அமெரிக் காவின் மெரிலான்ட் பகுதியில் செயற்பட்டுவந்த தமிழ்கள் அமைப்பின் சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிவந்ததாகக் கூறியே இந்த அமைப்பை அமெரிக்கா தடைசெய்துள்ளது.
இந்த அமைப்புடன் எந்தவிதமான வங்கிச் செயற்பாடுகளையோ, வர்த்தகச் செயற்பாடுகளையோ பேணக்கூடாதென அமெரிக்கா அறிவித்துள்ளது.
“தமிழீழ விடுதலப் புலிகளும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப் போன்றதொரு அமைப்பே. அறக்கட்டளைகளை உருவாக்கி நிதிசேகரித்து அவற்றை வன்முறையுடன்கூடிய தமது கொள்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்” என அமெரிக்க திறைசேரியின் வெளிநாடுகளின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் அலுவலகத்தின் பணிப்பாளர் அடம் சுய்பின் கூறினார்.
இதேவேளை, அமெரிக்காவிலிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைமாளிகையின் உத்தரவுக்கமைய தடைசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் பவுண்டேஷனின் சொத்துக்களை முடக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை பாராட்டு
எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு உதவி வழங்கும் தமிழ் பவுண்டேசனின் சொத்துக்களை முடக்குதவற்குத் தீர்மானித்த அமெரிக்க அரசாங்கத்துக்கு இலங்கை பாராட்டுத் தெரிவித்ததுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக எந்தவொரு அமெரிக்க பிரஜைக்கும் தமிழ் பவூண்டேஷனோடு எந்தவிதக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இயங்கும் அரக்கட்டளை தமிழ் நிறுவனங்கள் மூலம் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் தமது நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிக்கின்றனா என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியூள்ளனா;.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாதிகளின் பட்டியலில் 1997 ஆம் ஆண்டில் அமெரிக்கா இணைத்தது. தமிழா புனாவாழ்வூக் கழகமும் புலிகளுக்கு உதவியதால் 2007 ஆம் ஆண்டில் அதன் சொத்துக்களையூம் அமெரிக்க முடக்கியது என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
Kullan
தமிழர் என்று ஒருமைப்படாமல் புலிகளின் கொடிகளைப் பிடித்துக்கொண்டு திரிந்தால் உதுதான் நடக்கும். தமிழ் மக்களே உலகின் மொழி உங்களுக்குப் புரிவதில்லையா? . புலி கொடியைப் பிடிக்கிற அனைவரும் பயங்கரவாதிகள் என்பது தான் உலகின் முடிவு. உங்கள் ஊர்வலங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்கள் யாருடைய கவனத்தையும் ஈர்த்ததாகத் தெரியவில்லை.காரணம் இன்னுமா விளங்கவில்லை. அது சரி மனிதரின் மொழியையும் உணர்வுகளையும் புரியாதவரை எந்தப்போராட்டமும் வெற்றியழியாது. தெருத்தெருவாகக் கத்திக்கொண்டு திரியவேண்டியது தான். நாம் சொல்லும் செய்தி மற்றவர்களுக்குப் புரியவில்லை என்றால் அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்லுங்கள் இல்லையென்றால் புலிகளுடன் தொடர்பு என்று எல்லா அமைப்புகளும் தடை செய்யப்படும்.
பார்த்திபன்
புலிகளுடன் தொடர்பு என்று தடைசெய்யப்படும் அமைப்புகள் மில்லியன் கண்க்கான பணங்களை பாதிக்கப்பட்ட வன்னி மக்களக்கென்று சேகரித்து புலித்தலைவர்களும் புலிப்பினாமிகளும் உல்லாசமாக வாழவே பயன்படுத்தினார்கள். முன்பு கனடாவில் உலகத்தமிழர் அமைப்பும் இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் இன்று அமெரிக்காவில் தமிழர் பெளண்டேசன். இவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மில்லியன் கணக்கில் பணம் வைத்துக் கொண்டு பணமில்லை பணமில்லை என்று மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி பணம் சுருட்டினார்கள். இவர்கள் சுருட்டிய பணத்தை இப்போ அந்தந்த நாட்டு அரசுகள் சுருட்டிவிட்டன. மொத்த்த்தில் நாமம் கிடைத்தது வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கே. எத்தனை அமைப்புகள் பறி கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் புதிய பெயர்களில் சுருட்டல்கள் தொடரவே செய்கின்றன. காரணம் ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருப்பான் என்பதால்.
BC
புரிந்து கொள்ள முயற்ச்சிக்க மாட்டார்கள். ஓபாமாவை இனி திட்ட தொடங்குவார்கள்.
accu
இன்று வெளிநாடுகளில் ஏதேதோ பெயர்களில் தொடங்கி என்னென்னவோ தேவைகளை எல்லாம் சொல்லி பணம் வறுகும் அத்தனை அமைப்புகளும் புலி சார்ந்ததே! எம்ஜிஆர் படங்களில் வில்லன்களை மடக்க எம்ஜிஆர் மாறுவேசங்களில் வருவார். வில்லன்களுக்குத்தான் அவர் யாரெனத் தெரியாது. ஆனால் படம் பார்க்கும் எல்லோருக்கும் எம்ஜிஆரை கண்டவுடன் விளங்கிவிடும். அப்படித்தான் இவர்கள் என்ன பெயர்களில் வந்தாலும் இவர்கள் யார் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.
இங்கே கோடிகோடியாக சேர்க்கும் பணத்தில் இவர்கள் ஏதாவதொரு மனிதாபிமானப்பணி அங்கு அல்லலுறும் மக்களுக்குச் செய்தார்களா? போர்ப் பகுதியில் இருந்து வெளியேறி அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் கரிசனை பேசும் இவர்கள் அவர்களுக்கு ஒரு பிடி சோறு போட்டார்களா? அவர்களுக்கு தனி மனிதர்களாக பலர் தம்மால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள். ஆயர்கள் போய் பார்த்து ஆறுதல் சொல்கிறார்கள். உதவுகிறார்கள். இவ்வாறு வருகை தந்துள்ள மக்களின் உணவுத் தேவைக்காக தெரண சரண எனும் நிவாரணத் திட்டத்தின் மூலம் 20ஆயிரம் உணவுப் பொதிகள் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு நேற்றைய தினம் கையளிக்கப் பட்டதாகவும் தெரியவருகின்றது. ஆனால் வெளிநாடுகளில் விளம்பரம் போட்டு பணம் திரட்டிய கூட்டங்கள் யாரும் இத்தகைய உதவிகள் செய்யவில்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்கள் இந்தியா மலோசியா போன்ற நாடுகளில் இருந்து பிரமுகர்களை அழைத்து அவர்களுக்கு வாரிவழங்கும் பணத்தின் முடிச்சில் ஒரு பகுதியாவது இந்த அகதிகளுக்கு செலவு செய்யத் தவறிவிட்டார்கள் என்பது தான் இன்றைய நிலை. இந்த மேய்ப்பன்கள் உங்களை மேய்க்கட்டும். இப்படியே தலையை அடகு வைத்திட்டு இருங்கள் அவர்கள் அதில் மிளகாய் அரைக்கட்டும்.
palli
புலிகள் ஒரு புருடா கதை அடிக்கடி சொல்வதுண்டு. அரசு வேண்டும் ஆயுதம் எல்லாம் எமக்குதானே (பறிப்போம்) ஆகவே அரசின் ஆயுத கொள்வனவு பற்றி புலிதமிழர் கவலையடைய வேண்டாம். இதை புலம்பெயர் புலிகள் சொல்லும் போது அவர்களது உடம்பில் அனைது நாடிகளிலும் ரத்தம் கட்டுபாடு இன்றி ஓடுவதை கவனிக்கலாம் .இது ஒருவகை ஏமாற்று.
அதேபோல் அரசு இன்று சொல்லுகிறது. புலம்பெயர் புலிகளுக்கு கொடுக்கும் பணத்தைபற்றி யாரும் (அரசுசார்பானவர்கள்) கவலை வேண்டாம். சேரும் பணம்அனைத்தும் பக்குவமாக சில நாடுகளில் அரசு வேண்டியகடனை திருப்பி செலுத்தும். கனடா; லண்டன்; அமெரிக்கா; ஜேர்மன்; பாரிஸ், இத்தாலி; இப்படி பலநாடுகளில் எமது கடன் தொகையில் இருந்து ஒருபங்கை புலிப்பணம் கட்டிவிட்டது. (புலியிடம் இருந்து பறிக்கபட்ட பணம்) ஆகவே புலிகளை அழிக்க(சேர்த்து தமிழ் மக்களையும்) ஆயுதம் வேண்ட புலம்பெயர் புழிகள்தான் நிதிஉதவி இதுவரை செய்கின்றனர். என்பதை மறுப்பதற்க்கில்லை. ஆகவே சர்வதேசத்திடம் அதை கொடாதே இதை கொடாதெ என்பது போல் நீங்களும் புலியின் பேரைசொல்லி பணம் செர்க்கும் சிலரை கவனியுங்கள் . சிலஉன்மை தெரியும். இதுவரை எந்தெந்த நாட்டில் எவ்வளவு பணம்(நீங்க கொடுத்த) தேங்கி உள்ளது என்பதையாவது பணத்துக்கு மகுடி ஊதுபவர்களை கேக்க மறக்க வேண்டாம். நீங்க இங்கு கொடுக்கும் பணம் வன்னி போவது உன்மை. ஆனால் புலிக்கோ தமிழர்க்கோ அல்ல. அரசுக்குதான் என்பது நிழல் அல்ல நிஜம்.
பல்லி