தலிபான்கள் தொடர்பில் ரணில்விக்கிரமசிங்க அரசிடம் விடுத்துள்ள வேண்டுகோள் – ஏற்குமா ஆளும்தரப்பு..?

ஆப்கானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது.தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது. காபுலில் உள்ள தூதரகத்தை இலங்கை மூடவேண்டும். ஆப்கானிற்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும். பமியான் புத்தரின் சிலையை அழித்தது தலிபான்களே என்பதை மறந்து விடக்கூடாது. 

அந்த பிராந்தியத்திலிருந்து அகற்றப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்.
ஏற்கனவே உலகம் பெருந்தொற்றின் பிடியில் சிக்குண்டுள்ளது. தற்போது உலகம் இன்னொரு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது.  தலிபான் ஆப்கானை ஆட்சி செய்த காலத்திலேயே செப்டம்பர் 11 தாக்குதலிற்கு காரணமான அல்ஹைதா உட்பட பல ஜிகாத் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டன .

புதிய தலிபான் அரசாங்கத்தின் கீழ் ஆப்கான் மீண்டும் பயங்கரவாதிகளும் ஜிகாத் தீவிரவாதிகளிற்குமான தளமாக மாறக்கூடும்.   உலக நாடுகளின் மீதான தாக்குதலையும் குரானை தவறாக அர்த்தப்படுத்தியவர்களையும் இலங்கை அங்கீகரிக்க முடியாது. இதன் காரணமாக பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளிற்கும் ஏனைய நாடுகளிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது- தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் உரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *