கொரோனா உயிரிழப்புக்கள் போலவே வாகனவிபத்துக்கள் மூலமான உயிரிழப்புக்களும் இலங்கையில் நாளுக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மற்ற நாட்டகளில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியன. ஆனால் ஊரடங்கு அமுலில் உள்ள நாட்களிலும் ஏற்படும் வாகனவிபத்துக்களுக்கான எந்தக்காரணமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ள மோட்டார் சைக்கிள் விபத்தும் இது போன்றதுதான் .
ஏ-9 வீதி, கிளிநொச்சி – இரணைமடு சந்தியில் இடம்பெற்றுள்ள இந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மழை காரணமாக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.