ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று முதல் புத்த பகவானின் புனித தந்த தரிசனம்

kandy.jpgநாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தியும் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் நிலை பெற வேண்டி கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இன்று (6) மதியம் 1.00 மணி முதல் புத்த பெருமானின் புனித தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் புத்த பெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

மதியம் 1.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பக்தர்கள் இதனை பார்வையிட முடியும் என ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே தெரிவித்தார். இதனை பார்வையிட நாடு முழுவதிலுமிருந்து 10 இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் புனித மாளிகை வளாகத்தையும் நகரத்தையும் அசுத்தப்படுத்தா வண்ணம் சூழல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசேடமாக ஸ்ரீதலதா மாளிகை அமையப் பெற்றுள்ள பகுதிகளிலும் சில குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மதுபான சாலைகள் போன்ற மற்றும் இறைச்சிக் கடைகள் போன்றனவற்றை மூடுவதற்கு ஏலவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீதலதா மாளிகை அருகிலும் அதனை அண்மித்துள்ள பிரதேசங்களிலும் உள்ள அரச காரியாலயங்கள் மற்றும் பெளத்த விகாரைகளில் பெளத்த கொடிகளை பறக்கவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இறைமை, நிரந்தர சமாதானம் ஏற்பட மற்றும் மல்வத்த மகா நாயக்க ஆகியோர்களினது ஆலோசனையின் பேரில் ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் திலங்க தேவ பண்டார இதனை ஏற்பாடு செய்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *