“பஷில் ராஜபக்ஷ முன்வைத்தது சோமாலியாவின் வரவு செலவுத்திட்டம்.” – சஜித் பிரோதாச தாக்கு !

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவு திட்டத்தை குறுகியகால நீண்டகால திட்டங்கள் எதுவும் இல்லாத சோமாலிய பாணியிலான வரவுசெலவுதிட்டம் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வர்ணித்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள வரவுசெலவு திட்டம் தொடர்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர்,

இந்த வரவுசெலவுதிட்டம் மக்களை ஏமாற்றியுள்ளது. இந்த ஆவணம் மக்களை வேண்டுமென்றே மறந்துள்ளதுடன் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் விசுவாசிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவு திட்டத்தை குறுகியகால நீண்டகால திட்டங்கள் எதுவும் இல்லாத சோமாலிய பாணியிலான வரவுசெலவுதிட்டம். மக்கள் முன்னேற்றகரமான வரவு செலவுதிட்டத்தை எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர்களிற்கு கிடைத்தது ஒரு வெற்றுப்பொய்.

பொதுமக்கள் ஜனரஞ்சகமான வரவுசெலவுதிட்டத்தை எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர்களிற்கு கிடைத்தது முற்போக்கு தன்மையற்ற வெறுமை. இந்த வரவுசெலவு திட்டம் எந்த கட்டமைப்பும் அற்றது.

வரவுசெலவுதிட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கான நடவடிக்கை எதனையும் இவர்கள் அறிவிக்கவில்லை. வாழ்க்கை செலவு அதிகரிப்பை பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்த அறிவிப்பு எதுவுமில்லை.  பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் எதுவுமில்லை விவசாயிகளின் நிலையை உயர்த்துவதற்கான பொறிமுறை எதனையும் அறிவிக்கவில்லை வருமானத்தை உழைப்பதற்கான திட்டம் எதுவுமில்லை இது சோமாலிய பாணியிலான வரவு செலவுதிட்டம் இதுவாகும்.

இந்த வரவுசெலவுதிட்டம் மக்களை ஏமாற்றியுள்ளது,இந்த ஆவணம் மக்களை வேண்டுமென்றே மறந்துள்ளதுடன் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் விசுவாசிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *