கடன் மறுசீரமைப்பை விரும்புவதில்லை என்றும், ஆனால் தற்போதுள்ள கடன்களை தீர்ப்பதற்கு மற்றுமொரு கடனை வழங்க சீனா தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையைக் கருத்திற்க் கொண்டு, அந்த நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிற்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“ஒரு நாட்டிற்கான கடன் மறுசீரமைப்பை அனுமதிப்பது, பல நாடுகளுக்கு கடன்களை வழங்குவதால், அது ஏனைய நாடுகளை பாதிக்கும் என்பதே சீனாவின் நிலைப்பாடு. எனவே, தற்போதுள்ள கடனை அடைக்க மற்றொரு கடனுக்கு முன்மொழிந்துள்ளனர். இது ஆரம்ப கட்டத்தில் உள்ளது, நிதியமைச்சர் உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் விவாதிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.