட்ணம் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம் உட்பட பல்வேறு கல்லூரி அதிபர்களும் பிரசன்னமாயிருந்தனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *