373 சிவிலியன்கள் பாதுகாப்புப்புத் தேடி வந்துள்ளனர்.

vanni.jpgவிடுவிக் கப்பட்ட பகுதியையான விஸ்வமடு, குரவிக்குளம் பகுதியை நோக்கி பாதுகாப்புத் தேடி மேலும் 373 சிவிலின்கள் கடந்த 48மணித்தியாலத்துக்குள் வந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை ( பெப்:11) 254 சிவிலியன்கள் விஸ்வமடு வடக்கிலிருந்து வந்துள்ளனர்.அவர்களை 58வது டிவிசன் படையினர் வரவேற்றனர். 9 ஆண்கள்,9பெண்கள், 15 சிறுவர்கள் அடங்கலாக 33பேர் குரவிக்களப்பகுதிக்கு வந்தனர்.அவர்களை 57வது டிவிசன் படையினர் வரவேற்றனர்.மேலும் குப்பியக்குளம் பகுதியை நோக்கி வந்த 33பேர் வந்தனர் அவர்களை இரண்டாவது செயலணி படையினர் வரவேற்றனர்.

சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் அடங்கலாக 53பேர் 58வது டிவிசன் படையினரிடம் நேற்று (பெப்:12) வந்து தஞ்சம் புகுந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *