இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு – மக்கள் கொண்டாட்டம் !

இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டதையடுத்து, அந்நாட்டு மக்‍கள் தங்களது நண்பர்களுடன் மதுபான விடுதிகள் மற்றும் ஹோட்டல்களுக்‍கு சென்று குதூகலமடைந்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் கொரோனாவைக்‍ கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டது. பொதுமக்‍கள் கூடுவதை தவிர்க்‍கும் வகையில், முழு ஊரடங்கை அந்நாட்டு பிரதமர் Boris Johnson அமல்படுத்தினார். ஊரடங்கை மீறியவர்களுக்‍கு அபராதம் விதிக்‍கப்பட்டது. எப்போதும் சுதந்திரமாக இருக்‍கும் இங்கிலாந்து மக்‍கள், இந்த ஊரடங்கால் கடுமையான மன உளைச்சலுக்‍கு தள்ளப்பட்டனர். இதனால் ஊரடங்கை தளர்த்துமாறு ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளது. வெளியே செல்லும் பொதுமக்‍கள் எச்சரிக்‍கையுடனும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் உற்சாகமடைந்த அந்நாட்டு மக்‍கள், தலைநகர் லண்டனில் உள்ள மதுபானக்‍ கடைகளில், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சென்று ஆனந்தமாய் மது அருந்தி மகிழ்கின்றனர். மேலும், ஹோட்டல்களுக்‍கு சென்றும் குதூகலமடைந்து வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *