வடமாகாணத்தையும் முழுமையாக மீட்ட பின்னர் முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யத் திட்டம்- அமைச்சர் பந்துல குணவர்தன

பயங்கரவாதிகளிடமிருந்து வட மாகாணத்தை முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் முழு நாட்டையும் உரிய முறையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். அண்மையில் கலேவள நகரில் நடைபெற்று கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது தாய் நாடான இலங்கையில் சில பிரதேசங்களை புலிப்பயங்கரவாதிகள் பல வருடங்களாக ஆக்கிரமித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த வழிகாட்டலில் முப்படையினர் பயங்கரவாதிகளுக்கெதிராக கடுமையாக போராடி அப்பிரதேசங்களை மீட்டுள்ளன. மீட்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட நாடு முழுவதையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்புண்டு.

விவசாய உற்பத்திக்கு தம்புள்ள பிரதேசம் சிறந்ததாக விளங்கி வருகின்றது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் ஊடாக நாடு முழுவதும் விவசாய உற்பத்திப் பொருட்கள் சென்றடைகின்றன. விவசாயிகளுக்கான பல சலுகைகளை இன்றைய அரசு வழங்கியுள்ளது.

விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே குருநாகலிருந்து தம்புள்ள ஊடாக ஹபரணவரைக்குமான ரயில் பாதையொன்றும் அமைக்கப்படவுள்ளது. பெரும்போக நெற்செய்கை இம்முறை கிழக்கு, வடமேல் மாகாணங்களில் கூடிய விளைச்சலைத் தரக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாக அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *