பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் வெகுவாக குறைவடைந்துள்ளதாக பால் நிலைசார் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகரீதியாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆகக் கூடுதலாக தனமல்வில பிரதேசத்தில் காணப்பட்டதோடு, 2007 இல் இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் “மதட்ட தித்த’ செயற்திட்டத்தின் மூலமும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை மட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த வன்முறைகள் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ், பெண்கள் பங்கு கொள்ளும் தேசிய மட்டக் குழுவினால் நடத்தப்பட்ட மிதிப்பீட்டில், பால் நிலைசார் அமைப்புக்கு கடந்த வருடத்தில் வீட்டு வன்முறைகள் தொடர்பாக 103 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
வீட்டு வன்முறை தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளில், மிக மோசமாக இடம்பெற்ற வெவ்வேறு தரத்திலான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2008 ஜனவரி முதலாம் திகதிக்கும் 2008 டிசம்பர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பால் நிலை சார் அமைப்புக்கு மொத்தமாக 328 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனை அடுத்து ஆகக் கூடுதலாக, விவாகரத்து மற்றும் தாபரிப்பு தொடர்பாக 58 முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ளன. மேலும் பாலியல் தொந்தரவுக்குள்ளானமை தொடர்பாக 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, இதே காலப்பகுதியில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பால் நிலைசார் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொலை, மற்றும் காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பாக 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, தொழில்வாய்ப்பு மற்றும் பதவிஉயர்வு தொடர்பாக மேலும் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பாலியல் வல்லுறவு தொடர்பாக 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.