படையினர் அம்பலவான்பொக்கனைப் பகுதியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்

ambalawan-pokkana.jpg
இராணுவத்தின் 58வது படையணியினர் இன்று (பெப்:20) பிற்பகல் அம்பலவான் பொக்கனைப் பகுதியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று காலை எல்ரிரிஈயின் பலமான தளங்களை தகர்த்துக்கொண்டு முன்னேறிய 10வது காலால் படைப்பிரிவினரும் 6வது கெமுனு படைப்பிரிவினரும் இப்பகுதியை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் பயங்கரவாதிகளின் 7 சடலங்களையும் அவர்களின் ரி-56 ரக துப்பாக்கிகளையும் கைபற்றியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினர் புதுக்குடியிருப்பு நகருக்கு வடக்காகவும் தெற்காகவும் தாக்குதல் தொடுத்துக் கொண்டு நகரை நோக்கி முன்னேறி வருகின்றனர் எனவும், அம்பலவானன்பொக்கனைக் கிராமம் சாலைக்களப்பு மேற்கில் களப்பு ஓரத்தில் தனிப்பட்ட கிராமமாகும். இது புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்காக 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *