ஸ்ரீதுங்க ஜெயசூரியா இந்தியாவின்மீது குற்றச்சாட்டு

srithungajaysurya.jpgஇலங் கையில் புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்று கூறிகொண்டு அப்பாவி தமிழீழமக்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கிறது. இலங்கை ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருகிறது. இந்திய அரசின் இந்த செயலை இலங்கையின் மூத்த அரசியல் வாதியான ஸ்ரீதுங்க ஜெயசூரியா நிறுத்த கோரியுள்ளார்.

புதுதில்லியில் நடந்து வரும் மனித உரிமை தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள இலங்கையின் மூத்த அரசியல்வாதியான ஸ்ரீதுங்க ஜயசூர்யா வந்திருந்தார். அவரிடன் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு அவர் கூறியதாவது :

இலங்கையில் வடக்கில் தஞ்சமடைந்துள்ள சுமார் 2,50,000 மக்கள் மீது இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் கொல்லபட்டு வருகின்றனர். இந்தியாவை ஆண்டு வரும் காங்கிரஸ் அரசு இந்த இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தட்டி கேட்க்காமல் மேலும் மேலும் ஆயுத உதவி செய்து வருகிறது,

தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் தளத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்திய அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்று ஸ்ரீதுங்க ஜயசூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *