இலங்கை பாராளுமன்றத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வார்த்தை ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய தலைவர் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்யும் பெண்களான மக்கள் பிரதிநிதிகள், அவ்விடத்திலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஒரு சீரழிவை ஏற்படுத்துவதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

…………………………………………………………………………………………………………………………………………………………………………..

உலகின் பல நாட்டு பாராளுமன்றங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையின் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்தளவானதாகவே உள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒரு நாட்டின் சட்ட உருவாக்க பீடத்திலேயே பெண்களுக்கான அங்கீகாரம் கிடைக்காது பெண் அடக்குமுறைகள் தொடருமாயின் சாதாரணமான இடங்களில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லித்தெரிந்து கொள்ளத்தேவையில்லை. இது தொடர்பில் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியமாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *