“விலகுவோர் விலகலாம். யார் விலகிச் சென்றாலும் அரசாங்கம்  கவிழாது.” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது ,

அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல விரும்பினால் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைக்க எங்களுக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. யார் சென்றாலும் அரசாங்கம்  கவிழாது. சிறு கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என்று எதிர்க் கட்சிகள் கனவு காண்கின்றனர். எதிர்க்கட்சிகளில் சிலர் எப்போதும் அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றி அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.

உலகச் சந்தையில் தற்போதைய சூழ்நிலை காரணமாக பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது. கடுமையாகப் பாதிக்கும் இந்தச் சூழ்நிலையை நாமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி அரசாங்கத்தில் இருந்திருந்தால் இலங்கையின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *