கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நேற்று அதிகாலை முதல்மாலை வரையில் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலொன்றை மேற்கொண்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கைதாகி பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், 300க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன எனத்தெரிவிக்கப்படுகின்றது.
பத்துக்கும் அதிகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் பிரமுகர்களை இலக்கு வைத்து பாரியதாக்குதல்களை நடத்தும் நோக்கில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குள் ஊடுருவியுள்ளனர் என பாதுகாப்பு தரப்பினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.