பரீட்சைத் திணைக்கள செயற்பாட்டை மேம்படுத்த சிபார்சுகளை வழங்க புத்திஜீவிகள் குழு – கல்வியமைச்சர் நியமிப்பு

srilanka-students.jpgஇலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு அவசியமான சிபார்சுகளை செய்வதற்காக நால்வர் கொண்ட புத்திஜீவிகள் குழுவை கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமித்துள்ளார். கலாநிதி எம். உபாலி சேதர தலைமையிலான இக்குழுவில் பேராசிரியர் டபிள்யூ. ஜீ. குலரத்ன, எம். என். ஜுனைத், பீ.என். அயிலப்பெரும ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

குழுவின் செயலாளராக அயிலப்பெரும செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் மதிப்பீடு செய்துசர்வதேச தரத்துக்கமைய பரீட்சைகள் திணைக்களத்தை மேம்படுத்துதல் தேசிய மதிப்பீட்டுக்கான நவீன தொழில்நுட்பவளங்களை பயன்படுத்துதல் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்பணியை தரம் கொண்டதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களையும் ஆராய்ந்து இக்குழு சிபார்சுகளை வழங்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வருடமொன்றுக்கு 217 விதமான பரீட்சைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாத காலத்திற்குள் மேற்படி குழு அதன் சிபார்சு அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *